எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஜூலை.23 - டீசல், பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என்று அ.தி.மு.க. அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி தீர்மானம் நிறைவேற்றியுள்ளது.
ஜெயலலிதா ஆணைக்களுக்கிணங்க அ.தி.மு.க. தலைமை அலுவலகத்தில் நேற்று மாலை 3.00 மணியளவில் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் ஆலோசனைக் கூட்டம் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் மாநில அவைத்தலைவர் ஆர்.வி.சிவா தலைமையிலும், கழக அமைப்பு செயலாளர் சி.பொன்னையன், விசாலாட்சி நெடுஞ்செழியன், ஈ.வி.கே.சுலோச்சனா சம்பத், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற செயலாளர் தமிழ்மகன் உசேன், எம்.ஜி.ஆர். இளைஞரணி செயலாளர் ஆதிராஜாராம், அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி செயலாளர் ஆர்.கமலக்கண்ணன் ஆகியவர்கள் முன்னிலையிலும் நடைபெற்றது.
கீழ்க்காணும் தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
குடும்ப அரசியல், ஊழல், பொய் பிரச்சாரம், தேர்தலில் தில்லு முல்லு, பணபலம் ஆகியவற்றை நம்பியிருந்த மைனாரிட்டி முன்னாள் முதல்வர் கருணாநிதியையும், தி.மு.க.வையும் தமிழக சட்டப்பேரவையில் எதிர்கட்சி அந்தஸ்து கூட இல்லாத வகையில் விரட்டி அடித்த வீராங்கனை சிங்க நிகர் தலைவி, கழக நிரந்தர பொது செயலாளர் ஜெயலலிதா தமிழகத்தில் மூன்றாவது முறையாக முதல்வராக பதவியேற்றதற்கு கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியின் சார்பில் வாழ்த்த வயதில்லை. தங்கள் பொற்பாதங்களை பணிந்து வணங்குகிறோம்.
ஜெயலலிதா தமிழக முதல்வராக 3-வது முறையாக அறுதி பெரும்பான்மையுடன் தேர்ந்தெடுத்த தமிழக வாக்காள பெருமக்களுக்கும் தமிழக முதல்வராக வேண்டும் என்ற ஒரே நோக்கத்தோடு கடுமையாக உழைத்த கழக நிர்வாகிகளுக்கும் தொண்டர்களுக்கும் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் வாழ்த்துக்களையும் நன்றியையும் தெரிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டு.
மத்திய அரசு, கடந்த ஜனவரி முதல் ஜூலை மாதம் வரை 6 மாதத்தில் பலமுறை பெட்ரோலுக்கும் டீசலுக்கும் விலையை உயர்த்தி ஏழை மற்றும் நடுத்தர மக்களின் வாழ்வாதாரத்தை பாதிக்கும் வகையிலும், பெட்ரோல் டீசல் விலை உயர்வின் பலனாக தினந்தோறும் பயன்படுத்தும் அத்தியாவசிய பொருட்களின் விலைவாசி உயர்வுக்கு வழிவகுத்த மத்திய அரசை வன்மையாக கண்டிப்பதுடன், இந்த டீசல் பெட்ரோல் விலை உயர்வை மத்திய அரசு உடனடியாக திரும்ப பெற வேண்டும் என்று கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி வலியுறுத்தி கேட்டுக் கொண்டு தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
மத்திய அரசு தனியார் காப்பீட்டு நிறுவனங்களின் வளர்ச்சியை மட்டுமே கருத்தில் கொண்டு எந்தவிதமான முன் அறிவிப்பும் இன்றி வாகனங்களுக்கான காப்பீட்டுத் தொகையை 30 சதவிகிதம் முதல் 100 சதவிகிதம் வரை உயர்த்தியமைக்கும் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் கடுமையான கண்டனத்தை மத்திய அரசுக்கு தெரிவித்துக் கொள்கின்றோம். மத்திய அரசு இந்த காப்பீட்டுத் தொகையை உடனடியாக குறைக்கவில்லை என்றால் அ.தி.மு.க பொது செயலாளர் ஜெயலலிதா அனுமதி பெற்று மாநிலம் தழுவிய ஓர் கண்டன ஆர்ப்பாட்டத்தை நடத்த தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில் 1.8.11 முதல் 30.9.11 வரை 2 மாதங்களுக்கு தீவிர உறுப்பினர்கள் சேர்ப்பு முகாம்களை மாவட்டம் தோறும் நடத்தி ஒரு மாவட்டத்திற்கு குறைந்தபட்சமாக 10 ஆயிரம் அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் உறுப்பினர்களாக கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணியிலும், கழகத்திலும் சேர்ப்பது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
தற்போது தமிழகத்தில் அதிகரித்து வரும் சாலை விபத்துக்களை தடுப்பது குறித்த விழிப்புணர்வையும் சாலை விதிகளையும் ஓட்டுநர்களும் பொதுமக்களும் எப்படி கடைபிடிக்க வேண்டும் என்பதை கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி சார்பில், பேருந்து நிலையங்களிலும் பொதுமக்கள் கூடும் இடங்களிலும் நேரில் சென்று ஓட்டுநர்களுக்கும் பொது மக்களுக்கு துண்டுபிரசாரம் மூலம் எடுத்துக் கூறி பிரச்சாரம் செய்வது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
விரைவில் நடைபெறவுள்ள உள்ளாட்சி தேர்தலில் கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாகிகளும் தொண்டர்களும், நடைபெற்ற சட்டமன்றத் தேர்தலில் இரவு பகல் பாராமல் ஜெயலலிதாவின் கரத்தை வலுப்படுத்துவதற்கும் கழக வேற்பாளர்கள் வெற்றி பெறுவதற்கும் எவ்வாறு பாடுபட்டார்களோ, அதே வகையில் உள்ளாட்சி தேர்தலிலும் தன்னலம் கருதாது கழக அமைப்புச்சாரா ஓட்டுநர்கள் அணி நிர்வாககளும் தொண்டர்களும் கழக வேட்பாளர்களும் கூட்டணி கட்சி வேட்பாலர்களும் வெற்றி பெற பாடுபடவேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 6 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 6 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
சமாஜ்வாடி கட்சி தலைவர் அகிலேஷ் வேட்புமனு தாக்கல்
25 Apr 2024லக்னோ, சமாஜ்வாடி கட்சி சார்பில் உத்தரபிரதேச மாநிலம் கண்ணூஜ் தொகுதியில் போட்டியிடும் அக்கட்சியின் தலைவர் அகிலேஷ் யாதவ் நேற்று தனது வேட்புமனுவை தாக்கல் செய்தார்.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.