எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை ஆக.23 - தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா நேற்று (22.8.2011) தலைமைச் செயலகத்தில், தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 45 கோடியே 25 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களைக் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார். தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா காவல் துறையில் பல்வேறு புதிய கட்டமைப்புகளையும், நவீன தொழில்நுட்பங்களையும் ஏற்படுத்தி இந்தியாவிலேயே தமிழக காவல் துறையை முதன்மையான காவல் துறையாக மாற்றுவதற்கு பல்வேறு முனைப்பான திட்டங்களை தீட்டி செயல்படுத்தி வருகிறார். சென்னை மாவட்டம் செயின்ட் தாமஸ் மவுண்ட், காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர், திருவள்ளூர் மாவட்டம் வெங்கல், திருச்சி மாவட்டம் சோமரசன்பேட்டை, அரியலூர் மாவட்டம் இரும்புலிகுறிச்சி, பெரம்பலூர் மாவட்டம் பாடலூர், மதுரை மாவட்டம் திருமங்கலம், சிவகங்கை மாவட்டம் மதகுப்பட்டி, கல்லல், புழுதிப்பட்டி மற்றும் வந்தி, திண்டுக்கல் மாவட்டம் அம்மைநாயக்கனூர் மற்றும் தாடிக்கொம்பு, விருதுநகர் மாவட்டம் மாரனேரி, திருநெல்வேலி மாவட்டம் பத்தமடை, ஈரோடு மாவட்டம் தாளவாடி மற்றும் அம்மாபேட்டை, திருப்ர் மாவட்டம் தளி, இராமநாதபுரம் மாவட்டம் தொண்டி, தங்கச்சிமடம், பரமக்குடி ஆகிய இடங்களில் 6 கோடியே 59 லட்சத்து 98 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 21 காவல்நிலைய புதிய கட்டடங்களையும், காஞ்சிபுரம் மாவட்டம் மேல்மருவத்தூர், கடலூர் மாவட்டம் சேத்தியா தோப்பு, தஞ்சாவூர் மாவட்டம் பாபநாசம், சிவகங்கை மாவட்டம் திருப்பத்தூர் மற்றும் மானாமதுரை, தேனி மாவட்டம் உத்தமபாளையம், கோவை மாவட்டம் ஆர்.எஸ். புரம் மற்றும் இராமநாதபுரம் மாவட்டம் பரமக்குடி ஆகிய இடங்களில் ஒரு கோடியே 62 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ள 8 மகளிர் காவல்நிலையங்களையும் தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.
மேலும் திருவள்ளூர் மாவட்டம் வீராபுரம் தமிழ்நாடு சிறப்பு காவல்படை குடியிருப்பு பகுதியில் 104 குடியிருப்புகள், சேலம் மாநகர் சூரமங்கலத்தில் 16 குடியிருப்புகள், திருவண்ணாமலை மாவட்டம் பெரனமல்லூரில் 23 குடியிருப்புகள், பெரம்பலூர் மாவட்டத்தில் 11 குடியிருப்புகள், புதுக்கோட்டை மாவட்டம் விராலிமலையில் 20 குடியிருப்புகள், திருவாரூர் மாவட்டம் திருவாரூரில் 8 குடியிருப்புகள், நன்னிலத்தில் 26 குடியிருப்புகள் மற்றும் முத்துப்பேட்டையில் 3 குடியிருப்புகள், திருநெல்வேலி மாவட்டம், வள்ளியூரில் 1 குடியிருப்பு, கடையநல்லூரில் 3 குடியிருப்புகள், கன்னியாகுமரி மாவட்டம் மணவாளக்குறிச்சியில் 6 குடியிருப்புகள், நாமக்கல் மாவட்டம் வெண்ணாந்தூரில் 12 குடியிருப்புகள், கிருஷ்ணகிரி மாவட்டம் ஆயுதப்படை குடியிருப்பில் 72 குடியிருப்புகள், ஓசூரில் 96 குடியிருப்புகள், திருப்ர் மாவட்டம் குமாரலிங்கத்தில் 7 குடியிருப்புகள், மதுரை மாவட்டம் கீழவளவில் 7 குடியிருப்புகள், கோட்டம்பட்டியில் 19 குடியிருப்புகள், காஞ்சிபுரம் மாவட்டம் பாலூரில் 23 குடியிருப்புகள், அச்சரப்பாக்கத்தில் 23 குடியிருப்புகள் என 480 புதிய காவலர் குடியிருப்புகளும், கடலூர் மாவட்டம், கேப்பர்மலைப் பகுதியில் 67 சிறைக் காவலர் குடியிருப்புகளும் புதிதாக கட்டப்பட்டுள்ளன.தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தால் 31 கோடியே 85 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்ட மேற்கண்ட 547 புதிய குடியிருப்புகளை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள். மதுரை மாவட்டத்தில் மாவட்ட காவல் அலுவலக புதிய கட்டடம், திருச்சி மாவட்டத்தில் தனிப்பிரிவு மற்றும் குற்றப்புலனாய்வு பிரிவுகளுக்கான புதிய அலுவலகக் கட்டடம், தஞ்சாவூர் மாவட்டத்தில் ஊழல் தடுப்பு மற்றும் கண்காணிப்பு அலுவலக புதிய கட்டடம், தூத்துக்குடி மாவட்டத்தில் பட்டின மருதூர் சோதனைச் சாவடிக்கான புதிய கட்டடம், ஈரோடு மாவட்டத்தில் ஆயுதப்படை அலுவலக புதிய கட்டடம், கோயம்புத்தூர் மாவட்டத்தில், ஆர்.எஸ். புரம், துணை காவல் ஆணையர் அலுவலக கட்டடம் ஆகிய 6 கட்டடங்கள் 5 கோடியே 17 லட்சத்து 44 ஆயிரம் ரூபாய் மதிப்பீட்டில் கட்டப்பட்டுள்ளதை தமிழக முதலமைச்சர் நேற்று தலைமைச் செயலகத்தில் காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்கள்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா தமிழ்நாடு காவலர் வீட்டுவசதி கழகத்தின் மூலம் 26 மாவட்டங்களில் புதிதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள் மற்றும் மாவட்ட காவல்துறை அலுவலகம் ஆகியவற்றிற்கான கட்டடங்களை திறந்து வைத்த நிகழ்ச்சியில், காவல்துறையினர் மற்றும் சிறைத்துறையினருக்காக புதிதாக கட்டப்பட்டுள்ள குடியிருப்புகளில் குடியேறவுள்ள குடும்பத்தினர் சார்பில் தமிழக முதலமைச்சருக்கு நெஞ்சார்ந்த நன்றியினை தெரிவித்துக் கொண்டனர்.
தமிழக முதலமைச்சர் ஜெயலலிதா புதிதாக கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல்துறை அலுவலகம், காவல் நிலையங்கள், மகளிர் காவல் நிலையங்கள், காவலர் குடியிருப்புகள், காவல் துறையின் பிற பிரிவு அலுவலகங்கள் மற்றும் சிறைத்துறையினருக்கான குடியிருப்புக் கட்டடங்களை திறந்து வைத்து பேசியதாவது:-
தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள மதுரை மாவட்ட காவல் அலுவலகக் கட்டடம், 21 புதிய காவல் நிலையக் கட்டடங்கள், துறையின் பிற அலுவலகக் கட்டடங்கள், 8 அனைத்து மகளிர் காவல்நிலையங்கள், 480 காவலர் குடியிருப்புகள், சிறைத்துறையினருக்கான 67 குடியிருப்புகளை திறந்து வைத்ததில் உள்ளபடியே நான் மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். தமிழகத்தில் சிறந்த சட்டம் ஒழுங்கு நிலைமையை பராமரிப்பது எனது தலைமையில் அமைந்துள்ள அரசின் தலையாய கடமையாகும். அதன் ஒரு அங்கமாக இன்று புதியதாக கட்டப்பட்டுள்ள காவல் நிலையங்களும், பிற கட்டடங்களும் திறந்து வைக்கப்பட்டுள்ளன. காவல்துறையில் பணியாற்றுபவர்கள் மக்களுக்கு உற்ற நண்பராகவும், ஆலோசகராகவும் மற்றும் மனிதநேயம் மிக்கவராகவும் பணியாற்ற வேண்டும் என்று காவல்துறையினரை கேட்டுக் கொள்கிறேன். தமிழ்நாட்டிலுள்ள பெண்கள் பொதுவாக காவல்நிலையத்திற்கு செல்லவே அச்சப்படுவார்கள்.
