முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

கடலோர மாநிலங்களில் புயல் பாதிப்பை தடுக்க மத்திய அரசு ரூ.1, 500 கோடி ஒதுக்கீடு

திங்கட்கிழமை, 22 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுடெல்லி, ஆக.- 22 - நாட்டில் கடலோரமாக இருக்கும் மாநிலங்கள் புயலால் பாதிக்கப்படுவதை தடுக்கும் திட்டத்திற்கு மத்திய அரசு ரூ. ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. நாட்டில் தமிழ்நாடு, கேரளா, ஆந்திரா,மகாராஷ்டிரா,குஜராத், ஒரிசா, மேற்குவங்காளம் ஆகிய மாநிலங்கள் திடீர் திடிரென்று கடலில் உருவாகி வீசும் புயலால் பாதிக்கப்படுகின்றன. கடலோரமாக வசிக்கும் மக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகிறார்கள். சில நேரங்களில் அதிக அளவு உயிரிழப்பும ஏற்படுகிறது. ஏராளமான வீடுகள் அடித்து செல்லப்படுகின்றன. கடலில் மீன்பிடிக்க செல்லும்போதும் கடலோரத்தில் நிறுத்தப்பட்டிருந்தபோதும் ஏராளமான படகுகள் கடலுக்குள் அடித்துச்செல்லப்படுகின்றன. இதனால் மீனவர்கள் பெரிதும் பாதிக்கப்படுகின்றனர். இதை தடுக்கும் வகையில் கடலோர மாநிலங்களில் புயல் தாக்குதலை குறைக்கவும் கடலோரமாக வசிக்கும் மக்களுக்கு புயல் குறித்து முன்னெச்சரிக்கை விடுக்கவும் மத்திய அரசு ஒரு திட்டம் வகுத்துள்ளது. இந்த திட்டத்திற்கு தேசிய புயல் ஆபத்து தடுப்பு திட்டம் என்று பெயர்.  மத்திய அரசு இந்த திட்டத்திற்கு ரூ. ஆயிரத்து 500 கோடி ஒதுக்கீடு செய்துள்ளது. இந்த திட்டத்தின் கீழ் புயல் உருவாகி வீசுவதற்கு முன்பே மக்களுக்கு தெரிவித்து அவர்களை பாதுகாப்பான இடங்களுக்கு அழைத்து சென்று தங்க செய்யும் முறையை நவீனப்படுத்துவது,பாதுகாப்பாக தங்குவதற்கு கட்டிடம் கட்டுவது ஆகியவைகள் உள்ளடக்கியதாக இருக்கும். ஆந்திரா, ஒரிசா ஆகிய மாநிலங்களில் இந்த திட்டம் முதன் முதலில் செயல்படுத்தப்படும். புயல் பாதுகாப்பு மையங்கள், தங்கும் இடங்கள்,சாலை வசதிகள், பாலங்கள் உள்பட அனைத்து வசதிகளும் செய்யப்படும். இந்த திட்டத்திற்கு மொத்தம் ரூ. ஆயிரத்து 496.71 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இதில் இந்தாண்டிற்கு ரூ.246 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. மத்திய உள்துறை அமைச்சகத்தின் பட்ஜெட் நிதியில் இந்த ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. தத்து எடுப்பு திட்ட கடன் அடிப்படையில் உலக வங்கி இந்த திட்டத்திற்கு ரூ.ஆயிரத்து 198.44 கோடி கடன் வழங்கியுள்ளது. 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்