முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஏர்வாடி தர்காவில் பக்தரிடம் நகை திருட்டு

வெள்ளிக்கிழமை, 19 ஆகஸ்ட் 2011      ஆன்மிகம்
Image Unavailable

கீழக்கரை,ஆக.19 - ராமநாதபுரம் மாவட்டம் ஏர்வாடி தர்காவில் தங்கியிருந்த பக்தரிடம் இருந்து சுமார் 214 பவுன் நகை திருடப்பட்டுள்ளது. விழுப்புரம் மாவட்டம் கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஜான்பாட்சா என்பவரது மனைவி முகமீதா, வேண்டுதலை நிறைவேற்ற ஏர்வாடி தர்கா பெண்கள் தொழுகை பள்ளி அருகே தங்கி வந்துள்ளார். இந்த நிலையில் தனது பையை வைத்து விட்டு அருகில் இருந்தவர்களிடம் பேசிக் கொண்டிருந்தாராம். சில நேரம் கழித்து பையை பார்த்த போது பை காணமால் போயிருந்தது கண்டு அதிர்ச்சியடைநதார். பையில் 214 பவுன் நகைகள் மற்றும் உடைகள் மர்ம நபர்களால் திருடி சென்றிருப்பது தெரியவந்தது. இது குறித்து ஏர்வாடி காவல் நிலையத்தில் புகார் தெரிவிக்கப்பட்டதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்