எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஆத்தூர் மார்ச்.3 - தி.மு.க ஆட்சிக்கு சாவு மணி அடிப்போம் வருகின்ற சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க கூட்டணி 234 தொகுதிகளிலும் வெற்றி பெற சபதம் எடுப்போம் என ஆத்தூரில் தி.மு.க அரசை கண்டித்து நடைபெற்ற கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் அமைச்சர் மாநில அ.தி.மு.க அம்மாபேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் ஆவேசமாக பேசினார்.
தி.மு.க அரசை கண்டித்தும் ஊழலில் சிக்கிய தி.மு.க தலைவர் கருணாநிதி அவரது குடும்பத்தினரையும் ஊழல் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய கோரியும் ஏற்காடு, வாழப்பாடி, அயோத்தியாப்பட்டிணம், பெத்தநாயக்கன்பாளையம், பேளூர் பேரூராட்சி ஆகிய ஒன்றியம் மற்றும் பேரூராட்சிகளில் தி.மு.க ஆட்சியில் ஏற்பட்டுள்ள அவலநிலையினை கண்டித்தும் வாழப்பாடி ஒனறியம், சிங்கிபுரம் ஊராட்சியில் இயங்கி வரும் தனியார் சிமெண்ட் ஆலையினால் பொதுமக்களுக்கு ஏற்படும் சீர்கேட்டை கண்டித்தும் மாணவ மாணவிகளுக்கு ஏற்படும் கஷ்டங்கள் குறித்தும் சாலை வசதி, சீர்கேடு, சுகாதாரசீர்கேடு, ஆகியவைகளை கண்டித்தும் மாவட்டத்தின் அனைத்து பகுதிகளிலும் நிலவி வரும் விலைவாசி உயர்வு, சட்ட ஒழுங்கு ,மின்தட்டுப்பாடு, தண்ணீர் தட்டுப்பாடு இவைகளை சீர் செய்யாத தி.மு.க அரசை கண்டித்தம் ஆத்தூர் தாலுக்கா அலுவலகம் முன்பு மாபெரும் கண்டன ஆர்பாட்டம் நடைபெற்றது.
கண்டன ஆர்பாட்டத்திற்கு முன்னாள் அமைச்சரும் மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தலைமை தாங்கி பேசினார்.
ஆத்தூர் நகர கழக செயலாளர் மோகன் வரவேற்றார். சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட கழக செயலாளர் வீரபாண்டி எஸ்.கே.செல்வம், சேலம் புறநகர் கிழக்கு மாவட்ட அம்மாபேரவை செயலாளர் ஆர். இளங்கோவன், தலைமை கழக பேச்சாளர் ஜெயகோவிந்தன் ஆகியோர் முன்னிலை வகித்து கண்டன கோஷங்கள் எழுப்பி பேசினர்.
முன்னாள் அமைச்சர் மாநில புரட்சி தலைவி அம்மா பேரவை செயலாளர் நயினார் நாகேந்திரன் தி.மு.க அரசை கண்டித்து பேசியதாவது
தி.மு.க அரசு செத்துவிட்டது. இனி பாரப்பட்டி சுரேஷ், வீரபாண்டியார் சொல்வது போலீஸ் கேட்ககூடாது. சேலம் மாவட்டத்தில் நேர்மையான காவல்துறை அதிகாரிகள் உள்ளனரா? காவல்துறையினர் வெட்கப்படவேண்டும். காவல்துறையில் பணியாற்றிய ஓய்வு பெற்ற இன்ஸ்பெக்டர் குப்புராஜ் சொத்துக்காக கொலை செய்யப்பட்டுள்ளார்.
13 வயது சிறுமி பச்சிளம்குழந்தை என்ன பாவம் செய்தது 6 பேரை குடும்பத்தோடு வெட்டி சாய்த்து விட்டனர். 6 பேரை கொலை செய்தவருக்கு தி.மு.க அரசு ஆதரவு காவல்துறை ஆதரவு, உயர் பதவியில் உள்ள காவல் காவல்துறை அதிகாரிகள் ஆதரவு கொடுத்துள்ளனர்.
6 பேரை கொலை செய்த் குற்றவாளி மாவட்ட ஊராட்சி குழு துணை தலைவர் பாரப்பட்டி சுரேஷ் குமாரை மத்திய சிறைச்சாலையில் அடைக்கப்பட்டிருந்தபோது மாநில வேளாண்மை துஹை அமைச்சர் வீரபாண்டியார் மத்திய சிறைச்சாலைக்கு நேரில் சென்று விசாரித்துவிட்டு வருகிறார். இது என்ன நியாயம்?
