எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி,ஜூலை.- 24 - சுரங்க ஊழலில் சிக்கியுள்ள கர்நாடக முதல்வர் எடியூரப்பாவால் பாரதிய ஜனதாவுக்கு தலைவலி மேலும் அதிகரித்துள்ளது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுக்கும்படி கட்சி மேலிடத்துக்கு நெருக்கடி அதிகரித்துக்கொண்டே இருக்கிறது. தென் இந்தியாவில் பாரதிய ஜனதா காலூன்றுவதற்கு முக்கிய பங்கு வகித்தவர் முதல்வர் எடியூரப்பா. தென் இந்தியாவில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் பாரதிய ஜனதா ஆட்சியில் உள்ளது. ஆனால் அவர் முதல்வர் பதவி ஏற்றதில் இருந்து ஏதாவது ஒரு பிரச்சினையில் சிக்கி கட்சி மேலிடத்திற்கு பெரும் சிக்கலையும் தலைவலியையும் ஏற்படுத்தி வருகிறார். முதலில் கர்நாடக மாநிலத்தில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கை பார்வையிட பிரதமருடன் சென்றபோது அந்த பகுதியை சேர்ந்த அமைச்சர்களை அழைத்து செல்லாமல் ஒரு பெண் அமைச்சரை உடன் அழைத்து சென்றார். இதனால் முதல்வர் எடியூரப்பாவுக்கு எதிராக அவரது அமைச்சரவையில் உள்ள ரெட்டி சகோதர்கள் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். எடியூரப்பா பதவிக்கு ஆபத்து ஏற்பட்டது. கடைசியில் கட்சி மேலிடம் தலையிட்டு சமாதானம் செய்தது. இதில் முதல் தடவையாக எடியூரப்பாவின் முதல்வர் பதவி தப்பியது. அதனை அடுத்து பாரதிய ஜனதா மற்றும் சுயேட்சை எம்.எல்.ஏ.க்கள் 24 பேர் எடியூரப்பாவுக்கு எதிராக கிளம்பினர். இதனால் அவர் மெஜாரிட்டி எடியூரப்பா மெஜாரிட்டி பலத்தை இழந்தார். சட்டசபையில் நடைபெற்ற நம்பிக்கை ஓட்டெடுப்பில் அந்த 24 எம்.எல்.ஏ.க்களும் கலந்து கொள்ளாததால் எடியூரப்பா பதவி இரண்டாவது தடவையாக தப்பியது. அடுத்து பெங்களூர் மற்றும் பல இடங்களில் தனது உறவினர்களுக்கு நிலம் ஒதுக்கீடு செய்ததாக எடியூரப்பா மீது குற்றச்சாட்டு எழுந்தது. இது தொடர்பாக வழக்கு தொடர கவர்னர் பரத்வாஜ் அனுமதி அளித்தார். மேலும் கர்நாடக மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்றும் எடியூரப்பா அரசை நீக்கிவிட்டு ஜனாதிபதி ஆட்சியை அமுல்படுத்த மத்திய அரசுக்கு கவர்னர் அறிக்கை அனுப்பினார். பாரதிய ஜனதா கட்சியின் மேலிட தலைவர்கள் ஜனாதிபதியை சந்தித்து முறையிட்டதால் எடியூரப்பாவின் பதவி 3-வது முறையாக தப்பியது. தற்போது எடியூரப்பா மீது சுரங்க ஊழல் குற்றச்சாட்டு கூறப்பட்டுள்ளது. கர்நாடக மாநிலத்தில் நடைபெற்று வரும் சட்டவிரோத சுரங்க ஊழல் குறித்து விசாரணை நடத்த நீதிபதி சந்தோஷ் ஹெக்டே தலைமையில் லோக் ஆயுக்தா அமைக்கப்பட்டது. இது விசாரித்து அறிக்கை தயார் செய்துள்ளது. இந்த அறிக்கை தாக்கல் செய்யப்படுவதற்கு முன்பு கசிந்து விட்டது. அதில் சட்ட விரோத சுரங்க நிறுவனங்களில் இருந்து எடியூரப்பா லஞ்சம் பெற்றதாக அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் எடியூரப்பாவின் பதவிக்கு நெடுங்கண்டம் ஏற்பட்டுள்ளது. முதல்வர் எடியூரப்பாவை முதல்வர் பதவியில் இருந்து நீக்க