முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அமர்நாத் கோவிலுக்கு 30-வது குழு புறப்பட்டது

சனிக்கிழமை, 30 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஜம்மு, ஜூலை - 30 - அமர்நாத் குகைக் கோவிலுக்கு நேற்று 30 குழு புறப்பட்டுச் சென்றது. இக்குழுவில் 887 பேர் இடம்பெற்றிருந்தனர். காஷ்மீரின் தெற்குப் பகுதியில் உள்ள இமயமலையில் 13 ஆயிரத்து 500 அடி உயரத்தில் அமர்நாத் குகைக் கோவில் உள்ளது. இங்குள்ள இயற்கை பனி லிங்கத்தை தரிசிக்க ஆண்டுதோறும் லட்சக்கணக்கான யாத்ரீகர்கள் செல்வது வழக்கம். இந்த ஆண்டிற்கான அமர்நாத் யாத்திரை கடந்த ஜூன் 29 ம் தேதி துவங்கியது. இதுவரை 29 குழுக்கள் அமர்நாத் கோவிலுக்கு புறப்பட்டு சென்றுள்ளன. நேற்று 30 வது குழு ஜம்மு அருகே உள்ள பகவதி நகர் அடிவாரத்தில் இருந்து அமர்நாத் புறப்பட்டு சென்றது. நேற்று அதிகாலை 4.50 மணிக்கு புறப்பட் இந்த குழுவில் 887 யாத்ரீகர்கள் இடம்பெற்றிருந்தனர். இவர்கள் 495 பேர் ஆண்கள். 131 பேர் பெண்கள். 10 பேர் சிறுவர்கள். 251 பேர் சாதுக்கள். இவர்கள் 31 வாகனங்களில் புறப்பட்டு சென்றனர். நேற்றைய குழுவினரையும் சேர்த்து இதுவரை 74 ஆயிரம் யாத்ரீகர்கள் அமர்நாத் சென்றுள்ளனர்.
அமர்நாத் பக்தர்களின் பாதுகாப்புக்காக சிறப்பான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன என்று காஷ்மீர் மாநில அரசு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்