எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.29 - லஞ்சம்,ஊழலை ஒழிக்க வகை செய்யும் லோக்பால் வரைவு மசோதாவுக்கு மத்திய கேபினட் அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. ஆனால் இந்த மசோதாவின் வரம்புக்குள் பிரதமர் கொண்டுவரப்படவில்லை. நாட்டில் லஞ்ச ஊழல் தலைவரித்தாடுகிறது. இதை ஒழிக்க லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் கொண்டு வந்து நிறைவேற்ற வேண்டும் என்று பிரபல சமூக சேவகரும் காந்தீயவாதியுமான அண்ணா ஹசரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியில் சாகும்வரை உண்ணாவிரதத்தை தொடங்கினார். இதனையொட்டி நடந்த பேச்சுவார்த்தையில் வருகின்ற பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் லோக்பால் மசோதாவை நிறைவேற்ற மத்திய அரசு சம்மதித்தது. லோக்பால் மசோதாவுக்கான வரைவு மசோதாவை தயாரிக்க மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி தலைமையில் 10 பேர் கொண்ட கமிட்டி அமைக்கப்பட்டது. இந்த கமிட்டியில் அரசு பிரதிநிதிகள் 5 பேரும் சிவில் உறுப்பினர்கள் 5 பேரும் உறுப்பினர்களாக நியமிக்கப்பட்டனர். அரசு பிரதிநிதிகள் தனியாகவும் சிவில் பிரதிநிதிகள் தனியாகவும் லோக்பால் வரைவு மசோதாவை தயாரித்து உள்ளனர். லோக்பால் மசோதாவில் பிரதமரையும் உட்படுத்த வேண்டும் என்று அண்ணாஹசரே வற்புறுத்தி வருகிறார். இதற்கு அரசு பிரதிநிதிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். தனது கருத்துக்கு ஆதரவு அளிக்கும்படி பாரதிய ஜனதா உள்பட பல முக்கிய கட்சி தலைவர்களை அண்ணா ஹசரே சந்தித்து கேட்டுக்கொண்டார். இது தொடர்பாக பிரதமர் மன்மோகன் சிங் மற்றும் சோனியா காந்தி ஆகியோர்களையும் ஹசரே சந்தித்து பேசினார்.
இந்தநிலையில் மத்திய கேபினட் அமைச்சரவை கூட்டம் நேற்று டெல்லியில் நடைபெற்றது. பிரதமர் மன்மோகன் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் அரசு தரப்பில் தயாரிக்கப்பட்ட லோக்பால் வரைவு மசோதாவுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதில் பிரதமர் மற்றும் நீதிபதிகள் உட்படுத்தப்படவில்லை. கூட்டம் சுமார் 2 மணி நேரம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமைச்சர் அம்பிகா சோனி, லோக்பால் மசோதா பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பின்னர், தலைவர் மற்றும் 8 பேர் கொண்ட லோக்பால் அமைப்பு அமைக்கப்படும். இந்த அமைப்புக்கு பதவியில் இருக்கும் சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியோ அல்லது ஓய்வு பெற்ற சுப்ரீம்கோர்ட்டு நீதிபதியோ தலைவராக இருப்பார் என்றார். மேலும் 8 உறுப்பினர்கள் இருப்பார்கள். லோக்பால் அமைப்பில் 50 சதவீதம் பேர் நீதித்துறையை சேர்ந்தவர்களாக இருப்பார்கள். ஒருவர் மீது ஊழல் குற்றச்சாட்டை அந்த சம்பவம் நடந்து 7 ஆண்டுகளுக்கு பிறகு கொடுத்தால் அதை லோக்பால் அமைப்பு ஏற்றுக்கொள்ளாது. விசாரிக்கவும் செய்யாது. உயரதிகாரிகளுக்கும் லோக்பால் வரையறையில் இருந்து விலக்கு அளிக்கப்படும். பிரதமர் மீது ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டால் அவர் பதவி விலகிய பின்னரே விசாரிக்க முடியும். அனைத்து மாநிலங்களிலும் லோக்பால் மசோதாவை தாக்கல் செய்யும்படி பிரதமர் மன்மோகன் சிங் கடிதம் எழுதுவார். லோக்பாலில் திருத்தம் செய்யப்பட்டால் அதை பாராளுமன்றமே செய்யும். லோக்பால் மசோதா திட்டமிட்டபடி வரும் பாராளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் தாக்கல் செய்யப்படும் என்றும் சோனி மேலும் கூறினார்.
