முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பை குண்டு வெடிப்பு: டூவீலர் திருடியவர் கைது

வியாழக்கிழமை, 11 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

 

மும்பை,ஆக.11 - மும்பை குண்டு வெடிப்பு சம்பவத்துக்கு பயங்கரவாதிகள் பயன்படுத்திய இரு சக்கர வாகனத்தை திருடியதாக ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். அவர் மகராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை போலீசாரால் கைது செய்யப்பட்டதாக மத்திய உள்துறை வட்டாரங்கள் தெரிவித்தன. எனினும் இரு சக்கர வாகனத்தை திருடியவருக்கு தீவிரவாதிகள் பற்றிய தகவல்கள் தெரிந்து இருக்க வாய்ப்பில்லை எனவும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன. வாகனத்தை திருடியவர் கைது செய்யப்பட்டதன் மூலம் இந்த வழக்கில் குற்றவாளிகளை கண்டறிவதில் எவ்வித முன்னேற்றமும் இருக்காது என்றே தெரிகிறது. 

மும்பையில் ஒபேரா ஹவுஸ், ஜவேரி பஜார், தாதர் பேருந்து நிலைய பகுதிகளில் கடந்த ஜூலை மாதம் 13 ம் தேதி குண்டுகள் வெடித்தன. இதில் 27 பேர் உயிரிழந்தனர். இநத வழக்கை மகராஷ்டிரா தீவிரவாத எதிர்ப்பு படை விசாரித்து வருகிறது. 

ஜவேரி பஜார் பகுதியில் குண்டு வெடித்த சமயத்தில் இருந்த வாகன உரிமையாளரிடம் ஏற்கனவே போலீசார் விசாரணை நடத்தியுள்ளனர். அதே இடத்தில் சேதமடைந்திருந்த மற்றொரு வாகனத்தின் உரிமையாளரான அர்ஜூன்சிங் என்பவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். எனினும் குண்டு வெடிப்பதற்கு சில மணி நேரத்திற்கு முன்னால் தனது இரு சக்கர வாகனம் திருடு போனது என அவர் போலசாரிடம் கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்