முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் தென்கொரியாவில் சுற்றுப் பயணம்

ஞாயிற்றுக்கிழமை, 24 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஜூலை. - 24  -  இந்திய ஜனாதிபதி பிரதிபா பாட்டீல் ஒரு வார கால பயணமாக இன் று தென்கொரியா மற்றும் மங்கோலியா நாடுகளுக்கு செல்கிறார். இது பற்றிய விபரம் வருமாறு -  இன்று தொடங்கி 26 -ம் தேதி வரை 3 நாட்கள் தென்கொரியாவில் சுற் றுப் பயணம் மேற்கொள்கிறார். அங்கு பல நிகழ்ச்சிகளில் பிரதிபா பாட்டீல் பங்கேற்கிறார்.  அணுசக்தி ஒப்பந்தம் குறித்து அந்நாட்டு அதிபருடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். தென்கொரிய சுற்றுப் பயணத்தை முடித்துக் கொண்டு அங்கிருந்து மங்கோலியா செல்கிறார்.
வரும் 27 -ம் தேதி முதல் 30 -ம் தேதி வரை மங்கோலியாவில் தங்கியி ருந்து அந்நாட்டு தலைவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துகிறார். பின் பல்வேறு நிகழ்ச்சிகளில் பங்கேற்கிறார்.
தென் கொரிய அதிபர் லீ மியூங் பாக் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் இந்தியா வந்தார். இந்திய குடியரசு தின விழாவில் தலைமை விருந்தின ராக கலந்து கொண்டார்.
அப்போது பிரதிபா பாட்டீலை, தென்கொரியா வருமாறு அழைப்பு விடுத்தார். அவரது அழைப்பை ஏற்று பிரதிபா தற்போது தென் கொ ரியா செல்வது குறிப்பிடத்தக்கது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்