முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கராச்சி கலவர பலி எண்ணிக்கை 58 ஆக உயர்வு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      உலகம்
Image Unavailable

கராச்சி,ஆக.5 - பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் வகுப்பு மற்றும் இனக்கலவரத்திற்கு பலியானோர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது.பாகிஸ்தானில் ஆங்காங்கே வகுப்பு மற்றும் இனக்கலவரம் நடைபெற்று வருகிறது. குறிப்பாக பாகிஸ்தானின் வர்த்தக நகரான கராச்சியில் அடிக்கடி வகுப்பு கலவரம் நடந்து வருகிறது. அங்கு கடந்த 5 நாட்களாக நடைபெற்று வரும் வகுப்பு மற்றும் இனக்கலவரத்திற்கு பலியானவர்களின் எண்ணிக்கை 58 ஆக உயர்ந்துள்ளது. இன்னும் திடீர் திடீரென்று கலவரம் நடந்து வருவதால் அங்கு பாகிஸ்தான் அரசானது கூடுதல் படையை அனுப்பி உள்ளது. கராச்சி நகரானது துறைமுகமாக இருப்பதால் நகர் முழுவதும் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது. அதுவும் அரசு கட்டிடங்கள்,கல்வி நிலையங்களில் கூடுதல் படை நிறுத்தப்பட்டுள்ளது. மேலும் படைகளை அனுப்ப அரசை அரசியல் கட்சிகள் கேட்டுக்கொண்டுள்ளன.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்