முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மராட்டிய சட்டசபை பவள விழா தள்ளிவைப்பு

வெள்ளிக்கிழமை, 5 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,ஆக.6 - குண்டு வெடிப்பு சம்பவங்களின் எதிரொலியாக மகராஷ்டிர மாநில சட்டசபையின் பவள விழா கொண்டாட்டம் தள்ளி வைக்கப்பட்டுள்ளது. இதன்படி அக்டோபர் 18 ம் தேதி ஜனாதிபதி பிரதீபா பாட்டீல் முன்னிலையில் இந்த விழா நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. முன்னதாக இந்த விழா ஜூலை 19 ம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் சமீபத்தில் மும்பையின் பல்வேறு இடங்களில் குண்டு வெடிப்பு சம்பவங்கள் நிகழ்ந்ததை அடுத்து இந்த விழா தள்ளி வைக்கப்பட்டு அக்டோபர் 18 ம் தேதி நடக்கவிருப்பதாக சட்டசபை அதிகாரி ஒருவர் தெரிவித்தார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்