எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.5 - சென்னை மாநர காவல்துறை 4 மண்டலங்களாக நிர்வாக வசதிக்காகப் பிரிக்கப்படும் என்றும், காவல்துறை நவீனப்படுத்த ரூ.54 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும், மேலும் அபகரிக்கப்பட்ட நிலங்கள் மீட்டு உரியவரிடம் ஒப்படைக்கப்படும் என்றும் பட்ஜெட் தாக்கல் செய்த நிதியமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் அறிவித்தார்.
இதுகுறித்து தமிழக அரசு பட்ஜெட்டில் அறிவித்திருப்பதாவது:
குற்றவாளிகள், சமூக விரோதிகள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து அமைதியை நிலைநாட்ட இந்த அரசு உறுதிபூண்டுள்ளது. பொதுமக்களிடையே நம்பிக்கையும், நல்லெண்ணமும் உருவாகும் வகையில் காவல் துறை தனது கடமையினை எந்த தலையீடுமின்றி சுதந்திரமாகவும் திறம்படவும் செயலாற்றிட வழிவகை செய்யப்பட்டுள்ளது.
ஏற்கெனவே அறிவித்தவாறு கடந்த ஆட்சிக்காலத்தில் நில அபகரிப்பில் ஈடுபட்டிருந்தவர்கள் மீது காவல்துறை தக்க நடவடிக்கைகளை எடுத்து வருகின்றது. நில அபகரிப்பு குறித்த புகார்களை விசாரிக்க மாவட்டங்களில் சிறப்பு பிரிவுகள் காவல் துறையில் உருவாக்கப்பட்டுள்ளன. இந்த ஆண்டு மே திங்கள் முதல் 2,491 புகார்கள் பெறப்பட்டள்ளன. நில அபகரிப்பில் ஈடுபடுவர் மீது கடும் நடவடிக்கைகளை எடுத்து அந்நிலங்களை உரியவரிடம் திரும்ப ஒப்படைக்கும் பணியினை இந்த அரசு மேற்கொள்ளும். எனவே, பாதிக்கப்பட்ட மக்கள் தாங்கள் இஒளந்த சொத்துக்களை திரும்ப பெற இயலும் என்று திடமாக நம்பலாம் என்பதை தெரிவித்துக் கொள்கிறேன்.
காவல் துறையை நவீனப்படுத்த 2011-2012 ஆம் ஆண்டு திருத்த வரவு- செலவுத்திட்ட மதிப்பீட்டில் 54 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. காவல் துறையை மேலும் நவீனப்படுத்துவதற்காக கூடுதல் நிதியை ஒதுக்கீடு செய்யுமாறு மத்திய அரசு இந்த அரசு வலியுறுத்தும். பதிமூன்றாவது நிதிக்குழுவின் பரிந்துரைப்படி காவலர் பயிற்சிக்கென 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த நிதியாண்டில் 25 கோடி ரூபாய் இதற்கென செலவிடப்படும்.
தற்போது, தமிழ்நாட்டில் 1,492 காவல் நிலையங்கள் உள்ளன. இவற்றுள் 282 காவல் நிலையங்கள் வாடகை கட்டடங்களில் இயங்கி வருகின்றன. அவற்றில் 92 இடங்களில் புதிய காவல் நிலையக் கட்டடங்கள் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. 2011-2012 ஆம் ஆண்டில் 11 கட்டடங்களை கட்டுவதற்கென 4.11 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மீதமுள்ள இடங்களில் உரிய இடம் தேர்வு செய்தவுடன் பணிகள் தொடங்கப்படும்.
சைபர் குற்றங்களை திறம்படத் தடுக்க சேலத்திலும், திருநெல்வேலியிலும் சைபர் குற்றப்பிரிவுகள் தொடங்கப்படும். சைபர் தடயவியல் சோதனைக் கூடங்கள், சென்னை மாநகர காவல், குற்றப்பிரிவு புலனாய்வுத்துறை ஆகிய இடங்களில் மட்டுமே உள்ளன. இதற்கு சோதனைக்கூடங்கள் சேலம், திருநெல்வேலி உள்ளிட்ட பிற ஆறு மாநகரங்களிலும் ஏற்படுத்தப்படும்.
தற்போது காலியாக உள்ள 896 சார் ஆய்வாளர்கள், 121 தொழில்நுட்ப சார் ஆய்வாளர்கள், 5,588 இரண்டாம் நிலை காவல்களுக்கான பணியிடங்கள் விரைவில் நிரப்பப்படும். சட்டம் - ஒழுங்கு பராமரிப்பு, போக்குவரத்து கட்டுப்பாடு, குற்றப்புலனாய்வு ஆகியவற்றுக்கு கூடுதலாக தேவைப்படும் காவலர்கள் எண்ணிக்கை உரிய முறையில் மதிப்பீடு செய்யப்பட்டு அப்பணியிடங்களை உருவாக்க நடவடிக்கை எடுக்கப்படும். சட்டம் ஒழுங்கை பராமரிப்பதில் காவல் துறைக்கு உறுதுணையாக ஊர்காவல் படையினர் செயல்பட்டு வருகின்றனர். தற்போது, 11,622 ஆக இருந்து வரும் இப்படையினரின் எண்ணிக்கை 16,000 ஆக உயர்த்தப்படும். இப்படையினரின் தினப்படி 65 ரூபாயிலிருந்து 150 ரூபாயாக உயர்த்தப்படும்.
