முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

ஊழலுக்கு எதிரான போராட்டம் என் உயிரே போனாலும் தொடரும்-அன்னா ஹசாரே

சனிக்கிழமை, 20 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 20 - திகார் ஜெயிலில் இருந்து வெளியில் வந்த அன்னா ஹசாரே, மக்கள் மத்தியில் நன்றி தெரிவித்தார். பின்னர் அவர் வேசுகையில் ஊழலுக்கு எதிரான சுதந்திரப்போராட்டம் தொடங்கிவிட்டது என்றார்.
நமது நாடு முழுமையாக விடுதலை பெற வேண்டும் என்று மகாத்மா காந்தி விரும்பினார். ஆனால் இந்தியா இன்னமும் விடுதலை அடையவில்லை. அதற்கான விடுதலைப்போராட்டம் ஆகஸ்டு 16 ம்தேதி தொடங்கிவிட்டது இந்த சுதந்திர போராட்ட உணர்வை நாம் குறைவிட்டுவிடக்கூடாது. நமது நாட்டிலிருந்து ஊழலை அறவே அகற்ற வேண்டும் என்று நாம் விரும்புகிறோம். இதற்காக ஒவ்வொருவரும் போராட முன்வரவேண்டும். நீங்கள் எல்லோரும் என்னுடன் சேர்ந்து போராட ராம்லீலா மைதானத்திற்கு வருமாறு அழைக்கிறேன். நீங்கள் வரவேண்டும் என விரும்புகிறேன். நமது இந்த போராட்டத்தால் தனிப்பட்ட யார் ஒருவருக்கும் எந்த இடையூறும் ஏற்பட்டு விடக்கூடாது. அமைதியாந முறையில் போராட்டத்தை தொடரவேண்டும். நான் உயிரோடு இருந்தாலும் சரி, இல்லாவிட்டாலும் சரி, ஊழலுக்கு எதிரான போராட்டம் இனி தொடர்ந்து நடைபெறும் இப்போது போராட்டம் நடத்துவதற்கான சக்தியை நீங்கள் தான் கொடுத்திருக்கிறீர்கள் இவ்வாறு அன்னா ஹசாரே கூறினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்