முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

லோக்பால் எதிர்ப்பு: ஹசாரே குழுவினர் பேரணி

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

 

மும்பை,ஆக.11 - மத்திய அரசு நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்துள்ள லோக்பால் மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே தலைமையில் மோட்டார் சைக்கிள் பேரணி மும்பையில் நடைபெற்றது. 

பிரதமர், நீதிபதிகள் உள்ளிட்டோர் லோக்பால் விசாரணை வரம்புக்குள் கொண்டு வரப்பட வேண்டும் என்ற சமூக ஆர்வலர்களின் கோரிக்கையை புறம் தள்ளிய மத்திய அரசு மசோதாவை நாடாளுமன்றத்தில் கடந்த வாரம் தாக்கல் செய்தது. அன்றைய தினமே இதற்கு எதிர்ப்பு தெரிவித்து லோக்பால் மசோதா நகல்களை நாடாளுமன்றத்தின் முன் ஹசாரே உள்ளிட்டோர் தீயிட்டு கொளுத்தினர். வரும் 16 ம் தேதி முதல் டெல்லியில் கோரிக்கைகளை வலியுறுத்தி காலவரையற்ற உண்ணாவிரத போராட்டத்தில் ஈடுபட போவதாக ஹசாரே அறிவித்துள்ளார். 

இந்த நிலையில் மும்பையில் தாதரில் இருந்து ஆசாத் மைதானம் வரையிலான மோட்டார் சைக்கிள் பேரணி நடந்தது. ஹசாரேயும், அரவிந்த் கேஜ்ரிவாலும் திறந்த ஜீப்பில் முன் செல்ல நூற்றுக்கும் மேற்பட்ட வாகனங்களில் அவரது ஆதரவாளர்கள் அணிவகுத்து வந்தனர். பின்னர் நடந்த பொதுக் கூட்டத்தில் அவர் பேசினார். மைதானத்தில் கூடியிருந்தவர்கள் ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக் கொண்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்