எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 5 - அ.தி.மு.க. பொதுச் செயலாளர் ஜெயலலிதாவை சென்னையில் உள்ள அவரது போயஸ்கார்டன் இல்லத்தில் தே.மு.தி.க. தலைவர் நடிகர் விஜயகாந்த் நேற்று இரவு சந்தித்து பேசினார். தொகுதி பங்கீடு குறித்து இருவரும் 25 நிமிடம் ஆலோசனை நடத்தினார்கள். அப்போது தே.மு.தி.க.வுக்கு 41 சட்டமன்ற தொகுதிகளை ஒதுக்கீடு செய்வதென உடன்பாடு ஏற்பட்டது. இந்த ஒப்பந்தத்தில் ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திட்டுள்ளனர். இந்த கூட்டணி ஏற்படக் கூடாது என்று சிலர் பகல் கனவுகண்டனர். ஆனால் அந்த கனவு பலிக்கவில்லை. அ.தி.மு.க.வுடன் தே.மு.தி.க. இணைந்து தேர்தலை சந்திப்பது உறுதியாகிவிட்டது. இதனால் தி.மு.க. மேலிடம் ஆடிப்போயிருக்கிறது என்பதுதான் மறுக்க முடியாத உண்மை.
ஜெயலலிதா தலைமையிலான அ.தி.மு.க. அணியில் தற்போது ம.தி.மு.க., இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், கிருஷ்ணசாமி தலைமையிலான புதிய தமிழகம் கட்சி, செ.கு.தமிழரசன் தலைமையிலான குடியரசு கட்சி, சேதுராமன் தலைமையிலான மூவேந்தர் முன்னணி கழகம் மற்றும் நடிகர் கார்த்திக்கின் நாடாளும் மக்கள் கட்சி போன்ற கட்சிகள் உள்ளன. இவற்றில் புதிய தமிழகம், குடியரசு கட்சி, சேதுராமன் கட்சி போன்ற கட்சிகளுக்கு தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டு விட்டன. ம.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்ட் கட்சிகள் அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்திவருகின்றன.
இந்த நிலையில்தான் கடந்த 1 ம் தேதி தமிழக சட்டசபைக்கான தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டது. அதன்படி வருகிற ஏப்ரல் மாதம் 13-ம் தேதி வாக்கு பதிவு ஒரே நாளில் நடக்கவிருக்கிறது. ஒருமாதம் கழித்து வாக்கு எண்ணிக்கை மே 13 ம் தேதி நடக்கிறது. இதற்கு பலதரப்பில் இருந்தும் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டாலும், தேர்தல் ஆணையம் மசிவதாக தெரியவில்லை. தேர்தல் தேதியை மாற்ற முடியாது என்று பிடிவாதம் பிடிக்கிறது தேர்தல் ஆணையம்.
பகல்கனவு பலிக்கவில்லை
இந்த நிலையில் அ.தி.மு.க. அணிக்கு தே.மு.தி.க. வருமா வராதா என்ற சந்தேகம் அரசியல் வட்டாரத்தில் நிலவிவந்த நிலையில், சில தினங்களுக்கு முன்பு அக்கட்சி பிரதிநிதிகள் அ.தி.மு.க. முன்னணி தலைவர்களை சந்தித்து பேசினார்கள். அதன்மூலம் தே.மு.தி.க. கட்சி அ.தி.மு.க. அணிக்கு வருவது உறுதியானது. இருந்தாலும்கூட மதுரையில் பேட்டியளித்த மத்திய அமைச்சர் மு.க.அழகிரி தே.மு.தி.க., அ.தி.மு.க. கூட்டணி அமையாது என்பதுபோல பேசினார். விஜயகாந்த் ஒருமுறைகூட அப்படி சொல்லவில்லை என்றும் அழகிரி கூறினார். மேலும் விஜயகாந்தை தூண்டுவதுபோல சில கருத்துக்களை அழகிரி சொல்லிப்பார்த்தார். ஆனால் அழகிரியின் அந்த ஆசை நிறைவேறவில்லை. அவர் பேட்டி கொடுத்த சில மணி நேரத்திலேயே தே.மு.தி.க. தலைவர் விஜயகாந்த் போயஸ்கார்டன் நோக்கி புறப்பட்டார். சரியாக இரவு 9.20 மணிக்கு அவர் போயஸ்கார்டன் வந்தார். அவருடன் அவரது கட்சியின் அவைத்தலைவர் பண்ருட்டி ராமச்சந்திரன், தே.மு.தி.க. இளைஞரணி செயலாளர் சுதீஷ் ஆகியோரும் வந்தனர். பின்னர் விஜயகாந்த், ஜெயலலிதா இல்லத்திற்குள் சென்று அவரை சந்தித்து பூங்கொத்து கொடுத்து பொன்னாடை போர்த்தினார். ஜெயலலிதாவுக்கு அவர் பிறந்தநாள் வாழ்த்தும் கூறியதாக கூறப்படுகிறது. பின்னர் இருவரும் தொகுதி பங்கீடு குறித்து பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த பேச்சுவார்த்தை சுமார் 25 நிமிடம் நீடித்தது. அப்போது இருகட்சிகளுக்கும் இடையே தொகுதி பங்கீடு குறித்து முக்கிய முடிவும் எடுக்கப்பட்டது. அதன்பிறகு விஜயகாந்த் சிரித்துக்கொண்டே வெளியே வந்தார். ஆனாலும் அவர் நிருபர்களுக்கு பேட்டி தரவில்லை. எல்லாம் மேடம் சொல்வார்கள் என்று கூறிவிட்டு விஜயகாந்த் தனது வீட்டுக்கு புறப்பட்டுச் சென்றார். 2005 ல் கட்சி தொடங்கிய விஜயகாந்த், ஜெயலலிதாவை சந்திப்பது இதுவே முதல்முறை என்பது குறிப்பிடத்தக்கது.
