எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.6 - மாணவர்களுக்கு கல்வி ஊக்கத்தொகை மற்றும் பல சலுகைகளை அறிவித்த தமிழக அரசின் நிதிநிலை அறிக்கைக்கு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு மற்றும் இந்திய சுயாதீன திருச்சபைகள் பிஷப் எம்.பிரகாஷ் வரவேற்பு தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள பாராட்டு அறிக்கையில் கூறியிருப்பதாவது:
தமிழக அரசின் 2011-2012-ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கை சமுதாயத்தின் அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் மிகச்சிறப்பான அறிவிப்புகளைக் கொண்டுள்ளது. சொல்லுவதை செயலில் காட்டும் ஒப்பற்ற முதல்வர் ஜெயலலிதாதான் என்பதை மீண்டும் ஒருமுறை நிரூபித்திருக்கிறார். தேர்தல் பிரச்சாரத்தில் என்னென்ன செய்வோம் என்று
சொன்னாரோ அத்தனையையும் இன்று நிறைவேற்றும்வண்ணமாக இந்த நிதிநிலை அறிக்கை அமைந்துள்ளது.
பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் மகளிர், மாற்றுத்திறனாளிகள், ஆதரவற்ற முதியோர் என சமூகத்தின் பல்வேறு தரப்பினருக்கும் பயனுள்ள திட்டங்களை இந்த நிதிநிலை அறிக்கையில் அமைந்துள்ளது. எதிர்க்கட்சியினரால் குறை கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு nullரணமான நிறைவான அருமையான நிதிநிலை அறிக்கையாக இது அமைந்துள்ளது. பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், தாழ்த்தப்பட்டோர் பெற்று வரும் 69 சதவீத இடஒதுக்கீடு தொடர்ந்து கடைபிடிக்கப்படும் என்ற ஜெயலலிதாவின் சமூக nullநீதியை காக்கும் இந்த மகத்தான முடிவு நிச்சயமாக வரலாற்றில் பொன் எழுத்துக்களால் பொறிக்கப்படும். ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் இலவச மிக்சி, கிரைண்டர், மின்விசிறி, கறவை மாடுகள், ஆடுகள் வழங்க ரூ.1441 கோடியும், இலவச அரிசி திட்டத்திற்கு ரூ.4500 கோடியும், இலவச தங்கத்தாலி திட்டத்திற்கு ரூ.514 கோடியும், மாணவ மாணவிகள் பயன்பெறும் வகையில் மடிக்கணினி வழங்க ரூ.912 கோடியும் ஒதுக்கப்பட்டுள்ளது.
பள்ளி குழந்தைகளுக்கு இந்த ஆண்டு இரண்டு செட் சீருடைகளும், அடுத்த ஆண்டு முதல் 4 செட் சீருடைகளும், வழங்கப்படும். 6 ம் வகுப்பும் அதற்கு மேலும் பயிலும் மாணவர்களுக்கு அரைக்கால் சட்டைக்கு பதிலாக முழுக்கால் சட்டையும், மாணவிகளுக்கு பாவாடை தாவணிக்கு பதிலாக சல்வர் கமீசும் வழங்கப்படும். வசதி இல்லாததால் படிப்பை பாதியில் நிறுத்துவதை குறைப்பதற்காக 10-11-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 1500 ரூபாயும், 12-ம் வகுப்பு பயிலும் மாணவ மாணவியர்களுக்கு 2000 ரூபாயும் ஊக்கத்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் மிகுந்த வரவேற்புக்குரியவைகளாகும்.
ஏழை பெண்களுக்கு இரண்டு மகப்பேறுகள் வரை வழங்கப்படும் உதவித்தொகை ரூ.6 ஆயிரத்தில் இருந்து ரூ.12 ஆயிரமாக உயர்தப்பட்டுள்ளது. வீடுகளுக்கு சென்று சுகாதார வசதி அளிக்க நடமாடும் மருத்துவமனை திட்டம் தொடங்கப்படுவது பாராட்டுதலுக்கு உரியது.
13 மீன்பிடி நகரங்களில் மீன் பதப்படுத்தும் nullங்காக்கள் ஏற்படுத்தப்படும். மீன்பிடி அல்லாத காலங்களில் மீனவக்குடும்பங்களுக்கு ரூ.4 ஆயிரம் சிறப்பு உதவித்தொகை வழங்கப்படும் என்ற அறிவிப்புகள் மீனவ குடும்பங்களின் நெஞ்சில் பேரானந்தத்தை ஆளித்துள்ளது.
தமிழகம் முழுவதும் அடுத்த ஆண்டு ஆகஸ்டு மாதத்திற்குள் மின்வெட்டு முற்றிலுமாக nullநீக்கப்படும் என்ற அறிவிப்பால் தமிழ்நாடே மகிழ்ச்சி வெள்ளத்தில் மூழ்கியுள்ளது. ஜெயலலிதா சொன்னால் அதை செய்துகாட்டுவார் என்பதை நாடறியும். இருண்ட தமிழகத்தை மீட்டெடுத்த ஜெயலலிதா தமிழகத்தை இனி இருள் இல்லாதபடி ஒளிமயமாக்குவார்.