வேண்டும் கட்சி மேலிடத்திற்கு அந்த கட்சி தலைவர்களே கோரிக்கை விடுத்து வருகின்றனர். எடியூரப்பாவுக்கு கருணை காட்ட வேண்டாம் என்றும் அவர்கள் கோரி வருகிறார்கள். அறிக்கை வெளியாகட்டும். அறிக்கையை பார்த்த பின்னர் நடவடிக்கை பற்றி ஆய்வு செய்யப்படும் என்று கட்சி மேலிடம் கூறினாலும் எடியூரப்பாவுக்கு எதிராக தலைவர்களுக்கு நம்பிக்கை ஏற்படவில்லை. இதனால் பாரதிய ஜனதாவுக்கு பெரும் தலைவலி ஏற்பட்டுள்ளது. மேலும் எடியூரப்பாவால் தார்மீக அடிப்படையிலும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. மத்திய அளவில் ஊழலுக்கு எதிராக பாரதிய ஜனதா போராடி வருகிறது. ஆதர்ஷ் சொசைட்டி ஊழல், 2ஜி ஸ்பெக்டரம் முறைகேடு, லஞ்சம் மற்றும் கறுப்பு பணம் ஒழிப்பு ஆகிய பிரச்சினைகளில் மத்திய அரசுக்கு எதிராக பாரதிய ஜனதா குரல் கொடுத்துக்கொண்டியிருக்கிற நேரத்தில் எடியூரப்பா மீது லோக் ஆயுக்தா குற்றச்சாட்டு சுமத்தியிருப்பது கட்சிக்கு பெரும் சங்கடத்தை ஏற்படுத்தி இருப்பதோடு காங்கிரஸ் கட்சியின் கையில் ஒரு ஆயுதம் கிடைக்க செய்துவிட்டது. இதையெல்லாம் கருத்தில் கொண்டுள்ள பாரதிய ஜனதா லோக்ஆயுக்தா அறிக்கை வெளியாகட்டும் அதை நன்கு ஆய்வு செய்த பின்னர் நடவடிக்கை எடுப்பது குறித்து பரிசீலிக்க முடிவு செய்திருப்பதாக தெரிகிறது. எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பதற்கு முன்பு கர்நாடக மாநிலத்தில் அவருக்குள்ள செல்வாக்கு குறித்தும் கட்சி கருத்தில் கொண்டுள்ளதாக தெரிகிறது. கட்சி எம்.எல்.ஏ.க்களில் எடியூரப்பாவுக்கு பெரும்பான்மை ஆதரவு இருப்பதோடு கர்நாடக மாநிலத்தில் உள்ள லிங்காயத் பிரிவு மக்களிடையே பெரும் ஆதரவு இருக்கிறது. எடியூரப்பாவை நீக்கிவிட்டு அவருக்கு பதிலாக முன்னாள் அமைச்சர் ஆனந்த குமாரை முதல்வராக்கலாம் என்ற பேச்சும் அடிபட்டு வருகிறது. இதற்கு எடியூரப்பா சம்மதிக்காவிட்டால் கர்நாடகத்தில் கட்சியின் வளர்ச்சி பாதிக்கும். அதனால் அரசை கலைத்துவிட்டு இடைத்தேர்தலுக்கு உத்தரவிடுவது குறித்தும் பரிசீலித்து வருவதாகவும் தெரிகிறது. மேலும் லோக்ஆயுக்தா அறிக்கையில் கர்நாடக மாநில முன்னாள் முதல்வர் குமாரசாமி மற்றும் காங்கிரஸ் எம்.பி. ஒருவர் மீதும் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இந்த குற்றச்சாட்டு எத்தகைய தன்மையுடையது என்பதையும் ஆராய்ந்த பின்னரே எடியூரப்பா மீது நடவடிக்கை எடுப்பது குறித்து இறுதி செய்யப்படும் என்று தெரிகிறது. இதற்கிடையில் எடியூரப்பாவை டெல்லி வரும்படி பா.ஜ. மேலிடம் அழைப்பு விடுத்துள்ளது. அவர் நாளை டெல்லி சென்று கட்சி மேலிட தலைவர்களை சந்தித்து தன் மீது அறிக்கையில் கூறப்பட்டுள்ள குற்றச்சாட்டு குறித்து விளக்கம் அளிக்கலாம் என்று தெரிகிறது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி49 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி3 days 23 hours ago |
ரவா பர்பி1 week 1 hour ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 17-04-2024.