சூளுரைத்த விஜயகாந்த்
தி.மு.க.வை ஆட்சிக்கு வரவிடமாட்டேன் என்று மேடைகளில் சூளுரைத்தவர் விஜயகாந்த். அந்த எண்ணத்தோடும் தமிழகத்தில் ஜெயலலிதா தலைமையில் நல்லாட்சி மலரவேண்டும் என்ற எண்ணத்தோடும் நேற்று போயஸ்கார்டன் வந்து அ.தி.மு.க.வுடன் தொகுதி பங்கீடு செய்துகொண்டார் விஜயகாந்த். இவரது தலைமையிலான தே.மு.தி.க.வுக்கு மொத்தம் 41 சட்டமன்ற தொகுதிகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளன. இதுகுறித்து ஜெயலலிதாவும், விஜயகாந்த்தும் கையெழுத்திட்ட உடன்பாடு பின்னர் வெளியிடப்பட்டது. அதில் கூறியிருப்பதாவது:-
13.4.2011 அன்று தமிழகத்தில் நடைபெற உள்ள சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு அ.தி.மு.க.வுக்கும், தே.மு.தி.க.வுக்கும் இடையே இன்று (4.3.2011) தேர்தல் உடன்பாடு ஏற்பட்டுள்ளது. அந்த ஒப்பந்தப்படி அ.தி.மு.க. தலைமையிலான கூட்டணியில் தே.மு.தி.க.வுக்கு 41 தொகுதிகள் ஒதுக்கப்படும் என்று தீர்மானிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அந்த உடன்பாட்டில் கூறப்பட்டுள்ளது. இந்த உடன்பாட்டில் இருதலைவர்களும் கையெழுத்திட்டுள்ளனர். ஜெயலலிதாவை விஜயகாந்த் சந்தித்தபோது அ.தி.மு.க. தரப்பில் ஒ.பன்னீர்செல்வம், கே.ஏ.செங்கோட்டையன் ஆகியோர் உடனிருந்தனர். இந்த உடன்பாடு ஏற்பட்டதை அடுத்து இரு கட்சி தொண்டர்கள் மத்தியிலும் உற்சாக வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. இந்த கூட்டணி ஏற்படக் கூடாது என்று பலர் கனவு கண்டார்கள். ஆனால் அவர்களது கனவு பொய்த்துப்போனதுதான் மிச்சம். இன்னும் சொல்லப்போனால் தி.மு.க. -காங்கிரஸ் கூட்டணிதான் இன்னமும் இழுபறியிலேயே இருக்கிறது. அ.தி.மு.க.-தே.மு.தி.க கூட்டணியோ உடனடியாக ஏற்பட்டு மக்கள் மத்தியில் மகிழ்ச்சி அலையை ஏற்படுத்தி உள்ளது. இந்த கூட்டணி மகத்தான வெற்றிபெறும் என்பதில் எள்ளளவும் ஐயமில்லை.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி12 hours 50 sec ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி4 days 11 hours ago |
ரவா பர்பி1 week 13 hours ago |
-
ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும்: அண்ணாமலை
17 Apr 2024கோவை : ஜூன் 4-ம் தேதியிலிருந்து 500 நாட்களில் கோவையில் 100 வாக்குறுதிகள் நிறைவேற்றப்படும் என்று அண்ணாமலை தெரிவித்துள்ளார்.
