எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
மதுரை,மார்ச்.3 - மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் நடந்த தேர்தல் ஆலோசனை கூட்டத்தில் பேசிய மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் உயிரை கொடுத்தாவது பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை முதல்வராக்கியே தீருவோம் என்றார்.
மதுரை புறநகர் மாவட்ட மாணவரணி சார்பில் தேர்தல் ஆலோசனை கூட்டம் மதுரை ரிங் ரோட்டில் நேற்று நடைபெற்றது. புறநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் கே. மாணிக்கம் தலைமை வகித்தார். மதுரை கிழக்கு தொகுதி செயலாளர் இளங்கோவன், மேலூர் தொகுதி செயலாளர் பெரியபுள்ளான் என்ற செல்வம், திருப்பரங்குன்றம் தொகுதி செயலாளர் தர்மராஜ், உசிலம்பட்டி தொகுதி செயலாளர் நீதிபதி, திருமங்கலம் தொகுதி செயலாளர் ஆண்டிச்சாமி, சோழவந்தான் தொகுதி செயலாளர் சி.பி.ஆர்.சரவணன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மதுரை கிழக்கு ஒன்றிய செயலாளர் தக்கார் பி. பாண்டி வரவேற்றார். கூட்டத்தில் மாநில மாணவரணி செயலாளரும், மதுரை, விருதுநகர் மாவட்ட பொறுப்பாளருமான ஆர்.பி. உதயகுமார், மதுரை புறநகர் மாவட்ட செயலாளர் எம். முத்துராமலிங்கம், மதுரை மாநகர் மாவட்ட செயலாளர் செல்லூர் கே. ராஜூ ஆகியோர் சிறப்புரையாற்றினர். கூட்டத்தில் தீர்மானத்தை விளக்கி மாநில மாணவரணி செயலாளர் ஆர்.பி. உதயகுமார் பேசியதாவது,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவின் 63 வது பிறந்த நாளை தமிழகம் முழுவதும் சிறப்பாக கொண்டாடி வருகிறோம். இங்கு பிறந்த நாள் விழாவை கொண்டாட முடிவு செய்யப்பட்டிருந்தது. 6 தொகுதிகளை சேர்ந்த 6 ஏழை குடும்பங்களுக்கு பசுவும், கன்றும் வழங்க முடிவு செய்யப்பட்டு கடந்த 24 ம் தேதியே பயனாளிகள் தேர்வு செய்யப்பட்டு வழங்கப்பட்டு விட்டது..
இந்த கூட்டத்தை ரத்து செய்து விடலாம் என்று முடிவு செய்த போது புறநகர் மாவட்ட செயலாளர் முத்துராமலிங்கம் கூட்டத்தை ரத்து செய்ய வேண்டாம். தேர்தல் அறிவிக்கப்பட்டதும் முதல் முதலாக மாணவரணி சார்பில் அறிவிக்கப்பட்ட கூட்டத்தை நடத்துங்கள் என்று வேண்டுகோள் விடுத்தார். அதைத்தொடர்ந்து இந்த நிகழ்ச்சி மாணவரணி சார்பில் சட்டமன்ற தேர்தல் ஆலோசனை கூட்டமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது.
ஆளும் கட்சி குண்டர்களை விரட்ட படை தளபதிகளாக, சிப்பாய்களாக மாணவரணியினர் செயல்பட்டு வருகிறார்கள். வரும் சட்டமன்ற தேர்தலில் எப்படியாவது தி.மு.க. ஆட்சியை வேரோடும், வேரடி மண்ணோடும் வெட்டி சாய்க்க மாணவரணி சூளுரைக்க வேண்டும். எங்கள் உயிரை கொடுத்தாவது ஜெயலலிதாவை அரியணையில் அமர்த்தியே தீருவோம்.
