முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மன்மோகன் - கபில்சிபல் மீது அன்னா ஹசாரே கடும் தாக்கு

ஞாயிற்றுக்கிழமை, 7 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.8 - பிரதமர் மன்மோகன் சிங்கிற்கும், மத்திய அமைச்சர் கபில்சிபலுக்கும் இந்தியா பற்றி ஒன்றும் தெரியாது என்று அன்னா ஹசாரே கூறியுள்ளார். மகாராஷ்ட்ர மாநிலம் ஜல்காவுனில் இதுகுறித்து அவர் மேலும் கூறியதாவது:-

பிரதமர் மன்மோகன் சிங்கும் மனித வள மேம்பாட்டுத்துறை அமைச்சர் கபில்சிபலும் வெளிநாட்டில் கல்வி பயின்றவர்கள். அவர்களால் இந்தியாவில் உள்ள சூழ்நிலைகளை புரிந்துகொள்ள முடியாது. இந்தியா குறித்து அவர்கள் தெரிந்துகொண்டுள்ளதும் குறைவுதான். வலுவான லோக்பால் மசோதா எவ்வளவு முக்கியமானது என்பதை நாட்டு மக்கள் அனைவரும் தெரிந்துவைத்துள்ளனர். மத்திய அரசு இப்போது கொண்டுவர முயற்சிக்கும் லோக்பால் மசோதாவை ஏற்றுக்கொள்ள முடியாது. அதில் மத்திய அரசு மாற்றத்தை கொண்டுவர வேண்டும். இல்லையெனில் மத்திய அரசு பதவி விலக வேண்டும் என்றார் ஹசாரே.

இந்நிலையில் டெல்லியில் ஊர்வலமாக வந்த சமூக சேவகர்கள் அரசு தரப்பு லோக்பால் மசோதாவின் நகல்களை தீவைத்துக் கொளுத்தினர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்