எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
ஊட்டி, ஆக.2 - பச்சைத் தேயிலைக்கு கிலோவிற்கு ரூ.2 மானியம் வழங்குவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ளதை தொடர்ந்து நீலகிரி மாவட்டத்தில் தேயிலை விவசாயிகள் மகிழ்ச்சிப் பெருக்கில் பட்டாசு வெடித்து கொண்டாடினர்.
நீலகிரி மாவட்ட மக்களின் வாழ்வாதாரமாக விளங்குவது தேயிலையாகும். தேயிலை விவசாயத்தை நம்பி 60 ஆயிரம் சிறு தேயிலை விவசாயிகள் உள்ளனர். கடந்த அ.தி.மு.க.,ஆட்சிக்காலத்தில் பச்சைத் தேயிலைக்கு போதிய விலை கிடைக்காத நிலை ஏற்பட்ட போது, சிறு தேயிலை விவசாயிகளின் நலன் கருதி கூட்டுறவு தேயிலை நிறுவனம் மூலம் தேயிலையை வாங்கி ஊட்டி டீ என்ற பெயரில் அனைத்து நியாய விலைக்கடைகளிலும் விற்பனை செய்ய உத்தரவிட்டார் முதல்வர் ஜெயலலிதா. அதனைத்தொடர்ந்து தேயிலை ஏலத்தில் புரோக்கர்கள் தலையீட்டை தடுக்கும் வகையிலும், சிறு தேயிலை விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கு நல்ல விலை கிடைக்க வேண்டுமென்ற நோக்கில் கடந்த 2005ம் ஆண்டு ஆன்லைன் மூலம் வியாபாரம் செய்யும் வகையில் நாட்டிலேயே முதலாவது மின்னணு ஏலமையத்தை குன்னூரில் துவக்கினார். இதன் மூலம் தேயிலை தூள் நல்ல விலைக்கு விற்றதினால், விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கும் நல்ல விலை கிடைத்தது. மேலும் விவசாயிகளுக்கு பச்சைத் தேயிலைக்கு கிலோவிற்கு ரூ.2 வீதம் மானியமும் வழங்கினார். அதனைத்தொடர்ந்து வந்த தி.மு.க.,ஆட்சியில் சிறு தேயிலை விவசாயிகளுக்கு எந்த வித மானியமும் தரவும் இல்லை, தர முன்வரவும் இல்லை. தொடர்ந்து தேயிலை விவசாயிகள் புறக்கணிக்கப்பட்டு வந்தனர்.
இந்த நிலையில் கடந்த ஏப்ரல் மாதம் நடைபெற்ற தேர்தலின் போது தேர்தல் பிரச்சாரத்தில் அ.தி.மு.க.,ஆட்சிக்கு வந்தவுடன் தேயிலை விவசாயிகள் பிரச்சனை தீர்க்கப்படும் என ஜெயலலிதா அறிவித்திருந்தார். அவர் அளித்த வாக்குறுதியின்படி தற்போது தற்போது தமிழகத்தில் மீண்டும் முதல்வராக ஜெயலலிதா பொறுப்பேற்றவுடன் நீலகிரி மாவட்டத்தில் தேயிலையை நம்பி வாழும் சிறு, குறு விவசாயிகளை பாதுகாக்கும் வகையில் மாவட்டத்தில் இயங்கி வரும் 15 கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளில் உறுப்பினராக உள்ள 22 ஆயிரம் உறுப்பினர்களுக்கும் பச்சைத் தேயிலைக்கு தற்போது வழங்கப்படும் விலையான கிலோவிற்கு ரூ.6 என்பதற்கு பதிலாக, தனியார் தொழிற்சாலையில் வழங்கப்படும் கிலோ ரூ.8 க்கு ஈடாக விலைகிடைக்கும் வகையில் கடந்த ஜூன் மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரையுள்ள காலத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் வழங்கப்படும் என தமிழக முதல்வர் ஜெயலலிதா நேற்று அறிவித்ததுடன், இதற்காக கூட்டுறவு தேயிலை தொழிற்சாலைகளுக்கு ரூ.11 கோடியே 20 லட்சத்தையும் ஒதுக்கியுள்ளார். இதன் மூலம் சிறு, குறு தேயிலை விவசாயிகளுக்கு கிலோவிற்கு ரூ.2 மானியமாக மீண்டும் அ.தி.மு.க.,ஆட்சியில் வழங்கப்பட்டுள்ளது.
