முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஜெகன்மோகன் சொத்துக்கள் சி.பி.ஐ. விசாரணை தொடருகிறது

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      இந்தியா
Image Unavailable

ஐதராபாத்,ஜூலை.- 31 - ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டியின் சொத்துக்கள் குறித்து சி.பி.ஐ தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறது.
ஜெகனின் நிறுவனங்களில் முதலீடு செய்துள்ளதாக கூறப்படும் நிறுவனங்களுக்கு சி.பி.ஐ. நோட்டீஸ் அனுப்பி உள்ளது. நிறுவனம் தொடர்பான அனைத்து ஆவணங்கள் வங்கி பணப்பரிமாற்ற ஆவணங்கள், வருமான வரி செலுத்திய விபரம் ஆகியவற்றை சி.பி.ஐ. கேட்டுள்ளது. அந்த நிறுவனங்களை சேர்ந்தவர்கள் நேரில் ஆஜராகவும் உத்தரவிடப்பட்டுள்ளது. ஆந்திரத்தில் சாக்ஷி டி.வி. சாக்ஷி நாளிதழ் உள்ளிட்டவற்றை ஜெகன் நடத்தி வருகிறார். முன்னதாக சொத்து குறித்து முதல் கட்ட அறிக்கையை கடந்த 26 ம் தேதி சி.பி.ஐ. தாக்கல் செய்தது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்