முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ராதாபுரத்தில்ரூ.1 கோடி மதிப்பிலான நிலம் மோசடி

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

நெல்லை ஆக-2  - நெல்லை மாவட்டம் ராதாபுரத்தில் ரூ.1 கோடி மதிப்பிலான நிலத்தை மோசடி செய்த நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று நெல்லை கலெக்டரிடம் பெண் புகார் மனு கொடுத்துள்ளார். நெல்லை மாவட்டம் ராதாபுரம் நாயுடு தெருவைசேர்ந்தவர் ஸ்ரீராம சுப்பிரமணியன். இவரது மனைவி சிவசக்தி என்பவர் கலெக்டரிடம் கொடுத்த புகார் மனுவில் தெரிவித்துள்ளதாவது:  எனது கணவரின் தந்தை வேதமுத்து இந்திரர் எனது மகன் ஈஸ்வரமூர்த்திக்கு வேப்பிலான்குளம் பகுதியில் உள்ள ரூ.1கோடி மதிப்பிலான நிலத்தை உயில் எழுதி வைத்துள்ளார். இந்த இடத்தை பணகுடியை சேர்ந்த சுயம்பு, தியாகராஜபுரத்தை சேர்ந்த முருகானந்தம் ஆகியோர் என் கணவரை மிரட்டி பவர் வாங்கிக்கொண்டு அந்த இடத்தை ஆக்கிரமித்து கொண்டனர். இந்நிலையில் கடந்தமாதம் அந்த இடத்திற்குள் அத்துமீறி நுழைந்த சுயம்புவின் ஆட்கள் எனக்கு கொலைமிரட்டல் விடுத்துசென்றனர். இது குறித்து நான் ராதாபுரம் போலீசில் புகார் செய்தேன். இதற்கிடையே கடந்த 28ம் தேதி அந்த இடத்திற்குள் புகுந்த சுயம்புவின் உறவினர்கள் அங்கு பயிரிட்டுள்ளவைகளை அழித்துவிட்டனர். அதனை தடுக்க முயன்ற என்னை தோட்டத்தை விட்டு வெளியேறாவிட்டால் கொலை செய்துவிடுவதாக மிரட்டிசென்றனர். எனவே ஆக்கிரமிப்பாளர்கள் மீது தகுந்த நடவடிக்கை மேற்கொண்டு எனது நிலத்தை மீட்டு தரவேண்டும் என்று அந்தமனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்