பொதுச் செயலாளர் ஜெயலலிதாவால் மாணவரணியின் புறநகர் மாவட்ட செயலாளராக மாணிக்கத்தை நியமித்துள்ளார். அவருக்கு வாழ்த்து தெரிவிப்பு கூட்டமாகவும் இது அமைந்துள்ளது. விட்டு விட்டு கரண்டை தரும் இருட்டு ஆட்சியை அகற்றிட அதி.மு.க.வின் வெற்றிக்கு பாடுபட வேண்டும். மாணவரணியினர் வரும் தேர்தலில் கடுமையாக வேலை பார்க்க வேண்டும். ஓட்டு சாவடிகளில் மாணவரணியினர் விழிப்புடன் செயல்பட வேண்டும். புதிதாக சேர்க்கப்பட்டுள்ள வாக்காளர்களை சந்தித்து ஜெயலலிதாவின் சாதனைகளை எடுத்து சொல்லி அ.தி.மு.கவுக்கு வாக்களிக்க செய்ய வேண்டும். தெருத் தெருவாக, வீடு வீடாக சென்று மக்களை சந்தித்து ஓட்டளிக்க செய்ய வேண்டும். மீண்டும் அ.தி.மு.க. ஆட்சி வந்தால் மாணவர்களுக்கு மிகப் பெரிய எதிர்காலம் இருக்கிறது. ஜெயலலிதா மாணவர்களுக்கு எண்ணற்ற சலுகைகளை செய்துள்ளார். இலவச பாடநூல், இலவச சைக்கிள் என மாணவர்களின் நலனுக்காக பல்வேறு திட்டங்களை கொண்டு வந்தார். தி.மு.க. ஆட்சி மாணவர்களுக்கு எதுவும் செய்யவில்லை. மாணவர்கள் விரோத அரசாகத்தான் உள்ளது. இந்த அரசை தூக்கி வீச மாணவரணியினர் சபதமேற்று இன்று முதலே உழைக்கத் தொடங்க வேண்டும் என்றார்.
கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் வருமாறு:
ஏப்ரல் 13 ம் தேதி தமிழகத்தில் நடைபெறும் சட்டமன்ற தேர்தலில் அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை நிரந்தரமாக தமிழக முதலமைச்சர் அரியணையில் அமர்த்திட இன்று முதல் ஊன் உறக்கம் பாராது இரவு பகல் பாராது அயராதுபாடுபட்டு வெற்றி சரித்திரம் படைத்திட கழக மாணவரணி புறநகர் மாவட்டம், மதுரை மாநகர் மாவட்டம் சூளுரை ஏற்கிறது.
வரும் தேர்தலில் தி.மு.க.வினர் செய்யும் அனைத்து தில்லுமுல்லுகளையும் முறியடித்து ஜெயலலிதாவின் சாதனைகளையும் தி.மு.க. ஆட்சியில் நடைபெறும் அவலங்களையும் மற்றும் அனைத்து சட்டவிரோத செயல்களையும் தெருத்தெருவாக வீதி வீதியாக சென்று மக்களுக்கு எடுத்து கூறி மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியை தமிழகத்தில் இருந்து ஓட ஓட விரட்டி அடிக்க அயராது பாடுபடுவோம்.
தென் மாவட்ட மக்களின் நலனுக்காக எதுவும் செய்யாமல் நாடாளுமன்றத்திற்கு செல்ல அஞ்சப்படுகிற மு.க. அழகிரியை இந்த தேர்தலில் மதுரையை விட்டு அப்புறப்படுத்திட இந்த கூட்டம் சூளூரை ஏற்கிறது.
மாணவர்களின் நலனுக்காக ஆட்சியில் இருந்த போது எண்ணற்ற திட்டங்களை தீட்டி மாணவர்களின் வாழ்வு மேண்மையடைய செய்தும். தற்போது மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் மாணவர்கள் சமுதாயத்திற்கு எதிராக செயல்படும் அனைத்துசெயல்களை தொடர்ந்து போர்க்குரல் எழுப்பி எப்போதும் மாணவர்களுக்கு பாதுகாப்பு அரணாக இருக்கும் மாணவர்களின் காவல் தெய்வம் ஜெயலலிதாவுக்குஇந்தகூட்டம் கோடானுகோடி நன்றியை தெரிவித்துகொள்கிறது.
