முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ப.சிதம்பரத்துடன் டெல்லி போலீஸ் கமிஷனர் சந்திப்பு

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

புதுடெல்லி, ஆக.11 - டெல்லியில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லி போலீஸ் கமிஷனர் குப்தா சந்தித்து பேசினார். டெல்லியில் நேற்று முன்தினம் பா.ஜ.க.வை சேர்ந்த இளைஞர் அணியினர் ஒரு போராட்டத்தை நடத்தினார்கள். அப்போது பாராளுமன்ற வளாகத்தை சுற்றி வளைக்க அவர்கள் முயற்சித்தனர். அவர்களை டெல்லி போலீசார் தடியடி பிரயோகம் மற்றும் கண்ணீர் புகை குண்டு வீச்சு ஆகியவற்றை பயன்படுத்தி கலைத்தனர்.

இதற்கு பா.ஜ.க.வினர் கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். 

பாராளுமன்றத்திலும் இந்த பிரச்சினை குறித்து நேற்று குரல் கொடுக்கப்பட்டது.

இந்த நிலையில் மத்திய உள்துறை அமைச்சர் ப.சிதம்பரத்தை டெல்லி போலீஸ் கமிஷனர் குப்தா நேற்று காலை சந்தித்து பேசியதாக தெரிகிறது.

அப்போது பா.ஜ.க.  இளைஞர் அணியினர் மீது போலீசார் மேற்கொண்ட நடவடிக்கை குறித்து விவாதிக்கப்பட்டதாக கூறப்படுகிறது. 

ஆனால் பா.ஜ.க. வினர் மீதான போலீசார் நடவடிக்கை குறித்து விவாதிக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸ் செய்தி தொடர்பாளர் பகத் தெரிவித்துள்ளார்.  இது வழக்கமான சந்திப்புதான் என்றும் இந்த சந்திப்பின்போது பா.ஜ.க. இளைஞர் அணியினர் மீதான போலீஸ் நடவடிக்கை குறித்து பேசப்படவில்லை என்றும் அவர் கூறினார்.

மேலும் ஊழலுக்கு எதிராக குரல் கொடுத்து வரும் அன்னா ஹசாரேவின் உண்ணாவிரத போராட்டம் குறித்தும் இவர்கள் விவாதித்ததாக கூறப்படுகிறது.  ஆனால் அதிகாரப்பூர்வமான தகவல் எதுவும் வெளியிடப்படவில்லை.

அன்னா ஹசாரே டெல்லியில் உள்ள ஜந்தர் மந்தர் பகுதியிலோ அல்லது வேறு எந்த பகுதியிலோ  உண்ணாவிரதம் இருக்க டெல்லி போலீசார் இன்னும் அனுமதி தரவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்