சேலம் மாவட்டத்தில் 11 தொகுதி வாக்காளர்களுக்கும் தட்டி கேட்கும் கடமை தைரியம், ஜனநாயக உரிமை அ.தி.மு.க கட்சி தொண்டனுக்கு மட்டுமே உண்டு வேறு எந்த கட்சி தொண்டனுக்கும் இந்த தைரியம் கிடையாது.
என்னை உட்பட நானே சிறுதவறு செய்தாலும் பதிவியில் நிடிக்க முடியாது. அம்மா நடவடிககை எடுத்து விடுவார். கட்டுப்பாடான கட்சி அ.தி.மு.க கட்சி ஒரு பானை சோறுக்கு ஒரு சோறு பதம், ஆறுபேர் படுகொலை செய்யப்பட்டதே அந்த கட்சி மீண்டும் ஆட்சிக்கு வந்தால் வீரபாண்டியார் அமைச்சர் ஆனால் சேலம் மாவட்டத்தில் இன்னும் எத்தனை பேர் படுகொலை செய்யப்படுவார்கள் என்பது தெரியாது,
தி.மு.க. ஆட்சியில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது சட்ட ஒழுங்கு பலசரக்கு கடையில் 10 ரூபாய்க்கு கேட்டவேண்டிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.
ஏற்காடு ஒன்றியத்தில் தாழ்த்தப்பட்ட மலைவாழ் மக்களுக்கு சாதிசான்றிதழ் வழங்கப்படவில்லை. பள்ளி மாணவ மாணவியருக்கு சாதிசான்றிதழ் கிடைக்காமல் உயர் கல்வி பெற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடக்கின்றனர்.
ஏற்காடு ஆத்தூர், வாழப்பாடி, கெங்கவல்லி ஆகிய பகுதியில் உள்ள தாலூக்கா அலுவலகங்களில் பணிபுரியும் அதிகாரிகள் சாதி சான்றிதழ் வழங்காமல் மலைவாழ் மக்களை தாழ்த்தப்பட்ட மக்களை புறக்கணிப்பது ஏன்? தாலுக்கா ஆபிஸ்கள் செயல்படுகிறதா? இல்லையா?
ஆத்தூருக்கு துணை முதல்வர் ஸ்டாலின் வந்தபோது சேலத்தில் ஆஸ்பத்திரியில் இருந்து வீரபாண்டியாரை சந்தித்தார். அப்போது சேலத்திற்கு நேர் வழியில் வராமல் ராசிபுரம் வழியாக சேலம் சென்று பார்த்தார். சாலை சீர்கேட்டால் மிகவும் மோசமாக இருந்ததால் அவர் வேறுவழியாக சேலம் சென்று பார்த்தார். சாலை மோசமாக இருப்பதால் பல்வேறு விபத்து ஏற்பட்டு வருகிறது. தினம் தோறும் பல விபத்து, உயிர்பலி என் விபத்தில்லாத நாளே இல்லை
தி.மு.க அரசு மக்களை பற்றி சிந்திப்பது கிடையாது இலவசம் கொடுத்து மக்களை ஏமாற்ற பார்க்கிறார்கள். மக்கள் ஏமாறமாட்டார்கள் வரும் சட்டமன்ற தேர்தலில் தகுந்த பாடம் கற்பிப்பார்கள் தேர்தல் தேதி அறிவித்து விட்டதால் இனி இலவசம் அறிவிக்க முடியாது தமிழக்ததில் ஆளும் கட்சியினரின் அத்து மீறல்கள், குண்டர்கள் தாக்குதல் அதிகரிதது விட்டன மக்கள் நிம்மதியாக வாழ் முடியவில்லை மக்கள் நிம்மதியாக வாழ அ.தி.மு.க கட்சிக்கும் அ.தி.மு.க கூட்டணி கட்சிக்கும் வாக்களிக்கவேண்டும்.
கருணாநிதி தமிழக மக்களுக்கு பதில் சொல்லியே ஆகவேண்டும் 234 தொகுதிகளிலும் அ.தி.மு.க கூட்டணி வெற்றி பெறுவது உறுதி மக்கள் தாயராக இருக்கிறார்கள்.