பிரதமர் அலுவலக இணை அமைச்சர் நாராயணசாமியும் இதுகுறித்து நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில் லோக்பால் மசோதா வரம்புக்குள் வர பிரதமர் மன்மோகன் சிங் விருப்பம் தெரிவித்தார். ஆனால் இதுபற்றி கூட்டத்தில் விரிவான முறையில் விவாதிக்கப்பட்டது. விவாதத்தின் இறுதியில் பிரதமரை இந்த மசோதாவின் வரம்புக்குள் கொண்டுவருவதில்லை என்று முடிவு செய்யப்பட்டது. நீதிபதிகளும் லோக்பால் மசோதாவுக்குள் கொண்டுவரப்படவில்லை என்றார். அதேசமயத்தில் பிரதமரும்,நீதிபதிகளும் பதவி விலகிய பின்னர் லோக்பால் மசோதா வரம்புக்குள் வருவார்கள். முன்னாள் பிரதமர்களும் லோக்பால் வரம்புக்குள் வருவார்கள் என்றும் நாராயாணசாமி மேலும் கூறினார்.
இதற்கிடையில் லோக்பால் வரைவு மசோதாவுக்கு அண்ணா ஹசரே சிபாரிசு செய்திருந்த அனைத்து பரிந்துரைகளும் கேபினட் கூட்டத்தில் நிராகரிக்கப்பட்டுவிட்டது. அதனால் அரசின் லோக்பால் வரைவு மசோதாவை சிவில் கமிட்டி உறுப்பினர்கள் நிராகரித்துவிட்டனர். அரசு சார்பாக தயாரிக்கப்பட்டுள்ள லோக்பால் வரைவு மசோதா ஊழலை ஒழிக்க உதவாது என்று சிவில் கமிட்டி கருத்து தெரிவித்துள்ளது. அரசு தயாரித்துள்ள வரைவு மசோதாவானது உதவாக்கரையானது. இது ஊழலை ஒழிக்க வேண்டும் என்ற மக்களின் ஆசையை பூர்த்தி செய்யாது என்று சிவில் கமிட்டியில் உறுப்பினராக உள்ள கிரண் பேடி கூறினார். இதனால் வருகின்ற ஆகஸ்ட் 16-ம் தேதி அண்ணா ஹசரே மீண்டும் ஜந்தர் மந்தரில் உண்ணாவிரதம் இருக்கப்போவது உறுதி.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 52 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 23 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
காந்திநகரில் அமித்ஷா வேட்புமனு தாக்கல்
19 Apr 2024காந்திநகர், குஜராத் மாநிலத்தில் உள்ள 26 தொகுதிகளுக்கும் 3-வது கட்டமாக மே 7-ம் தேதி தேர்தல் நடைபெற உள்ளது. இதற்கான வேட்புமனு தாக்கல் கடந்த 12-ம் தேதி தொடங்கியது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாகிஸ்தானில் ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலை படை தாக்குதல்
19 Apr 2024இஸ்லாமாபாத், பாகிஸ்தானின் கராச்சியில் நேற்று ஜப்பானியர்கள் சென்ற வாகனம் மீது தற்கொலைப் படைத் தாக்குதல் நடத்தப்பட்டது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
வாக்குப்பதிவு எந்திரத்தில் கோளாறு: தர்ணாவில் ஈடுபட்ட மத்திய சென்னை நாம் தமிழர் கட்சி வேட்பாளர் கைது
19 Apr 2024சென்னை, மத்திய சென்னை தொகுதிக்குட்பட்ட 165-வது பூத்தில், நாம் தமிழர் கட்சி சின்னத்துக்கு வாக்களித்தால், வாக்குப்பதிவு இயந்திரத்தில் விளக்கு எரியவில்லை எனக் கூறி தர்ணா ப