முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராஜினாமாக்களை ஏற்க தெலுங்கு தேசம் எம்.எல்.ஏ.க்கள் வலியுறுத்தல்

ஞாயிற்றுக்கிழமை, 17 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

ஐதராபாத், ஜூலை17 - தங்களது ராஜினாமா கடிதங்களை ஏற்றுக்கொள்ளுமாறு தெலுங்கானா பகுதியைச் சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் ஆந்திர சபாநாயகர் நாடெந்தலா மோகனை சந்தித்து வலியுறுத்தியுள்ளனர். ஆந்திராவை இரண்டாக பிரித்து தனி தெலுங்கானா மாநிலம் அமைக்க வேண்டும் என்று கோரி கடந்த 4 ம் தேதி தெலுங்கானா பிராந்தியத்தை சேர்ந்த தெலுங்கு தேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் 30 பேர் தங்களது பதவிகளை ராஜினாமா செய்தனர்.

ஆனால் இவர்களது ராஜினாமாக்களை சட்டமன்ற சபாநாயகர் நாடெந்தலா மோகன் ஏற்றுக்கொள்ளவில்லை.

தனி தெலுங்கானா பிரச்சினை மீண்டும் விசுவரூபம் எடுத்துள்ள நிலையில் ராஜினாமா கடிதங்களை கொடுத்துள்ள தெலுங்கானா பகுதியை சேர்ந்த தெலுங்குதேசம் கட்சி எம்.எல்.ஏ.க்கள் நேற்று ஆந்திர சட்டமன்ற சபாநாயகர் நாடெந்தலா மோகனை சந்தித்து தங்களது ராஜினாமாக்களை ஏற்றுக்கொள்ளுமாறு வலியுறுத்தினர்.

தெலுங்கானா பிராந்திய தெலுங்கு தேசம் கட்சியின் அமைப்பாளர் இ.தயாகர் ராவ் தலைமையில் 30 எம்.எல்.ஏ.க்கள் சபாநாயகரை சந்தித்து இந்த வேண்டுகோளை விடுத்தனர்.

தங்களது வேண்டுகோளை ஏற்காவிட்டால் தனி தெலுங்கானா அமைப்பதற்கான உறுதிமொழியை  மத்திய அரசிடமிருந்து பெற்று தருமாறும் அவர்கள் சபாநாயகரை வலியுறுத்தினர்.

வரையறுக்கப்பட்ட படிவத்தல் தாங்கள் தங்களது  ராஜினாமாக்களை சமர்ப்பித்துள்ளதாகவும் அவற்றை ஏற்றுக்கொள்ள வேண்டும் என்று சபாநாயகரை வலியுறுத்தியதாகவும் ராவ்  செய்தியாளர்களிடம் தெரிவித்தார்.

எந்த முடிவை எடுத்தாலும் அந்த முடிவு முறைப்படிதான் எடுக்கப்படும் என்று சபாநாயகர் மோகன் தெரிவித்தார்.

இது தொடர்பாக லோக்சபை சபாநாயகர் மீரா குமாருடன் ஆலோசனை நடத்த இருப்பதாகவும் சபாநாயகர் மோகன் கூறினார். தெலுங்கான பிரச்சினையில் 14 எம்.பி.க்கள் தங்களது பதவிகளை ராஜினாமா செய்துள்ளதால் அந்த ராஜினாமா கடிதங்களை லோக் சபை சபாநாயகர் எவ்வாறு கையாள்கிறார் என்பது குறித்து தான் கேட்டறிந்து அதன் பிறகு முடிவு எடுக்க இருப்பதாகவும் அவர் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்