எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.10 - அன்று வாரிசுகளுக்கு பதவி வாங்க டெல்லிக்கு சென்றவர்கள் இன்று வாரிசுகளை பார்க்க டெல்லிக்கு (திகார்) செல்கிறார்கள் என்றும், தி.மு.க. இப்போது திகார் முன்னேற்றக் கழகமாக மாறி விட்டது என்றும் சின்னசேலம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினரும், அரசு கொறடாவுமான மோகன் சட்டமன்றத்தில் கிண்டலடித்தார்.
தமிழக சட்டசபையில் பட்ஜெட் மீதான விவாதத்தில் பங்கேற்று சின்னசேலம் தொகுதி அ.தி.மு.க. உறுப்பினரும், ஆளும்கட்சி கொறடாவுமான மோகன் பேசியதாவது:
தமிழகத்தின் வாக்காளப் பெருமக்கள் நடந்து முடிந்த சட்டமன்ற பொதுத்தேர்தலில் அலைகடலெனத் திரண்டு வந்து ஜெயலலிதாவை மூன்றாவது முறையாக அரியணை ஏற்றி தமிழகத்தின் ஆட்சிப் பொறுப்பை ஒப்படைத்துள்ளார்கள்.
அ.தி.மு.க.வுக்கு மக்கள் பெருவாரியாக வாக்களித்ததன் மூலம், மைனாரிட்டி தி.மு.கவின் ஊழல் ஆட்சி, ஊரைவிட்டே விரட்டப்பட்டுவிட்டது; குடும்ப ஆதிக்கத்தின் கொட்டம் குலை நடுங்கி ஒடுங்கிப் போய்விட்டது. குடும்ப வாரிசுக்கு பதவி கேட்டு டெல்லிக்குப் போனவர்கள் இப்போதும் டெல்லிக்குப் போய்க்கொண்டுதான் இருக்கிறார்கள். எதற்காக? திகார் சிறையைப் பார்வையிடுவதற்காக. தி.மு.க. இப்போது திஹார் முன்னேற்ற கழகமாக மாறிக்கொண்டு இருக்கிறது.
இந்த நிதிநிலை அறிக்கையானது, கடந்த கால மைனாரிட்டி ஆட்சியாளர்கள் கஜானாவை காலி செய்துவிட்டு, களஞ்சியத்திலே சாதனை செய்துள்ளதாக கூறி, சோதனைகளை உருவாக்கி சென்றுள்ளதன் மத்தியில், மக்களின் மனநிலைக்கேற்ப தயாரிக்கப்பட்ட பாராட்டிற்குரிய உன்னத நிதிநிலை அறிக்கையாகும். இந்த நிதிநிலை அறிக்கையை முழுமையாக பாராட்டுவதோடு, அதிலே இருக்கின்ற பல்வேறு உணர்வுகளை நான் இந்த நேரத்தில் பகிர்ந்து கொள்வது என்னுடைய கடமையாக இருக்கும் என்று நான் கருதுகிறேன்.
பணம் பாதாளம் வரை பாயும் என்ற பழமொழியை உடைத்தெறிந்து, ஜெயலலிதா 3-வது முறையாக முதல்வராகப் பதவியேற்றவுடன், தேர்தல் வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில் 7 திட்டங்களை அறிவித்தார்கள் .
மேலும், மற்றொரு வாக்குறுதியை நிறைவேற்றும் வகையில், மீன்பிடி அல்லாத காலங்களில் மீனவக் குடும்பம் ஒன்றுக்கு 4,000 ரூபாய் சிறப்பு உதவித் தொகை வழங்கப்படும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. மீனவ மக்களிடையே பெரும் வரவேற்பினை பெற்றுள்ளது. மேற்கண்ட திட்டங்கள் அனைத்தும் ஏழை எளிய மக்களின் வாழ்வில் ஒளியேற்றும் மகத்தான திட்டங்களாகும்.
இதுபோன்று தேர்தல் அறிக்கையில் அறிவித்திருந்த வாக்குறுதியை உரிய காலத்தில் நிறைவேற்றுவதற்கு ஏதுவாக சிறப்பு திட்டங்கள் அமலாக்கத் துறை என்று ஒரு புதிய துறையை உருவாக்கி, அரசின் நலத்திட்டங்கள் விரைவில் மக்களை நேரடியாக சென்றடைய எடுத்த முயற்சி உங்களை ஜெயலலிதா தவிர இதுவரை வேறு எந்த அரசும் செய்திராத ஓர் அரிய சாதனையாகும்.
