எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக.- 20 - டெல்லி ராம்லீலா மைதானத்தில் சமூக சேவகர் அன்னா ஹசாரே வலுவான லோக்பால் மசோதாவை கொண்டுவர கோரி தனது ஆதரவாளர்களுடன் உண்ணாவிரதத்தை துவக்கினார். இதில் ஆயிரக்கணக்கான ஆதரவாளர்களும் பங்கேற்றுள்ளனர். ஊழலுக்கு எதிராக வலுவான லோக்பால் மசோதா ஒன்றை கொண்டுவர வேண்டும் என்று பிரபல சமூக ஆர்வலர் அன்னா ஹசாரே கோரிவருகிறார். இந்த லோக்பால் மசோதா வரம்பிற்குள் பிரதமர், சுப்ரீம் கோர்ட் நீதிபதி ஆகியோரையும் சேர்க்க வேண்டும் என்பதே அவரது நோக்கம். இதற்காக கடந்த 16 ம் தேதி டெல்லியில் உள்ள ஜெ.பி. பூங்காவில் காலவரையற்ற உண்ணாவிரதத்தை ஹசாரே மேற்கொள்ள இருந்தார். ஆனால் அவரது உண்ணாவிரதத்திற்கு டெல்லி போலீசார் 22 நிபந்தனைகளை விதித்திருந்தனர். இந்த நிபந்தனைகளில் 16 நிபந்தனைகளை ஏற்றுக்கொண்ட அன்னா ஹசாரே, 3 நாட்கள் மட்டுமே உண்ணாவிரதம் இருக்க வேண்டும், உண்ணாவிரதத்தில் 5 ஆயிரம் பேருக்குமேல் பங்கேற்கக் கூடாது, இரவு 9 மணிக்குமேல் ஒலிபெருக்கியை பயன்படுத்தக்கூடாது என்பன உள்ளிட்ட 6 நிபந்தனைகளை ஏற்க மறுத்துவிட்டார். இதையடுத்து ஜெ.பி. பூங்காவில் உண்ணாவிரதம் இருக்க அளிக்கப்பட்ட அனுமதியை போலீசார் திரும்பப் பெற்றுக்கொண்டனர். மேலும் 144 தடை உத்தரவையும் பிறப்பித்தனர்.
ஆனால் தடையை மீறி தான் திட்டமிட்டபடி அதே இடத்தில் உண்ணாவிரதம் இருக்கப்போவதாக அன்னா ஹசாரே அறிவித்திருந்தார். இதையடுத்து 16 ம் தேதி காலை அன்னா ஹசாரே கைது செய்யப்பட்டு திஹார் சிறையில் அடைக்கப்பட்டார். ஹசாரேயின் கைது நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவித்து நாடு முழுவதும் அவரது ஆதரவாளர்கள் போராட்டங்களில் ஈடுபட்டனர். இதனால் மத்திய அரசு கலக்கமடைந்தது. சிறையில் இருந்த ஹசாரேவை டெல்லி போலீசார் விடுதலை செய்தனர். ஆனால் அவர் சிறையை விட்டு வெளியே வர மறுத்துவிட்டார். உண்ணாவிரத காலத்தை ஒரு மாதமாக நீடித்துக் கொடுத்தால் மட்டுமே தான் சிறையில் இருந்து வெளியே வருவதற்கு ஒப்புக்கொள்வதாக ஹசாரே கூறியிருந்தார். இதையடுத்து அவரிடம் டெல்லி போலீசார் பேச்சு நடத்தினர். இந்த பேச்சுவார்த்தையின் இறுதியாக அன்னா ஹசாரே 15 நாள் உண்ணாவிரதம் இருக்க அனுமதிப்பது எனவும், அந்த உண்ணாவிரதத்தை ராம் லீலா மைதானத்தில் நடத்திக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டது. இதற்கான போலீஸ் மற்றும் டெல்லி மாநகராட்சி அனுமதிகள் ஹசாரேவுக்கு வழங்கப்பட்டுள்ளன. உண்ணாவிரதத்தில் 25 ஆயிரத்திற்கும் மேற்பட்டவர்களை அனுமதிக்க மாட்டோம் என்று ஹசாரே ஆதரவாளர்கள் டெல்லி போலீசாரிடம் உறுதி அளித்தனர். அதன்படி திஹார் சிறையில் இருந்து நேற்று காலை வெளியே வந்தார். அப்போது சிறை வாசலின் முன்பு அவரது ஆதரவாளர்கள் ஆயிரக்கணக்கில் திரண்டிருந்தனர். அலங்கரிக்கப்பட்ட ஒரு டிரக் வண்டியில் நின்றபடியே சிறையை விட்டு வெளியே வந்த ஹசாரே, தனது ஆதரவாளர்களைப் பார்தது வந்தேமாதரம் என்று கூறி தனது கைகளை அசைத்தார். அப்போது ஆதரவாளர்கள் பலத்த கரகோஷம் செய்தனர். 3 நாட்களுக்கு பிறகு சிறையில் இருந்து வெளியே வந்த ஹசாரே, முதலில் காந்தி சமாதிக்கு சென்றார். அங்கு மகாத்மா காந்திக்கு அஞ்சலி செலுத்திவிட்டு திரும்பிய காந்தியவாதி அன்னா ஹசாரே, ராம்லீலா மைதானத்தை சென்றடைந்தார். அங்கு கூடியிருந்த ஆயிரக்கணக்கான அவரது ஆதரவாளர்கள் அவருக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதையடுத்து அவர் உண்ணாவிரதப் பந்தலில் வந்தமர்ந்தார். நேற்று தொடங்கிய இந்த உண்ணாவிரதத்திற்கு பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. உண்ணாவிரதம் இருக்கும் பகுதியைச் சுற்றி ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர். மேலும் ஒரு மருத்துவக்குழுவும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 18 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 17 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
'சப்சோனிக்' ஏவுகணை வெற்றிகரமாக சோதனை
18 Apr 2024புவனேஸ்வரம், தரையிலிருந்து குறுகிய தூரம் சென்று இலக்கை தாக்கும் சப்சோனிக் ஏவுகணை நேற்று வெற்றிகரமாக சோதனை செய்யப்பட்டதாக டி.ஆர்.டி.ஓ. தகவல் வெளியிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும்: பொது சுகாதாரத்துறை உத்தரவு
18 Apr 2024சென்னை, மருத்துவர்கள் இன்று தயார் நிலையில் இருக்க வேண்டும் என்று பொது சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.