எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, ஆக.- 21 - தமிழக முதல்வரின் சீரிய சிந்தனையால் உதித்த புதிய திட்டமான புதிய தலைமை செயலக கட்டிடத்தை ஏழைகளின் நலனுக்காக பயன்படுத்தும் சிறப்பு மருத்துவமனையாக அமைப்பது வரவேற்கத்தக்கது என்று மு.மு.க. தலைவர் டாக்டர் சேதுராமன் , தமிழ் மாநில முஸ்லிம் லீக் தலைவர் ஷேக் தாவூத், சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் ஆகியோர் பாராட்டு தெரிவித்துள்ளனர். இதுகுறித்து மூ.மு.க. கட்சி தலைவர் டாக்டர் சேதுராமன்வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- சென்னை, அண்ணாசாலை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் ஆயிரம் கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட தலைமை செயலக கட்டிடத்தில், ஏழைகளுக்காக மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியும் அமைப்பது வரவேற்கத்தக்கது. முந்தைய அரசு கட்டிய தலைமை செயலக கட்டிடத்தை ஏழை மக்களுக்கு அர்ப்பணித்துள்ள தமிழக முதல்வர் ஜெயலலிதாவை பாராட்ட வார்த்தைகளே இல்லை என்று அகில இந்திய மூவேந்தர் முன்னணிக் கழக நிறுவனர் தலைவர் டாக்டர் ந.சேதுராமன் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியுள்ளார்.
அவர் மேலும் கூறியதாவது, டெல்லியிலுள்ள எய்ம்ஸ் மருத்துவமனை போன்று பல்துறை சிறப்பு மருத்துவமனை, சென்னையில் அமைக்கப்படும் என்று தமிழக முதல்வர் ஜெயலலிதா அறிவித்துள்ளார். அனைத்து தரப்பு மக்களும் குறிப்பாக ஏழை எளிய மக்கள் பயன்பெறும் வகையில் பல்வேறு நோய்களுக்கு இலவச சிகிச்சை என்பதால் தமிழகம் மட்டுல்லாது ஆந்திரா, கேரளா, கர்நாடகா மாநில மக்களும், கிழக்கு ஆசிய நாடுகளில் இருந்தும் மக்கள் சிகிச்சைக்கு வருவதற்கு வழிவகை ஏற்பட்டுள்ளது. மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்திட டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனைக்கு சென்றிடுவது போல இனி தமிழ்நாட்டிலும் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படித்திட அருகிலேயே அரசு மருத்துவ கல்லூரியும் அமைவதால் மருத்துவ ஆராய்ச்சி படிப்பு படிப்பவர்களுக்கு இந்த அறிவிப்பு வரப்பிரசாதமாக அமையும்.
சுயநலத்துக்காக, தன் பெயரை தம்பட்டம் அடிப்பதற்காக கடந்த ஆட்சியில் கருணாநிதி கட்டிய கட்டிடம் இன்று ஏழைகளுக்கு உயர்தர சிகிச்சை தரும் மையமாக உருவாவதின் மூலம் முதல்வர் ஜெயலலிதா ஒரு வரலாற்று சாதனை நாயகியாக போற்றப்படுவார் என்று டாக்டர் சேதுராமன் கூறியுள்ளார்.
தமிழ்மாநில முஸ்லிம் லீக் தலைவர் எஸ்.ஷேக் தாவூத்:
தமிழக முதல்வர் சட்டபேரவையில் புதிதாக கட்டியுள்ள சட்டப்பேரவை வளாகம், மருத்துவமனையாக மாற்றபட வேண்டுமென்று அறிவிக்கை வெளியிட்டுயிருக்கிறார்.
இது அனைத்து தமிழக மக்களும் வரவேற்று, போற்றக்கூடிய, பாராட்டதக்க செயலாகும். முன்னாள் தி.மு.க. அரசு புதிய சட்டபேரவை கட்டிடம், அரை - குறையாக கட்டி முடித்து சட்டப்பேரவை வளாகத்தையே பார்ப்பவர்கள் எல்லாம், கேலி, கிண்டல் செய்யக்கூடிய அளவிற்கு தண்ணீர்தொட்டி என்றும், தார்பீப்பாய் என்றும் பல கோணங்களிலே விமர்ச்சிக்கத்தக்க வகையில் முற்றுபெறாமலும், செயல்பாடுகள் நடத்தப்பெற முடியாமலும், தலைமை செயலகம் இரு கூறுகளாக பிரிக்கப்பட்டு, செயல்பட முடியாத ஒரு நிலையை உருவாக்கி சென்றுயிருந்தார்கள்.
அதை முதல்வர் ஜெயலலிதா சரியானதொரு ஆய்வை மேற்கொண்டு, அவர்கள் வீணடித்த மக்கள் வரிப்பணத்தை செயல்பாட்டிற்கு கொண்டு வந்து இருக்கிறார்கள். டெல்லியிலே அமைந்துள்ள ஏயிம்ஸ் மருத்துவமனையை போல், பல்நோக்கு மருத்துவ அமைப்புக்களை செயல்படுத்தக்கூடிய, அதிநவீன மருத்துவமனையாக, புதிய தலைமை செயலக கட்டிடம் மாற்றப்படும் என்றும், ஏ பிளாக் மருத்துவமனையாகவும், பி பிளாக் மருத்துவ கல்லூரியாகவும் செயல்படும் என்ற அறிவப்பு, இந்தியாவின் இறையாண்மையும், ஜனநாயக மக்களாட்சியும், எப்படி நடைப்பெற வேண்டும் என்பதற்கு எடுத்துக்காட்டாக அமைந்துள்ள, முன்னோடியான அறிவிப்பாகும்.
