முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோவிலில் ஆடி அமாவாசை திருவிழா

ஞாயிற்றுக்கிழமை, 31 ஜூலை 2011      ஆன்மிகம்
Image Unavailable

பேரையூர், ஜூலை- 31 - பேரையூர் தாலுகா சாப்டூர் அருகே அமைந்துள்ள மேற்கு தொடர்ச்சி மலையின் ஒரு பகுதியான சதுரகிரி மலையில் சுந்தரமகாலிங்கம் அருள்பாலித்து வருகிறார். இங்கு ஆடி அமாவாசை திருவிழா வெகுசிறப்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.தமிழகத்தின் பல பகுதிகளிலிருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் மலை ஏறி சுவாமி தரிசனம் செய்தனர். ஆடித்திருவிழாவை முன்னிட்டு கடந்த 28ம் தேதியிலிருந்தே பக்தர்கள் மலையேற தொடங்கிவிட்டனர். இருப்பினும் அமாவாசை தினமான நேற்று லட்சக்கணக்கான பக்தர்கள் இங்கு வந்து சுவாமி கும்பிட்டனர். நேற்று திருவிழாவை முன்னிட்டு வழித்தடமெங்கும் நீர்,மோர் பந்தல் அன்னதானம் போன்றவற்றை தொண்டு நிறுவனங்கள், இளைஞர் நற்பணி மன்றங்கள் போன்ற அமைப்புகள் செய்திருந்தனர். நேற்றிரவு பிரபல நடிகர் டி.ஆர்.மகாலிங்கம் அவர்களின் புதல்வி சாவித்திரியின் பக்தி இன்னிசை கச்சேரி நடைபெற்றது. பரம்பரை அறங்காவலர் சார்பாக அன்னதானம் நடைபெற்றது. அமாவாசையைய முன்னிட்டு நேற்று சிவலிங்கத்திற்கு 18 வகையான அபிஷேகம் நடைபெற்றது. பின்னர் பக்தர்களுக்கு விபூதி பிரசாதம் வழங்கப்பட்டது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்