பச்சைத் தேயிலைக்கு மானியம் தருவதாக தமிழக முதல்வர் அறிவித்துள்ள செய்தி நீலகிரி மாவட்டம் முழுவதும் காட்டுத்தீ போல் பரவியது. அதனைதொடர்ந்து இச்செய்தியைக் கேட்ட நீலகிரி மாவட்டத்தில் ஊட்டி, கோத்தகிரி, அரவேனு, மஞ்சூர் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் விவசாயிகள் பட்டாசு வெடித்து மகிழ்ச்சியுடன் கொண்டாடினர். ஊட்டியில் அ.தி.மு.க.நகர செயலாளர் டி.கே.தேவராஜ்,பாசறை மாவட்ட செயலாளர் வினோத் மற்றும் விவசாயிகள் சேர்ந்து பட்டாசு வெடித்து கொண்டாடினர். இது குறித்து தேவராஜ், வினோத் ஆகியோர் தெரிவிக்கையில் தற்போது நீலகிரி மாவட்டத்தில் பசுந்தேயிலைக்கு போதுமான விலை கிடைக்காத நிலை ஏற்பட்டுள்ளது. இதனையறிந்த தாயுள்ளம் கொண்ட தமிழக முதல்வர் அம்மா அவர்கள் பசுந்தேயிலைக்கு கடந்த ஜூன் மாதம் முதல் வரும் டிசம்பர் மாதம் வரையிலான 7 மாத காலத்திற்கு கிலோவிற்கு ரூ.2 வீதம் மானியம் அறிவித்துள்ளது எல்லையில்லா மகிழ்ச்சியாக உள்ளது. நீலகிரி மாவட்ட சிறு தேயிலை விவசாயிகள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டுள்ள மானியம் தந்த மகராசி அம்மா அவர்களுக்கு நீலகிரி விவசாயிகளின் சார்பில் கோடானுகோடி நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம். இவ்வாறு விவசாயிகள் கூறினர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்1 day 12 hours ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்5 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 1 day ago |
-
புதிதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க விரைவில் டெண்டர்: போக்குவரத்துதுறை அமைச்சர் சிவசங்கர் தகவல்
25 Apr 2024கடலூர், புதியதாக 7 ஆயிரம் பஸ்கள் வாங்க டெண்டர் விடப்பட்டு விரைவில் வரவுள்ளது என்று தமிழக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் தெரிவித்துள்ளார்.
-
மாணிக்கம் தாகூரை தகுதி நீக்கம் செய்ய கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு: ஐகோர்ட்டில் தேர்தல் ஆணையம் பதில்
25 Apr 2024சென்னை, விருதுநகர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாணிக்கம் தாகூரை தகுதிநீக்கம் செய்யக் கோரிய மனு மீது ஒரு வாரத்தில் முடிவு எடுக்கப்படும் என்று சென்னை ஐகோர்ட்டில் தேர்தல் ஆ
-
மணல் முறைகேடு வழக்கு: அமலாக்கத்துறை விசாரணைக்கு 5 மாவட்ட கலெக்டர்கள் ஆஜர்
25 Apr 2024சென்னை, மணல் கொள்ளை விவகாரத்தில் அமலாக்கத் துறை சம்மன் அனுப்பிய நிலையில் 5 மாவட்ட கலெக்டர்கள் அமலாக்க துறை அலுவலகத்தில் நேற்று நேரில் ஆஜராகி விளக்கம் அளித்தனர்.&n
-
புதுச்சேரியை உலுக்கிய சிறுமி கொலை வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல்: காவல்துறை தகவல்
25 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் 9 வயது சிறுமி கொல்லப்பட்ட வழக்கில் விரைவில் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படும் என காவல்துறை தகவல் தெரிவித்துள்ளது.