17 Apr 2024 -
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
ஐக்கிய அரபில் பெய்த கனமழை: வெள்ள நீரில் மிதந்த துபாய் சர்வதேச விமான நிலையம்
17 Apr 2024துபாய் : ஐக்கிய அரபு அமீரகம் முழுவதும் பெய்த கனமழையை தொடர்ந்து ஏற்பட்ட வெள்ளநீரில் துபாய் சர்வதேச விமான நிலையம் மிதந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவை டிக்கெட் இன்று வெளியீடு
17 Apr 2024திருமலை : திருப்பதி ஏழுமலையான் கோவிலில் ஆர்ஜித சேவைக்கான டிக்கெட்டுகள் இன்று (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு ஆன்லைனில் வெளியிடுகிறது.
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
காங்கிரஸ் கட்சிக்கு எதிராக கருத்து: சந்திரசேகர ராவ் விளக்கமளிக்க தேர்தல் ஆணையம் நோட்டீஸ்
17 Apr 2024புதுடெல்லி : காங்கிரஸ் கட்சிக்கு எதிராக சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்ததாக வந்த புகாரையடுத்து சந்திரசேகரராவ் இன்று தனது நிலைப்பாட்டை விளக்குமாறு தேர்தல் ஆணையம்
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
சிறையில் இருந்தே ஆட்சி செய்ய கெஜ்ரிவாலை அனுமதிக்க வேண்டும் : டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி மனு
17 Apr 2024புதுடெல்லி : சிறையில் இருந்து ஆட்சி செய்ய கெஜ்ரிவாலுக்கு அனுமதி அளிக்க வேண்டும் என டெல்லி ஐகோர்ட்டில் ஆம்ஆத்மி கட்சி மனுத்தாக்கல் செய்துள்ளது.
-
மியான்மர் சிறையில் இருந்து வீட்டு காவலுக்கு ஆங் சான் சூகி மாற்றம்
17 Apr 2024மியான்மர் : மியான்மரில் ராணுவ ஆட்சியை எதிர்த்து பல போராட்டங்களை நடத்திய ஆங் சான் சூகி சிறையில் இருந்து வீட்டுக் காவலுக்கு மாற்றப்பட்டுள்ளதாக மியான்மர் ராணுவம் தெரிவித்த
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
பிரசாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு: நடிகர் மன்சூர் அலிகான் மருத்துவமனையில் அனுமதி
17 Apr 2024வேலூர் : பிரச்சாரத்தின்போது திடீர் உடல்நலக்குறைவு ஏற்பட்டதால் நடிகர் மன்சூர் அலிகான் மருத்துமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
-
150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க வெற்றி பெறாது : ராகுல் காந்தி பரபரப்பு பேட்டி
17 Apr 2024காசியாபாத் : மக்களவை தேர்தலில் 150 தொகுதிகளுக்கு மேல் பா.ஜ.க.விற்கு வெற்றி கிடைக்காது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
-
உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளம் : ஆம் ஆத்மி கட்சி தொடங்கியது
17 Apr 2024புது டெல்லி : டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் செய்த பணிகளை முன்னிலைப்படுத்தும் விதமாக உங்கள் ராம ராஜ்ஜியம் என்ற பெயரில் புதிய இணையதளத்தை ஆம் ஆத்மி கட்சி நேற்ற
-
கோவையில் அ.தி.மு.க. வேட்பாளரை ஆதரித்து நடிகர் கார்த்திக் வாக்கு சேகரிப்பு
17 Apr 2024கோவை : கோவை தொகுதி அ.தி.மு.க. வேட்பாளர் சிங்கை ராமச்சந்திரனை ஆதரித்து நடிகர் கார்த்திக் பிரச்சாரம் மேற்கொண்டார்.
-
வெற்றி பெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் : அசாமில் பிரதமர் மோடி பிரசாரம்
17 Apr 2024கவுகாத்தி : 2014ம் ஆண்டு எதிர்பார்ப்புடன் மக்களை சந்திக்க வந்தேன், தற்போது வெற்றிபெறுவோம் என்ற உறுதியுடன் வந்துள்ளேன் என்று பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.
-
60 ஆண்டுகளில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் : அசாமில் பிரதமர் மோடி பெருமிதம்
17 Apr 2024அசாம் : காங்கிரஸ் கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி மற்றும் பாதுகாப்புக்காக உழைத்தேன்.