-
இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வந்தால் சி.ஏ.ஏ. ரத்து செய்யப்படும் : மம்தா பானர்ஜி வாக்குறுதி
17 Apr 2024புதுடெல்லி : இன்டியா கூட்டணி ஆட்சிக்கு வாக்களித்தால் தேசிய குடிமக்கள் பதிவேடு (என்ஆர்சி), குடியுரிமை திருத்தச் சட்டம் (சிஏஏ) ஆகியவற்றை ரத்து செய்வோம் என திரிணமூல் காங்க
-
நயினார் நாகேந்திரனுக்கு எதிரான வழக்கு: சென்னை ஐகோர்ட்டில் இன்று விசாரணை
17 Apr 2024சென்னை : நயினார் நாகேந்திரனை தகுதி நீக்கம் செய்யக்கோரிய மனு மீதான விசாரணை இன்று நடைபெறும் என சென்னை ஐகோர்ட்டு தெரிவித்துள்ளது.
-
வைரலாகும் ரோகித் விடியோ
17 Apr 2024மும்பை அணியின் முன்னாள் கேப்டன் ரோகித் சர்மாவின் விடியோ வைரலாகி வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறை நீட்டிப்பு
17 Apr 2024சென்னை : செந்தில் பாலாஜியின் நீதிமன்ற காவல் 33-வது முறையாக நீட்டிக்கப்பட்டள்ளது. வரும் 22ம் தேதி நேரில் ஆஜர்படுத்த நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார்.
-
துப்பாக்கிச்சூடு சம்பவம்: சல்மான் கானை நேரில் சந்தித்து உறுதியளித்த முதல்வர் ஏக்நாத்
17 Apr 2024மும்பை : பாலிவுட் நடிகர் சல்மான் கான் வீட்டு முன் துப்பாக்கிச்சூடு நிகழ்வு நடந்த நிலையில், அவரது வீட்டுக்கு மகாராஷ்டிரா முதலமைச்சர் ஏக்நாத் ஷிண்டே நேரில் சென்று பாதுகாப
-
தமிழகத்தில் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் வரும் 23-ம் தேதி வரை மிதமான மழைக்கு வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
நிதானத்தை கடைபிடியுங்கள்: இஸ்ரேல் பிரதமரிடம் ரிஷி சுனக் வலியுறுத்தல்
17 Apr 2024லண்டன் : ஈரான் தாக்குதல் விவகாரத்தில் நிதானத்தை கடைபிடிக்குமாறு இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகுவிடம், இங்கிலாந்து பிரதமர் ரிஷிசுனக் தொலைபேசியில் வலியுறுத்தி உள்ளார்.
-
தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, பார்லி. தேர்தல் முடியும் வரை எக்ஸ் பதிவுகள் இடைநிறுத்தம்
17 Apr 2024சென்னை : தேர்தல் ஆணையத்தின் உத்தரவின்படி, தேர்தல் முடியும் வரை அரசியல் கட்சிகள், தலைவர்கள் வெளியிட்ட 4 பதிவுகளை இடைநிறுத்தம் செய்வதாக எக்ஸ் நிர்வாகம் தெரிவித்துள்ளது.
-
கோவாவில் ரூ.1,400 கோடி மதிப்பில் சொத்து காட்டிய பா.ஜ. வேட்பாளர்
17 Apr 2024பனாஜி : கோவாவில் பா.ஜ., சார்பில் போட்டியிடும் பெண் ஒருவர், கணவருடன் சேர்ந்து ரூ,1,400 கோடி மதிப்புள்ள சொத்துகள் உள்ளதாக பிரமாணப் பத்திரத்தில் கூறியுள்ளார்.
-
தமிழகத்தில் இதுவரை ரூ. 1,297 கோடி பணம், தங்கம் பறிமுதல்: சாகு தகவல்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலையொட்டி நடைபெற்ற சோதனையில் தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி பணம், தங்கம், பொருட்கள் உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தமிழக தலைமை த
-
சேலத்தில் இ.பி.எஸ். ரோடு ஷோ
17 Apr 2024சேலம் : சேலத்தில் அ.தி.மு.க. தலைவர் எட்ப்பாடி பழனிசாமி ரோடு ஷோ மூலம் வாக்கு சேகரித்தார்.
-
அரசியலை பணம் குவிக்கும் தொழிலாக மாற்றுகின்றனர் : பிரசாரத்தில் சீமான் வேதனை
17 Apr 2024சென்னை : 'அரசியலை பணம் குவிக்கும் ஒரு தொழிலாக மாற்றுகின்றனர்' என நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான் குற்றம் சாட்டியுள்ளார்.