மத்திய அரசு சமையல் எரிவாயு சிலிண்டர் ஒன்றின் விலையை 50 ரூபாய் உயர்த்தினாலும், நுகர்வோர் நலன் கருதி, ஜெயலலிதா அதன் விற்பனை விலையைக் கட்டுப்படுத்தும் நோக்குடன், அதன்மீதான மதிப்புக் கூட்டு வரியை 172011 முதல் அறவே இரத்து செய்திருப்பதை, தாய்மார்கள் அனைவரும் வரவேற்று, ஜெயலலிதாவுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொண்டிருக்கிறார்கள்.
ஜெயலலிதா ஆட்சியில், 1992-ம் ஆண்டு அறிவிக்கப்பட்டு செயல்படுத்தப்பட்டு வந்த, தொட்டில் குழந்தைத் திட்டம், பெண் சிசு கொலையை கட்டுப்படுத்த உதவியது. ஆனால், ஜெயலலிதா கொண்டு வந்த திட்டம் என்பதற்காகவே, கடந்த மைனாரிட்டி தி.மு.க. ஆட்சியில் இத்திட்டம் முறையாக செயல்படுத்தப்படாமல் கிடப்பில் போடப்பட்டுவிட்டது. ஜெயலலிதா மூன்றாவது முறையாக ஆட்சிப் பொறுப்பேற்றவுடன், இப்போது மீண்டும் இத்திட்டம் புனரமைக்கப்பட்டு, இனி முதலமைச்சரின் பெண் குழந்தைப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் ஒரு பெண் குழந்தைகான வைப்பு தொகை 50 ஆயிரம் ரூபாயாகவும், இரண்டு பெண் குழந்தைகளுக்காகன வைப்புத்தொகை 25 ஆயிரம் ரூபாயாகவும் உயர்த்தி வழங்கப்படும் என்று ஜெயலலிதா அறிவித்துள்ளது பெண் குழந்தையைப் பெற்றுள்ள பெற்றோர்கள் அனைவரும் பாராட்டி, வரவேற்கிறார்கள்.
மேலும் தேர்தல் அறிக்கையில் அறிவித்தபடி, பெண்களுக்கு மின் விசிறி, மிக்சி, கிரைண்டர் ஆகியவை இலவசமாக பேரறிஞர் அண்ணாவின் பிறந்த நாளான செப்டம்பர் 15 ஆம் தேதி தொடங்கப்படும் என்று இந்த நிதிநிலை அறிக்கையில் ஜெயலலிதாவால் அறிவிக்கப்பட்டிருக்கிறது. இதனால் அரிசி பெறத் தகுதியுடைய 1.83 கோடி குடும்பங்களிலுள்ள தாய்மார்கள் பயனடைவார்கள்.
கிராமப்புறங்களிலுள்ள வீடற்ற ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் 60,000 பசுமை வீடுகளை நடப்பாண்டிலேயே கட்டித்தர 1,080 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்த ஜெயலலிதாவை அவர்களை கிராமப்புற ஏழை எளிய மக்கள் வரவேற்று பாராட்டுகிறார்கள்.
அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பதினொன்று மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பில் பயிலும் மாணவ, மாணவிகள் மற்றும் அரசு, அரசு உதவிபெறும் கல்லூரிகளில் பயிலும் மாணவ, மாணவிகள் அனைவருக்கும் இலவச மடிக் கணினி வழங்கும் அற்புதத் திட்டத்திற்கு பள்ளி மற்றும் கல்லூரி மாணவ, மாணவியர் இடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது.
இதேபோன்று மேல்நிலைக் கல்வி பயிலும் மாணவ, மாணவியர்களிடையே உள்ள இடைநிற்றலைத் தவிர்க்கும்பொருட்டு, அரசுப் பள்ளிகள், அரசு உதவிபெறும் பள்ளிகளில் பத்தாம் வகுப்பு, மேல்நிலை முதலாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா 1,500 ரூபாயும், மேல்நிலை இரண்டாம் ஆண்டு பயிலும் மாணவ, மாணவியருக்கு தலா 2,000 ரூபாயும் சிறப்பு ஊக்கத் தொகை அளித்து, இத்தொகை வைப்பு நிதியாக வைக்கப்படும் என்ற திட்டம் பெற்றோரும், மாணவர்களும் பெரிதும் வரவேற்று உள்ளார்கள். இவ்வாறு மோகன் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி2 days 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 5 hours ago |
ரவா பர்பி1 week 2 days ago |
-
ஆர்வமுடன் வாக்களித்த உலகின் குள்ளமான பெண்
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் உள்ள வாக்குச்சாவடியில் உலகின் குள்ளமான பெண்மணியான ஜோதி ஆம்ஜி என்பவர் வாக்களித்தார்.