-
தங்கம் விலை சற்று குறைவு
25 Apr 2024சென்னை, சென்னையில் தங்கம் விலை சவரனுக்கு ரூ.160 குறைந்து ரூ. .53, 680க்கு விற்பனையானது.
-
தமிழகத்தில் 3 பல்கலைக் கழகங்களில் துணைவேந்தர்களை நியமிக்க வேண்டும்: ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கை
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள சென்னைப் பல்கலைக் கழகம், கோயம்புத்தூர் பாரதியார் பல்கலைக் கழகம், தமிழ்நாடு ஆசிரியர் கல்வியியல் பல்கலைக் கழகம் போன்றவற்றில் துணைவேந்தர்களை நியமி
-
இறுதி மூச்சு வரை அரசியல் அமைப்பு, ஜனநாயகத்தை காக்க பாடுபடுவேன்: காங்கிரஸ் தலைவர் கார்கே பேச்சு
25 Apr 2024பெங்களூரூ, எனது இறுதி மூச்சு இருக்கும் வரை இந்த நாட்டின் அரசியல் அமைப்பையும், ஜனநாயகத்தையும் காக்க பாடுபடுவேன் என்று கர்நாடக மாநிலம் அப்சல்பூர் பகுதியில் நடைபெற்ற தேர்த
-
சவுதி மன்னர் அப்துல் அஜீஸ் மருத்துவமனையில் அனுமதி
25 Apr 2024ஜெருசலேம், சவுதி அரேபிய மன்னரான சல்மான் பின் அப்துல் அஜீஸ் (88) மருத்துவமனையில் நேற்று முன்தினம் சேர்க்கப்பட்டார்.
-
வேட்புமனு தாக்கல் செய்தார் ஆந்திர முதல்வர் ஜெகன் மோகன்
25 Apr 2024அமராவதி, ஆந்திர மாநிலம் புலிவெந்துலா தொகுதியில் போட்டியிட அம்மாநில முதல்வரும், ஒய்.எஸ்.ஆர்.சி.பி.
-
11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றம்: ஈராக் பாதுகாப்பு படையினர் தகவல்
25 Apr 2024பாக்தாத், ஈராக்கில் 11 ஐ.எஸ். பயங்கரவாதிகளுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளதாக பாதுகாப்பு படை வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.
-
தேர்தல் விதிமீறல் புகார்: பிரதமர் மோடி, ராகுல் காந்தி விளக்கமளிக்க வேண்டும்: பா.ஜ.க., காங்கிரசுக்கு தேர்தல் ஆணையம் உத்தரவு
25 Apr 2024புதுடெல்லி, ஏப். 26- தேர்தல் விதிமுறைகளை மீறிய புகாரில் பிரதமர் மோடி, ராகுல் காந்தி ஆகியோர் விளக்கமளிக்க வேண்டும் என தேர்தல் ஆணையம் உத்தரவிட்டுள்ளது.
-
ஆரஞ்சு நிறத்தில் செவ்வாய் கிரகம் போல் காட்சியளித்த ஏதென்ஸ் நகரம்: நாசா நிறுவனம் விளக்கம்
25 Apr 2024ஏதென்ஸ், ஏதென்ஸ் நகரம் நேற்றுமுன்தினம் செவ்வாய் கிரகம் போல் ஆரஞ்சு நிறமாக காட்சியளித்தது.
-
21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக பயங்கரவாதம் உள்ளது: ராணுவத்தினர் மத்தியில் அதிபர் புடின் பேச்சு
25 Apr 2024மாஸ்கோ, 21-ம் நூற்றாண்டின் அச்சுறுத்தல்களில் ஒன்றாக சர்வதேச பயங்கரவாதம் நீடித்து உள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 25-04-2024.
