முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

எடியூரப்பா பதவி விலக காங்கிரஸ் வலியுறுத்தல்

சனிக்கிழமை, 23 ஜூலை 2011      ஊழல்
Image Unavailable

 

பெங்களூர்,ஜூலை.23 - ஊடகங்களில் வெளியாகி உள்ள லோக் ஆயுக்த அறிக்கையில் முதல்வரின் பெயர் இடம் பெற்றுள்ளதால் எடியூரப்பா பதவி விலக வேண்டும் என்று காங்கிரஸ் வலியுறுத்தி உள்ளது. சட்டவிரோத சுரங்க தொழில் தொடர்பான விசாரணையின் இறுதி அறிக்கையில், முதல்வர் எடியூரப்பா பெயர் இடம் பெற்றுள்ளதோடு சுரங்க உரிமம் அளிப்பதற்கு தனது மகனுக்கு சொந்தமான பிரோணா கல்வி அறக்கட்டளைக்கு முறைகேடாக ரூ. 10 கோடி நன்கொடை பெற்றுள்ளதாகவும் செய்தி வெளியாகி உள்ளது. இது குறித்து கர்நாடக காங்கிரஸ் தலைவர் பரமேஸ்வர் கூறியதாவது, 

மாநிலத்தில் சட்ட விரோத சுரங்க தொழில் நடைபெறுவதாகவும், அதில் முதல்வர் எடியூரப்பா, அவரது அமைச்சரவை சகாக்கள் ஈடுபட்டிருப்பதாகவும் தெரிவித்து வந்தோம். 

சட்ட விரோத சுரங்க தொழிலில் அரசே ஈடுபட்டுள்ளது. ஊடகங்களில் வெளியாகி உள்ள லோக் ஆயுக்த அறிக்கையின் மூலம் பகிரங்கமாகி உள்ளது. இதனால் எடியூரப்பா முதல்வர் பதவியில் நீடிக்க கூடாது. ராஜினாமா செய்வது மட்டுமல்ல, அமைச்சரவையையும் கலைக்க வேண்டும். இது குறித்து மக்கள் முன் சென்று நியாயம் கேட்போம். அரசு கவிழ்வது உறுதி என்று தெரிவித்தார். 

கர்நாடக பா.ஜ.க. தலைவர் கே.எஸ். ஈஸ்வரப்பா கூறும் போது, லோக் ஆயுக்த அறிக்கை கசிந்துள்ளது குறித்து விசாரணைக்கு உள்படுத்த வேண்டும். லோக் ஆயுக்த தனது அறிக்கையை அரசிடம் ஒப்படைத்த பின்னர் அது குறித்து பா.ஜ.க. கருத்து தெரிவிக்கும். அறிக்கை கசிந்திருக்க கூடாது. விசாரணை அமைப்பின் அறிக்கை கசிந்தால் லோக் ஆயுக்த மீது மக்களுக்கு எவ்வாறு நம்பிக்கை ஏற்படும் என்று அவர் கேள்வி எழுப்பினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்