முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தருமபுரி அரசு சுகாதார நிலையத்தில் அமைச்சர் ஆய்வு

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      தமிழகம்
Image Unavailable

 

தருமபுரி,ஜூலை.23 - தருமபுரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையம் ஆகியவற்றை தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் விஜய் நேற்று திடீர் ஆய்வு மேற்கொண்டார். பாளையம்புதூர் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்திற்கு சென்ற அவர், அங்குள்ள மருத்துவ வசதிகள், மருந்து, மாத்திரைகள் இருப்பு, நோயாளிகளுக்கான மருத்துவ சிகிச்சை குறித்து கேட்டறிந்தார். பின்னர் இந்த மருத்துவமனையில் 30 படுக்கைகளாக மேம்படுத்த நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்தார். 

பின்னர் அவர் இம்மருத்துவமனையில் பிறந்த குழந்தைகளுக்கு பிறப்பு சான்றிதழை பெற்றோர்களிடம் வழங்கினார். இந்த ஆய்வின் போது தருமபுரி மாவட்ட அ.தி.மு.க. செயலாளர் கே.பி.அன்பழகன் எம்.எல்.ஏ. உள்ளிட்ட கட்சி நிர்வாகிகள் மற்றும் அதிகாரிகள் ஆகியோர் உடனிருந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்