இலங்கையில் தமிழினம் அழிந்து வருகிறது. அங்கு எத்தனை தமிழ் பெண்கள் கற்புடன் வாழ்ந்து வருகிறார்கள் என தெரியவில்லை தமிழனை காப்பாற்ற நாதியற்ற தி.மு.க அரசு. எல்லோரும் மண்ணுக்குள்ளே தங்கத்தை தேடுவோம் நாம் புரச்சி தலைவியை பொன்மனச்செம்மலை நமது தங்கத்தை மண்ணில் புதைத்து வைத்துள்ளோம் எப்போதும் தோற்கின்ற கட்சி அ.தி.மு.க கட்சி அல்ல எப்போதாவது தோற்கின்ற கட்சிதான் அ.தி.மு.க கட்சி மக்கள் எங்கள் பக்கம், இனி அதிகாரிகள் காவல்துறையினர் எங்கள் பக்கம் வருவீர்கள். தி.மு.க கட்சி போல் கொள்ளை அடிக்கும் கட்சி அல்ல அ.தி.மு.க கட்சி மக்களுக்கு உதவும் கட்சி ஆகும். தேர்தல் நேரத்தில் nullத்தில் உள்ள அதிகாரிகள் காவல்துறை அதிகாரிகள் நேர்மையுடன் பணியாற்ற வேண்டும் என அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.
கண்டன ஆர்பாட்டத்தில் முன்னாள் எம்.எல்.ஏ க்கள் மஞ்சினி முருகேசன், அழகம்மாள், பெருமாள், இளையகண்ணு, மாவட்ட அவைத்தலைவர் அம்மாசி, மாவட்ட பொருளாளர் ராமசாமி, மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தராஜூ, தேவகிபாலசந்தர், தலைவாசல் முன்னார் சேர்மன் இளங்கோவன், தங்கமணி, மகேந்திரன், மாவட்ட இளைஞர் இளம்பெண்கள் பாசறை செயலாளர் ஆனந்தபாபு, மாவட்டபேரவை அவைத்தலைவர் குபேந்திரன், மாவட்ட மாணவர் அணி செயலாளர் தமிழ்மணி, எம்.ஜி.ஆர் மன்ற இணை செயலாளர் அர்சுணன், எம்.ஜி.ஆர் மன்ற தலைவர் முல்லைவாடி ராமர், மாவட்ட விவசாய பிரிவு இணை செயலாளர் பெரியசாமி, மெடிக்கல் ராஜசேகர், மாவட்ட மகளிரணி செயலாளர் பொன்னம்மாள், மகளிரணி இணை செயலாளர் சித்தேரி செல்லம்மாள், இலக்கிய அணி இணை செயலளர் ராமசந்திரன், ஆத்தூர் தொகுதி கழக செயலாளர் ஜெய்சங்கர், இணை செயலாளர்கள் ராமகிருஷ்ணன், ஏத்தாப்nullர் குமார், கெங்கவல்லி பகுதி கழக இணை செயலாளர் முருகன், மாவட்ட பிரதிநிதி மதியழகன், வழக்கறிஞர் பிரிவு செயலாளர் சிவராஜன், வக்கீல் கிருஷ்ணமூர்த்தி, ஒன்றிய செயலாளர்கள் ராமசாமி, ராஜா, முருகேசன், ரமேஷ், சதீஷ், மணி, வையாபுரி, பேரூர் கழக செயலாளர்கள் மணிவண்ணன், சிவகுமார், செல்வம், மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் nullண்டு சுப்பிரமணி, மாவட்ட எம்.ஜி.ஆர் மன்ற நிர்வாகி கல்லாநத்தம் மாதேஸ்வரன், தலைவாசல் ஒன்றிய இல்ககிய அணி செயலாளர் வக்கீல் மாரிமுத்து, தலைவாசல் ஒன்றிய மாணவரணி செயலாளர் வக்கீல் வேல்முருகன், நகர துணை செயலாளர்கள் ராஜேந்திரகுமார், ஆனந்தன், லட்சுமணன், சொக்கலிங்கம், சித்தேரி பரமசிவம், தேவியாக்குறிச்சி சுந்தரம், மற்றும் பலர் கலந்துகொண்டனர். முடிவில் ஆத்தூர் ஒன்றி செயலாளர் ரஞ்சித்குமார் நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.