ஏழைகளுக்கு சூயரிசக்தி மின்சாரத்துடன் கூடிய பசுமைவீடுகள் கட்டித்தருவதற்காக ரூ.1080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டில் 60,000 ஆயிரம் வீடுகள் கட்டித்தரப்படுகிறது. தற்போது செயல்படுத்தப்பட்டு வரும் அனைத்து வறுமை ஒழிப்பு திட்டங்களையும் ஒருங்கிணைத்து, வறுமை கோட்டிற்கு கீழ் உள்ள ஒவ்வொரு குடும்பமும் நேரடியாகப் பயன்பெறும் வகையில் வறுமை ஒழிப்பு திட்டத்தை அரசு செயல்படுத்தும் என்ற அறிவிப்பு வரவேற்புக்குரியது.
சிறுபான்மை மக்கள் மீது அன்பும் அக்கறையும் கொண்டுள்ள ஜெயலலிதாவின் அரசு தமிழ்நாடு வக்பு வாரியத்திற்கு ஆண்டுதோறும் வழங்கப்பட்டுவந்த மானியத் தொகையான ரூ.45 லட்சத்தை ஒரு கோடியாக உயர்த்தியுள்ளதையும், உலமாக்கள் ஓய்வூதியத்தை ரூ.750-லிருந்து ரூ.1000 ஆக உயர்த்தியுள்ளதையும், வக்பு வாரிய ஓய்வூதியதாரர்களின் நிலுவையிலுள்ள ஓய்வூதியம் மற்றும் பணிக்கொடைகளை வழங்க ஒருமுறை மானியமாக 3 கோடி ரூபாய் வழங்கியுள்ளதையும் இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு, இந்திய சுயாதீன
திருச்சபைகள் மாமன்றம், இந்திய பிஷப்புகள் கவுன்சில் வரவேற்று பாராட்டுகிறது.
மேலும் ஆக்கிரமிப்பில் உள்ள வக்பு சொத்துக்களை மீட்டு நிர்வாகத்தை சீரமைத்து வக்பு வாரியத்திற்கு நிரந்தர வருவாய் ஏற்படுத்த முடிவு செய்துள்ளதையும் வரவேற்கிறோம்.
மொத்தத்தில் மிக அற்புதமான நிதிநிலை அறிக்கையை கொடுத்து தமிழகத்தின் எதிர்காலத்தை வளமுள்ளதாக மாற்றிய ஜெயலலிதாவுக்கு எங்கள் நெஞ்சார்ந்த நன்றியைத் தெரிவித்துக்கொள்கிறோம். ஜெயலலிதாவின் சாதனைகள் மேல் சாதனைகள் செய்திட நாங்கள் மனதார வாழ்த்துவதோடு எல்லாம் வல்ல இறைவன் அவருக்கு அருள்பாலிக்க வேண்டும் என்று
பிரார்த்தனை ஏறெடுக்கிறோம்.
இவ்வாறு இந்திய சிறுபான்மை மற்றும் கிறிஸ்தவ கூட்டமைப்பு தலைவர், இந்திய சுயாதீன திருச்சபைகள் மாமன்ற பிரதம பேராயர், முன்னாள் தமிழக சிறுபான்மையினர் நல ஆணையத் தலைவர் பிஷப் பிரகாஷ் கூறியுள்ளார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்1 day 12 hours ago |
பெப்பர் சிக்கன்5 days 12 hours ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 1 day ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 28-03-2024.
28 Mar 2024 -
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை 3-வது முறையாக நிராகரித்தார் மொய்த்ரா
28 Mar 2024புது டெல்லி, திரிணாமுல் காங்கிரஸ் வேட்பாளர் மஹுவா மொய்த்ரா மூன்றாவது முறையாக அமலாக்கத்துறை அனுப்பிய சம்மனை நிராகரித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
புதுச்சேரியில் உதயநிதி 31-ம் தேதி பிரச்சாரம்
28 Mar 2024புதுச்சேரி, காங்கிரஸ் வேட்பாளர் வைத்திலிங்கத்துக்கு ஆதரவாக அமைச்சர் உதயநிதி வருகிற 31-ம் தேதி புதுச்சேரியில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
அருணாச்சலில் போட்டியின்றி தேர்வாகும் முதல்வர் காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க. வேட்பாளர்கள்
28 Mar 2024ஈடாநகர், எதிர்க்கட்சிகள் தரப்பில் வேட்பாளர்கள் யாரும் மனு தாக்கல் செய்யாததால் அருணாசல பிரதேசத்தில் முதல்வர் பிமா காண்டு உள்ளிட்ட 5 பா.ஜ.க.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
பார்லி. தேர்தலுக்கு பின் விடுபட்ட அனைவருக்கும் உரிமைத்தொகை: அமைச்சர் உதயநிதி வாக்குறுதி
28 Mar 2024ஸ்ரீபெரும்புதூர், பாராளுமன்ற மக்களவை தேர்தலுக்கு பின்னர் விடுபட்ட அனைவருக்கும் மகளிர் உரிமைத்தொகை வழங்கப்படும் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
டி.என்.பி.எஸ்.சி. குரூப் 1 தேர்வு நடைபெறும் தேதி அறிவிப்பு: ஏப். 27 வரை விண்ணப்பிக்கலாம்
28 Mar 2024சென்னை, 90 காலிபணியிடங்களுக்கான குரூப் 1 தேர்வு அறிவிப்பை தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.