25 Apr 2024 -
உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன்: ம.பி. பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேச்சு
25 Apr 2024போபால், உங்களை கொள்ளையடிக்கும் காங்கிரசின் திட்டங்களுக்கு இடையே சுவராக நிற்கிறேன் என்று மத்திய பிரதேசத்தில் நடந்த பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசினார்.
-
சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி போதைப்பொருள் பறிமுதல்
25 Apr 2024சென்னை, சென்னை விமான நிலையத்தில் ரூ.35 கோடி மதிப்புள்ள கொக்கைன் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
-
அனைத்து துறைகளிலும் வளர்ச்சி பிரதமர் மோடியால் மட்டும் முடியும்: மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேச்சு
25 Apr 2024ஐதிராபாத், 'அனைத்து துறைகளிலும் வளர்ச்சியை உறுதி செய்வது பிரதமர் நரேந்திர மோடியால் மட்டுமே முடியும்' என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா கூறினார்.
-
கென்யாவில் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் பலி: 23 மாவட்டங்கள் பாதிப்பு
25 Apr 2024நெய்ரோபி, கிழக்கு ஆப்ரிக்கா நாடான கென்யாவில் பெய்து வரும் கனமழை மற்றும் வெள்ளத்தில் சிக்கி 38 பேர் உயிரிழந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.
-
குருவித்துறையில் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா துவக்கம்
25 Apr 2024மதுரை, மதுரை மாவட்டம் குருவித்துறையில் வரும் 29-ம் தேதி குருப்பெயர்ச்சி விழா லட்சார்ச்சனை நிகழ்ச்சியுடன் துவங்குகிறது.
-
வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரிய செந்தில்பாலாஜி மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு
25 Apr 2024சென்னை, அமலாக்கத்துறை வழக்கில் இருந்து விடுவிக்கக்கோரி செந்தில்பாலாஜி தாக்கல் செய்த மனு மீது 30-ம் தேதி தீர்ப்பு அளிக்கப்படுகிறது.
-
புதுச்சேரி இளைஞர் உயிரிழப்பில் குழு அமைத்து விசாரிக்கப்படும் : அமைச்சர் சுப்பிரமணியன் உறுதி
25 Apr 2024சென்னை, உடல் பருமன் சிகிச்சையால் இளைஞர் உயிரிழந்தது தொடர்பாக இளைஞரின் உறவினர்களிடம் தொலைபேசி வழியாக சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் ஆறுதல் தெரிவித்ததுடன், குழு
-
மனித உரிமை குறித்த அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பு இல்லை: இந்திய வெளியுறவுத்துறை கருத்து
25 Apr 2024புதுடில்லி, இந்தியாவில் மனித உரிமை குறித்து அமெரிக்க அறிக்கைக்கு மதிப்பில்லை என மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் கூறியுள்ளது.
-
தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலி
25 Apr 2024ஐதராபாத், தெலுங்கானாவில் லாரி மீது கார் மோதிய விபத்தில் 6 பேர் பலியானார்கள். இந்த விபத்து குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.
-
தமிழகத்தில் அடுத்த 4 நாட்களுக்கு அதிக வெப்பம் பதிவாக வாய்ப்பு
25 Apr 2024சென்னை, தமிழகத்தில் வரும் ஏப்ரல் 29ம் தேதி வரை 4 நாட்களுக்கு 108 டிகிரி பாரன்ஹீட் வெப்பம் பதிவாக வாய்ப்புள்ளது என சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
தமிழகம் முழுவதும் அரசு பள்ளிகளில் மாணவர்கள் சேர்க்கை மேலும் அதிகரிப்பு
25 Apr 2024சென்னை, 2024-25 ஆம் கல்வி ஆண்டில் அரசு பள்ளிகளில் இதுவரை 3,24,884 மாணவர்கள் சேர்க்கப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வி துறை தெரிவித்துள்ளது.