முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தமிழகம் முழுவதிலும் நாளை கடையடைப்பு போராட்டம் த.வெள்ளையன் அறிவிப்பு

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, ஆக.- 22 - அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக தமிழகம் முழுவதும் நாளை கடையடைப்பு போராட்டம் நடத்தப்படும் என்று த.வெள்ளையன் கூறினார். தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரவை சார்பாக ஊழலுக்கு எதிராக போராடிவரும் அன்னா ஹசாரேவை ஆதரித்தும், மத்திய அரசை கண்டித்தும் சென்னையில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இந்த ஆர்ப்பாட்டத்திற்கு பேரவை தலைவர் த.வெள்ளையன் தலைமை தாங்கினார். அப்போது அவர் பேசியதாவது:

அன்னா ஹசாரே ஊழலுக்கு எதிராக போராட ஆரம்பித்து ஏறக்குறைய 10 நாட்களுக்கு ஆகிவிட்டபோதிலும், மத்திய அரசு இன்னும் மவுனம் சாதித்துக்கொண்டிருக்கிறது. ஊழலுக்கு எதிராக போராடி வரும் தியாகியும், தேச பக்தருமான அன்னா ஹசாரேவை புறக்கணித்து விட்டது.

காந்திய கொள்கைக்கு ஆதரவாக விடாப்பிடியாக செயல்படும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாகவும், அவரது போராட்டத்திற்கு துணையாகவும் செயல்பட நாமும் களம் இறங்க வேண்டும். இனிமேலும் நாம் மவுனம் சாதித்துக்கொண்டிருக்க முடியாது.

வருகிற 23ம்தேதி (நாளை) அனைத்து அரசியல் கட்சிகளும் தமிழகம் முழுவதும் அன்னா ஹசாரேவுக்கு ஆதரவாக போராட்டங்கள் நடத்த உள்ளன. இந்த போராட்டத்திற்கு ஆதரவளிக்கும் வகையில் நாமும் அன்று கடையடைப்பு போராட்டம் நடத்த வேண்டும். 

இவ்வாறு த.வெள்ளையன் பேசினார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்