முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

போலீஸ் காவல் கேட்டு மனு: பொட்டு சுரேஷ் ஆஜர்

செவ்வாய்க்கிழமை, 2 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

மதுரை,ஜூலை.2 - நில அபகரிப்பு வழக்கில் கைது செய்யப்பட்டு பாளையங்கோட்டை சிறையில் இருக்கும் பொட்டு சுரேஷ் நேற்று மதுரை கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டார். பல்வேறு நில அபகரிப்பு புகார்கள் தொடர்பாக மதுரை மாநகர் மாவட்ட திமுக செயலாளர் தளபதி, பொட்டு சுரேஷ் உள்பட 4 பேர் பாளையங்கோட்டை சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். மற்றொரு நில அபகரிப்பு வழக்கில் பொட்டு சுரேஷ், உதயகுமார், மாணிக்கம் செட்டியார் ஆகியோர் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த வழக்கு தொடர்பாக பொட்டு சுரேசை போலீஸ் காவலில் எடுத்து விசாரிக்க போலீசார் கோர்ட்டில் மனு தாக்கல் செய்திருந்தனர். இதற்காக பொட்டு சுரேஷ் பாளையங்கோட்டை சிறையில் இருந்து மதுரைக்கு கொண்டு வரப்பட்டு கோர்ட்டில் ஆஜர் படுத்தப்பட்டனர். வக்கீல்களின் வாதத்திற்கு பிறகு மனு இன்று தள்ளி வைக்கப்பட்டது. இதன் பிறகு பொட்டு சுரேஷ் மீண்டும் பாளை சிறைக்கு கொண்டு செல்லப்பட்டார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்