-
எல்லோருக்கும் சமமான கல்வி கிடைக்க இண்டியா கூட்டணிக்கு வாக்களியுங்கள் : கனிமொழி எம்.பி. வேண்டுகோள்
17 Apr 2024திருச்செந்தூர் : எல்லோருக்கும் சமமான கல்வியை தருவதற்காக இண்டியா கூட்டணிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும் என்று திருச்செந்தூரில் கனிமொழி எம்.பி.
-
டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
17 Apr 2024ஜெய்பூர் : டோனி, கோலி போல கடைசி வரை நம்பிக்கையுடன் இருந்தேன் : ஆட்ட நாயகன் ஜாஸ் பட்லர் நெகிழ்ச்சி
31-வது லீக் ஆட்டம்...
-
கடந்த ஒரு மாதமாக அரசியல் கட்சியினர் தீவிர வாக்குசேகரிப்பு: தமிழகத்தில் பாராளுமன்ற தேர்தல் பிரசாரம் ஓய்ந்தது : 21 மாநிலங்களில் நாளை வாக்குப்பதிவு
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலை முன்னிட்டு கடந்த ஒரு மாதமாக நடைபெற்ற அரசியல் கட்சிகளின் தேர்தல் பிரசாரம் நேற்று மாலை 6 மணியுடன் ஓய்ந்தது.
-
தமிழகத்தில் ஒரே நாளில் ரூ.400 கோடிக்கு மது விற்பனை
17 Apr 2024சென்னை : தமிழகத்தில் நேற்று முன்தினம் ஒரே நாளில் ரூ. 400 கோடிக்கு மது விற்பனையாகி உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
இருசக்கர வாகனத்தில் சென்று வாக்கு சேகரித்த நடிகை நமிதா
17 Apr 2024சென்னை : இருசக்கர வாகனத்தில் பேரணியாக சென்று நடிகை நமிதா வாக்கு சேகரித்தார்.
-
கோவையில் தான் மத்திய பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் : அமைச்சர் உதயநிதி பிரசாரம்
17 Apr 2024திருப்பூர் : கோவையில் தான் மத்திய பாசிச பா.ஜ.க. ஆட்சிக்கு முடிவுரை எழுதவுள்ளோம் என்று அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் பேசினார்.
-
இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பில் ரொக்கம், தங்கம் பறிமுதல்: 44,800 வாக்குச்சாவடிகள் வெப் கேமிராக்கள் மூலம் கண்காணிப்பு : தமிழக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தகவல்
17 Apr 2024சென்னை : 'தமிழகத்தில் இதுவரை ரூ.1,297 கோடி மதிப்பிலான ரொக்கம், தங்கம், வெள்ளி உள்ளிட்டவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன' என தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவி
-
இண்டியா கூட்டணிக்கு வாக்களிக்க ஜெய்பீம் பட இயக்குநர் வேண்டுகோள்
17 Apr 2024சென்னை : பாராளுமன்ற தேர்தலில் இண்டியா கூட்டணி கட்சிகளின் வேட்பாளர்களுக்கு வாக்களிக்குமாறு மக்களுக்கு ஜெய்பீம், வேட்டையன் பட இயக்குநர் த.செ.ஞானவேல் வேண்டுகோள் விடு
-
ராம நவமி: அயோத்தி கோவில் பால ராமர் சிலையின் நெற்றியில் விழுந்த சூரிய ஒளி : டேப்லெட்டில் பிரதமர் மோடி தரிசனம்
17 Apr 2024அயோத்தி : ராமநவமியையொட்டி அயோத்தி கோவிலில் பால ராமர் சிலையின் நெற்றியில் சூரிய ஒளி விழும் அபூர்வ நிகழ்வு நடந்தது. இதனை ஏராளமான பக்தர்கள் கண்டு தரிசித்தனர்.
-
இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளது: சர்வதேச நிதியம் பாராட்டு
17 Apr 2024வாஷிங்டன் : இந்திய பொருளாதாரம் வலுவாக உள்ளதாக சர்வதேச நாணய நிதியம் பாராட்டு தெரிவித்துள்ளது.
-
ஜாஸ் பட்லர் அதிரடி சதம்: ராஜஸ்தான் அணி வெற்றி
17 Apr 2024ஜெய்பூர் : கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு எதிரான ஆட்டத்தில் 2 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வெற்றி வாகை சூடியது.
-
தமிழையும், தமிழரையும் நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் : வீடியோ வெளியிட்டு முதல்வர் மு.க.ஸ்டாலின் பேச்சு
17 Apr 2024சென்னை : தமிழையும், தமிழரையும் உண்மையாக நேசிக்கும் ஆட்சி டெல்லியில் அமைய வேண்டும் என்று முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.