மக்களுக்காக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட அ.தி.மு.க. ஆட்சியில் மக்கள் வரிப்பணத்தால் கட்டப்பட்ட புதிய தலைமை செயலகம், மக்களின் நலனுக்காக மருத்துவமனையும், மருத்துவக் கல்லூரியுமாக, மாற்றி அமைத்து, தமிழக மக்களின் ஏகோபித்த மாபெரும் ஜெயலலிதா தான் என்பதை தமிழக முதல்வர் ஜெயலலிதா செயல்வடிவில் நிரூபித்து காட்டியிருக்கிறார். இதை தமிழ் மாநில முஸ்லிம் லீக் உளமாற வாழ்த்தி வரவேற்கிறது.
சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார்:
கடந்த தி.மு.க ஆட்சிக்காலத்தில் அவசரம் அவசரமாக கட்டத் தொடங்கி, கட்டுமானப்பணிகள் முழுமையடையாமல் அரைகுறையான நிலையில் ஆடம்பரமாக பெரும் பொருட்செலவில் துவக்க விழா கொண்டாடி, புதிய தலைமை செயலகம் என்ற பெயரில் கட்டிடம் திறக்கப்பட்டது.
ஆனால், இந்த கட்டிடம் சட்டமன்றம் மற்றும் தலைமை செயலகத்தில் உள்ள 36 துறைகளுக்கும் போதுமானதாக இல்லை என்பதையும், பயன்படுத்தக்கூடிய இடப்பரப்பு குறைவாக இருக்கிறது என்பதையும், இருவேறு கட்டிடங்களில் தலைமை செயலகம் செயல்படுவது சாத்தியமில்லை என்பதையும் கருத்தில் கொண்டு, முதல்வர் புனித செயின்ட் ஜார்ஜ் கோட்டையிலேயே சட்டமன்றமும், தலைமை செயலகமும் இயங்கட்டும் என்று முடிவெடுத்து அந்த வகையிலே சட்டமன்றமும், தலைமை செயலகமும் இயங்கி வருகிறது.
ஆனால் பலநூறு கோடி ரூபாய் செலவில் கட்டப்பட்ட இந்த கட்டிடம், முறையாக, முழுமையாக பயன்படுத்தப்பட வேண்டும் என்று நான் உட்பட பலரும், பல அரசியல் கட்சிகளும் கருத்துக்களை தெரிவித்ததோடு, எப்படியெல்லாம் கட்டிடத்தை பயன்படுத்தலாம் என்று ஆலோசனைகளையும் வழங்கினார்கள்.
ஆனால், அனைவரது எண்ணங்களையும் மிஞ்சும் வகையில் முதல்வர் ஜெயலலிதா இந்த கட்டிடத்தில் ஏ பிளாக் பகுதியின் 97829 சதுர மீட்டர் பரப்பு கொண்ட இடத்தில் தமிழகத்தின் அனைத்து தரப்பு மக்களும், குறிப்பாக ஏழை எளிய மக்கள் பல்வேறு நோய்களுக்கும் தரமான, உயரிய சிகிச்சையினை இலவசமாக பெரும் வகையில், பலதுறை உயர் சிறப்பு மருத்துவமனை ஒன்றை அமைக்க முடிவுசெய்து, சட்டமன்றத்தில் அறிவித்திருப்பது வரலாற்று சிறப்புமிக்க அறிவிப்பு என்பதை இரட்டிப்பு மகிழ்ச்சியோடு தெரிவித்துக் கொள்கிறேன்.
முந்தைய அரசு முறையாக திட்டமிடாமல் அள்ளித் தெளித்தாற்போல் அமைத்த கட்டிடம் என்றாலும், அது விரயம் ஆகாமல் காப்பாற்றப்பட்டது என்ற மகிழ்ச்சி ஒருபுறம், புதுடெல்லி ஏஐஐஎம்எஸ் மருத்துவமனைக்கு இணையாக ஏழை எளிய மக்களுக்கு பயனளிக்கும் வகையில், நவீன வசதிகளுடன், சென்னை நகரின் மையப்பகுதியில், தரமான மருத்துவமனையும், அதையொட்டி பி பிளாக் கட்டிடத்தில் மருத்துவக் கல்லூரியும் அமைய இருக்கிறது என்ற மகிழ்ச்சி மறுபுறம்.
தகுதி வாய்ந்த மருத்துவர்கள், செவிலியர்கள், தொழில்நுட்ப பணியாளர்கள் நவீன உபகரணங்கள் ஆகியவற்றுடன் சுகாதாரமான சுற்றுச்சூழலை கொண்ட தரமான மருத்துவ சேவையை தாரளமாக அனைத்து மக்களுக்கும் வழங்க வேண்டும் என்ற குறிக்கோளுடன், தொலைநோக்கு சிந்தனையுடன் செயல்பட்டு வரும் ஜெயலலிதாவின் வரலாற்று சிறப்புமிக்க இன்றைய அறிவிப்பை நெஞ்சார்ந்த நன்றியுடனும் மனமார்ந்த நல்வாழ்த்துக்களுடனும் பாராட்டி வரவேற்கிறேன்.
இவ்வாறு தலைவர்கள் முதல்வர் ஜெயலலிதாவை பாராட்டி, வாழ்த்து தெரிவித்துள்ளனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 12 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 11 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
இன்று பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் குவிப்பு
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு தமிழகத்தில் முழுவதும் இன்று 19 ஆயிரம் துணை ராணுவப் படையினர் பாதுகாப்பு பணியில் ஈடுபடவுள்ளனர்.
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல் எதிரொலி: ரயில், பேருந்து நிலையங்களில் அலை மோதிய மக்கள் கூட்டம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தல் காரணமாக நேற்று ரெயில், பஸ் நிலையங்களில் பயணிகள் கூட்டம் அலைமோதியது.
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.