-
கடற்படையின் அடுத்த தளபதியாக தினேஷ் குமார் திரிபாதி நியமனம்
19 Apr 2024புது டெல்லி, கடற்படைத் துணைத் தளபதியாக தற்போது பணியாற்றி வரும் வைஸ் அட்மிரல் தினேஷ் குமார் திரிபாதியை வரும் 30-ம் தேதி முதல் கடற்படையின் அடுத்த தளபதியாக அரசு நியமித்துள
-
மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனை ரத்து: மறுவிசாரணைக்கு நீதிமன்றம் உத்தரவு
19 Apr 2024மாலே, மாலத்தீவு முன்னாள் அதிபரின் 11 ஆண்டு சிறை தண்டனையை ரத்து செய்து உத்தரவிட்ட நீதிமன்றம் இந்த வழக்கில் மறுவிசாரணை நடத்தப்பட வேண்டும் என்றும் உத்தரவிட்டுள்ளது.
-
பார்லி. தேர்தல்: சொந்த கிராமத்தில் வாக்களித்த எடப்பாடி பழனிசாமி
19 Apr 2024சேலம், தமிழகம் முழுவதும் நேற்று பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெற்றது.
-
பார்லி. தேர்தல்: முதல்வர் மு.க.ஸ்டாலின் வாக்களித்தார்
19 Apr 2024சென்னை : தமிழகம் மற்றும் புதுச்சேரியில் உள்ள 40 தொகுதிகளில் பாராளுமன்ற தேர்தலுக்கான முதற்கட்ட வாக்குப்பதிவு காலை 7 மணிக்கு தொடங்கி நேற்று நடைபெற்றது. இந்த தேர்தலை
-
பார்லி. தேர்தல்: வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024சென்னை, தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் வாக்களிக்க சென்ற 3 பேர் மயங்கி விழுந்து உயிரிழந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று வாக்களித்த முதல்வர் ரங்கசாமி
19 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரியில் மோட்டார் சைக்கிளில் சென்று தனது வாக்கினை பதிவு செய்தார் அம்மாநில முதல்வர் ரங்காசமி.
-
சைக்கிள் ஓட்டிச்சென்று நடிகர் விஷால் வாக்களிப்பு
19 Apr 2024சென்னை : நடிகர் விஷால் சைக்கிள் ஓட்டிச்சென்று வாக்களித்தது ரசிகர்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
-
கர்நாடகாவில் காங்கிரசில் இணைந்த முன்னாள் எம்.எல்.ஏ.-க்கள் 2 பேர்
19 Apr 2024பெங்களூர், கர்நாடகா மாநிலத்தின் முன்னாள் பா.ஜ.க. எம்.எல்.ஏ.க்கள் இருவர் மலிகாய்யா கட்டேதார், சாரதா மோகன் ஷெட்டி ஆகியோர் நேற்று காங்கிரஸ் கட்சியில் இணைந்தனர்.
-
ம.பி.யில் காங்கிரசின் நகுல் நாத்துக்கு வாக்களிக்க கோரிய பா.ஜ.க. மேயர்
19 Apr 2024சிந்த்வாரா, மத்தியப் பிரதேசத்தின் நட்சத்திர தொகுதியான சிந்த்வாராவில் நேற்று முதல்கட்ட வாக்குப்பதிவு நடந்தது.
-
இன்று திக் விஜயம்: மதுரையில் நாளை மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம்
19 Apr 2024மதுரை : சித்திரை திருவிழாவையொட்டி மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் இன்று திக் விஜயம் நடக்கிறது.
-
இ.வி.எம். குறித்த அச்சம் தேவையில்லை: வாக்குகள் பத்திரமாகவும், பாதுகாப்பாகவும் இருக்கும் : தலைமை தேர்தல் ஆணையர் உறுதி
19 Apr 2024புதுடெல்லி : மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் குறித்த அச்சங்களை மறுத்துள்ள இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ராஜீவ் குமார், “மக்களின் வாக்குகள் பத்திரமாகவும் பாதுகாப்பாகவும
-
அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன்: கட்காரி
19 Apr 2024நாக்பூர், நாக்பூரில் வாக்களித்த பின், தேர்தலில் நான் நிச்சயம் அதிக வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெறுவேன் என்று மத்திய அமைச்சர் நிதின் கட்காரி தெரிவித்தார்.
