முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது: பிரணாப்

திங்கட்கிழமை, 18 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

 

கொல்கத்தா,ஜூலை. -18- பயங்கரவாதிகளால் இந்தியாவை சீர்குலைக்க முடியாது என்று மத்திய நிதியமைச்சர் பிரணாப் முகர்ஜி கூறியுள்ளார். தனது சொந்த மாநிலமான மேற்கு வங்கம் சென்றுள்ள அவர் கொல்கத்தாவில் கூறியதாவது, வெடிகுண்டு தாக்குதலை நிகழ்த்தி இந்தியாவை சீர்குலைத்து விடலாம் என்று பயங்கரவாதிகள் திட்டமிட்டுள்ளனர். ஆனால் அவர்களின் எண்ணம் ஒரு போதும் நிறைவேறாது. அவர்களை முற்றிலுமாக ஒடுக்கும் சக்தி நமக்கு உண்டு. குண்டு வெடிப்பு சம்பவத்தில் உயிரிழந்தோரின் குடும்பத்துக்கு தனது அனுதாபங்களை தெரிவித்துக் கொண்ட பிரணாப், இது போன்ற சம்பவங்கள் பயங்கரவாதத்துக்கு எதிரான நமது உறுதியை அதிகப்படுத்துகிறது. பயங்கரவாதம் முழுமையாக ஒழிக்கப்படும் என்றார். 

மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை சரியான பாதையில் சென்று கொண்டிருக்கிறது என்று கூறிய உள்துறை இணையமைச்சர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், மும்பை குண்டு வெடிப்புகள் தொடர்பாக கேரளத்தில் சில இயக்கங்கள், சில தனி நபர்களின் நடவடிக்கைகள் கண்காணிக்கப்பட்டு வருகின்றன. கேரளத்தில் பயங்கரவாதிகளுடன் தொடர்புடைய இயக்கங்கள் இல்லையென கூறி விட முடியாது. மும்பை குண்டு வெடிப்பு தொடர்பான விசாரணை திருப்திகரமாக உள்ளது என்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்