சென்னையை ஒட்டிப் பெருகி வரும் நகர்ப்புற வளர்ச்சியால் காவல் கண்காணிப்பு முறையிலுள்ள நடைமுறை சிக்கல்களை கருத்தில் கொண்டு, 2005 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்களில், சென்னை மாநகர காவல் துறையும், செங்கல்பட்டு கிழக்கு காவல் மாவட்டமும் ஒன்றிணைக்கப்பட்டு, சென்னை பெருநகர காவல் ஆணையரகம் உருவாக்கப்பட்டது. வேகமாக பெருகிவரும் சென்னை புறநகர் பகுதிகளை சென்னை மாநகர காவல் ஆணையரின் நேரடி கட்டுப்பாட்டிலும், மேற்பார்வையிலும் கொண்டுவர வேண்டும் என்ற நோக்குடன் இந்த மாற்றம்ம செய்யப்பட்டது. இதைத் தொடர்ந்து 2008-ம் ஆண்டு மறுசீரமைப்பின் மூலம் சென்னை புறநகர் காவல் ஆணையரகம் புதிதாக தோற்றுவிக்கப்பட்டது. இதனால் காவல் கண்காணிப்பு முறையில் எவ்வித முன்னேற்றமும் ஏற்படவில்லை. 2005-ம் ஆண்டு ஒரே உருவாகத்தின்கீழ் உருவாக்கப்பட்ட சென்னை பெருநகர காவல் ஆணையரகமே குற்றத்தடுப்பிற்கு ஏதுவாகவும், சிறப்பாக செயல்பட உகந்ததாகவும் இருக்கும் என கருதப்படுகிறது. எனவே, இந்த அரசு சென்னை புறநகர் காவல் ஆணையரகத்தை சென்னை மாநகரக்காவல் ஆணையரகத்துடன் ஒருங்கிணைத்து சென்னை பெருநகர காவல் ஆணையரகமாக உருவாக்கும். நிருவாக வசதிக்காக இந்த ஆணையரகம் வடக்கு, தெற்கு, மேற்கு, மத்திய மண்டலம் என நான்கு மண்டலங்களை உள்ளடக்கியதாக இருக்கும்.
இவ்வாறு பட்ஜெட் உரையில் கூறப்பட்டுள்ளது.
மேலும் தீயணைப்பு துறைக்காக, இந்த நிதியாண்டில், மேம்படுத்தப்பட்ட தீயணைப்பு வாகனங்கள், உயர் அழுத்தக் குழாய்கள், இணைப்பு கருவிகள் போன்வற்றை வாங்க இந்த அரசு நடவடிக்கை எடுக்கும். தீயணைப்பு, மீட்புப் பணி நிலையங்களுக்கான 10 புதிய கட்டடங்களும், பெரம்பலூர் கோட்ட அலுவலகத்திற்காக ஒரு புதிய கட்டடமும், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி வாரியத்தின் மூலம் அலுவலர்களுக்கும், பணியாளர்களுக்கும் 243 வீடுகள் கட்டும் பணி 21.50 கோடி ரூபாய் செலவில் நடைபெற்று வருகிறது. தீயணைப்பு - மீட்பு பணிகள் துறைக்காக இந்த திருத்த வரவு, செலவுத் திட்ட மதிப்பீட்டில் 170 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்துள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
மூட்டு வலி குணமாக 7 எளிய வீட்டு வைத்தியம் | இடுப்பு வலி குணமாக | தவிற்கணவேண்டிய உணவுகள் 3 weeks 18 hours ago | வாய்புண் குணமாக என்ன செய்ய வேண்டும்? தொண்டைப்புண் குணமாக பாட்டி வைத்தியம் | பழங்கள் மற்றும் உணவு முறை 3 weeks 18 hours ago | ஆவாரம்பூவின் மருத்துவ பலன்கள் 3 weeks 18 hours ago |
தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 3 months 2 weeks ago | குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 7 months 6 days ago | பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 1 day ago |
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 17 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
102 பார்லி. தொகுதிகளில் முதல் கட்ட வாக்குப்பதிவு நிறைவு: தமிழகம், புதுச்சேரியில் விறுவிறு வாக்குப்பதிவு : புதுச்சேரியில் 72.84 சதவீதம் - தமிழகத்தில் 66 சதவீதம் வாக்குப்பதிவு
19 Apr 2024சென்னை : தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் மக்களவை தேர்தலுக்கான வாக்குப்பதிவு தொடங்கியது.
7 கட்டங்களாக...
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
தமிழகத்தில் அமைதியான வாக்குப்பதிவு தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு பேட்டி
19 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் அமைதியாக, நல்லபடியாக வாக்குப்பதிவு நடைபெற்றதாக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு கூறினார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
மேற்குவங்க வாக்குப்பதிவு: கல்வீச்சு, கடத்தல், தீவைப்பு
19 Apr 2024கொல்கத்தா : மேற்கு வங்கத்தில், கூச் பெஹார், அலிபுர்தௌர், ஜல்பைகுரி ஆகிய மக்களவை தொகுதிகளுக்கு இன்று வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில், வன்முறை வெறியாட்டம் நடந்துள்ளது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.