வரும் தேர்தலில் மதுரை மாவட்டத்திற்கு உட்பட்ட 10 சட்டமன்ற தொகுதியில் ஜெயலலிதாவால் அடையாளம்காட்டும்வேட்பாளர்களை இரவு பகல் பாராது அயராது தேர்தல் பணியாற்றி வெற்றி பெற செய்து வெற்றி கனியை ஜெயலலிதாவின் மலர் பாதங்களில் சமர்ப்பிப்போம் என்று தீர்மானம் நிறைவேற்றப்படுகிறது.
இந்த கூட்டத்தில் முன்னாள் அமைச்சர் அ.ம.பரமசிவம்,முன்னாள் அமைச்சரும், எம்.எல்.ஏவுமான சி. துரைராஜ், எம்.எல்.ஏக்கள் மேலூர் சாமி, ஏ.கே.போஸ், ஐ. மகேந்திரன், முன்னாள் மாவட்ட செயலாளர் எம். ஜெயராமன், எம்.ஜி.ஆர் மன்ற இளைஞரணி துணை செயலாளர் எம்.எஸ். பாண்டியன், அனைத்துலக எம்.ஜி.ஆர் மன்ற துணை செயலாளர் க. தவசி, முன்னாள் அமைப்பு செயலாளர் ராஜேந்திரன், மாவட்ட மாணவரணி தலைவர் சிவராமகிருஷ்ணா, மாணவரணி இணை செயலாளர் முத்துகிருஷ்ணன், மாணவரணி துணை செயலாளர் செல்வக்குமார், பொருளாளர் முனியசாமி, மாவட்ட மாணவரணி துணை செயலாளர் பிரவீண்குமார், மாணவரணி துணை தலைவர் மகேந்திரபாண்டி, மாணவரணி இணை செயலாளர் கே.பி. பூமிநாதன், மாணவரணி துணை தலைவர்ஆர். கார்த்திக், கிழக்கு ஒன்றிய மாணவரணி செயலாளர் மணிகண்டன் உள்ளிட்ட ஏராளமான நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் கலந்து கொண்டனர். முடிவில் மதுரை மாநகர் மாவட்ட மாணவரணி செயலாளர் ஏ.ராஜீவ்காந்தி நன்றி கூறினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
ஈரோட்டிலிருந்து பிரச்சாரத்தை தொடங்குகிறார் கமல்ஹாசன்
28 Mar 2024சென்னை, மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவர் கமல்ஹாசன் ஈரோட்டில் இன்று பரப்புரையைத் தொடங்க உள்ளார்.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
மும்பை - ஐதராபாத் மோதிய ஒரே போட்டியில் பல சாதனைகள்
28 Mar 2024ஐ.பி.எல். தொடரில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்கு எதிரான போட்டிக்குப் பிறகு டி20 போட்டிகளில் பல்வேறு சாதனைகள் படைக்கப்பட்டுள்ளன.
-
சொன்னதை செய்த கம்மின்ஸ்
28 Mar 2024மும்பை அணிக்கு எதிராக 277 ரன்கள் அடித்து வரலாற்று சாதனைப் படைத்தனர் சன் ரைசர்ஸ் ஐதராபாத் அணியினர்.
-
எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல: வைகோ
28 Mar 2024ஈரோடு, எம்.பி. சீட் கிடைக்காததால் கணேசமூர்த்தி இறந்தார் என்பது உண்மையல்ல என ம.தி.மு.க. பொதுச்செயலாளர் வைகோ தெரிவித்தார்.
-
கெஜ்ரிவாலுக்கு ஏப்.1-ம் தேதி வரை அமலாக்கத்துறை காவல் நீட்டிப்பு
28 Mar 2024புதுடெல்லி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலை மேலும் 4 நாட்கள் அமலாக்கத்துறை காவலில் வைக்க டெல்லி ரோஸ் அவென்யூ நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.