-
ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்த இந்திய மாணவர்கள் 2 பேர் தவறி விழுந்து உயிரிழப்பு
19 Apr 2024லண்டன், ஸ்காட்லாந்தில் அருவியில் குளித்து மகிழ்ந்த 2 இந்திய மாணவர்கள் தவறி விழுந்து உயிரிழந்தனர்.
-
நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றிதான் : வாக்களித்தப்பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் பேட்டி
19 Apr 2024சென்னை : நீங்கள் நினைப்பது போல இந்தியாவிற்கு வெற்றி தான் என வாக்களித்த பின் முதல்வர் மு.க.ஸ்டாலின் என தெரிவித்தார்.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 19-04-2024.
19 Apr 2024 -
பாராளுமன்ற தேர்தல்: காலையிலேயே வாக்களித்த தமிழக அரசியல் தலைவர்கள்
19 Apr 2024சென்னை, வாக்குப்பதிவு தொடங்குவதற்கு முன்பே அரசியல் கட்சி தலைவர்கள் காத்திருந்து முதல் ஆளாக தங்களது ஜனநாயக கடமையை ஆற்றினர்.
-
பாராளுமன்ற தேர்தல்: ஜனநாயக கடமையாற்றிய திரை பிரபலங்கள்
19 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று நடந்த பாராளுமன்ற தேர்தலில் திரை பிரபலங்கள் பலரும் தங்களது ஜனநாயக கடமையையாற்றினர்.
-
சென்னையில் வாக்களித்த கவர்னர் ஆர்.என்.ரவி மகிழ்ச்சி
19 Apr 2024சென்னை : ஜனநாயகத்தின் மிகப் பெரிய திருவிழா இது.
-
மதுரை சித்திரை திருவிழா: வைகை அணையில் இருந்து தண்ணீர் திறப்பு
19 Apr 2024தேனி : மதுரை சித்திரை திருவிழாவையொட்டி கள்ளழகர் ஆற்றில் இறங்கும் வைபவத்திற்காக வைகை அணையில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.
-
பஞ்சாப்பை வீழ்த்தியது மும்பை
19 Apr 2024சண்டிகர் : பஞ்சாப் கிங்ஸ் அணி எதிரான ஆட்டத்தில் 3 விக்கெட் வித்தியாசத்தில் மும்பை இந்தியன்ஸ் அணியை வீழ்த்தி அபார வெற்றி பெற்றது.
-
ஐ.நா.வில் பாலஸ்தீனத்தை உறுப்பினராக்கும் தீர்மானம்: வீட்டோ அதிகாரம் மூலம் முறியடித்த அமெரிக்கா
19 Apr 2024நியூயார்க், 193 உறுப்பினர்களைக் கொண்ட ஐ.நா.
-
புறக்கணிப்பை கைவிட்டு வாக்களித்த வேங்கைவயல் மக்கள்
19 Apr 2024புதுக்கோட்டை : புதுக்கோட்டை அருகே உள்ள வேங்கைவயல் கிராமத்தைச் சேர்ந்த மக்கள் புறக்கணிக்கும் முடிவைக் கைவிட்டு நேற்று வாக்களித்தனர்.
-
ராமநாதபுரம் தொகுதியில் எனது வெற்றிவாய்ப்பு பிரகாசமாக உள்ளது : வாக்களித்த பிறகு ஓ.பன்னீர்செல்வம் பேட்டி
19 Apr 2024தேனி : கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்று தெரிவித்த ஓ.பன்னீர்செல்வம், கருத்துக்கணிப்புகள் அனைத்தும் பொய்யாகும் என்றும் அவர் தெரிவித்தார்.
-
வாக்குச்சாவடிக்கு முதல் ஆளாக வந்து வாக்களித்த நடிகர் அஜித்
19 Apr 2024சென்னை : நடிகர் அஜித் ஜனநாயக கடமையை நிறைவேற்ற வாக்குப்பதிவு தொடங்கும் 15 நிமிடங்கள் முன்பே திருவான்மியூர் வாக்குச்சாவடிக்கு வந்து வாக்கு செலுத்தினார்.