தமிழகத்து மகளிர் எந்தவிதமான அச்ச உணர்வுமின்றி, தயக்கமுமின்றி, காவல்நிலையங்களுக்கு சென்று தங்களுக்குள்ள குறைகளை அங்கே எடுத்துக்கூறி அவற்றிற்கு நிவாரணம் தேடவேண்டும், பரிகாரம் தேடவேண்டும் என்பதற்காகவே முதலில் அனைத்து மகளிர் காவல் நிலையத்தை 1992 ஆம் ஆண்டு நான் தொடங்கிவைத்தேன். அதன் பின்னர் தமிழகமெங்கும் பல அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் துவக்கப்பட்டு நல்ல முறையில் செயலாற்றி வருகின்றன. இன்றைய தினம் 8 புதிய அனைத்து மகளிர் காவல்நிலையங்களின் கட்டடங்களை திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். காவலர்களுக்கான குடியிருப்புகள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும், அப்போது தான் அவர்கள் பணியில் முழு ஈடுபாட்டுடன் செயல்பட இயலும். இதனை கருத்தில் கொண்டு தற்பொழுது தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் மூலம் கட்டப்பட்டுள்ள 480 புதிய காவலர் குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே உவகை கொள்கிறேன். காவல்துறையினருக்கு எனது தலைமையிலான அரசு பல்வேறு சலுகைகளை அளித்து வருகிறது. காவல்துறையினர் பொதுமக்களுக்கு உற்ற நண்பாக இருந்து தங்கள் பணிகளை செவ்வனே ஆற்ற வேண்டுமென்று கேட்டுக் கொள்கிறேன். சிறைதுறையினரின் குடியிருப்புக்கள் அவர்கள் பணிபுரியும் இடங்களுக்கு அருகிலேயே இருக்க வேண்டும். அப்போது தான் அவர்கள் கைதிகளை பாதுகாக்கும் பணியில் தங்களை முழு ஈடுபாட்டுடன் ஈடுபடுத்திக் கொள்ள முடியும். இதனை கருத்தில் கொண்டு தற்பெழுது கட்டப்பட்டுள்ள சிறைத்துறையினருக்கான 67 புதிய குடியிருப்புகளை இன்று திறந்து வைத்ததில் நான் உள்ளபடியே மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறேன். இத்தருணத்தில் சிறைத்துறையினர் தங்கள் பணிகளை சிறந்த முறையில் ஆற்ற வேண்டும் எனக் கேட்டுக் கொண்டு அனைவருக்கும் எனது நல்வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன்.
இந்நிகழ்வின்போது, செய்தி, சட்டம், நீதிமன்றங்கள் மற்றும் சிறைத் துறை அமைச்சர், தலைமைச் செயலாளர், உள்துறைச் செயலாளர், காவல்துறை தலைமை இயக்குநர், சிறைத் துறை தலைவர், தமிழ்நாடு காவலர் வீட்டு வசதி கழகத்தின் தலைவர், மற்றும் உயர் அலுவலர்கள் உடனிருந்தனர்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்6 hours 1 sec ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி3 days 10 min ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி6 days 23 hours ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 20-04-2024.
20 Apr 2024 -
தென் சென்னைக்கு உட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குபதிவு நடத்த தமிழிசை கோரிக்கை
20 Apr 2024சென்னை : தென் சென்னை பாராளுமன்ற தொகுதிக்குட்பட்ட 13-வது வாக்குச்சாவடியில் மீண்டும் வாக்குப்பதிவு நடத்த வேண்டும் என்று தமிழிசை சவுந்தரராஜன் கோரிக்கை விடுத்துள்ளார். 
-
சென்னையில் ஓட்டுப்பதிவில் நகர்ப்புறங்களில் சுணக்கம் : ஜெ.ராதாகிருஷ்ணன் விளக்கம்
20 Apr 2024சென்னை : சென்னையில் ஓட்டுப்போடுவதில் நகர்ப்புற மக்கள் இடையே ஒரு சுணக்கம் ஏற்பட்டு உள்ளதாக சென்னை மாநகராட்சி கமிஷனரும், மாவட்ட தேர்தல் அதிகாரியுமான ஜெ.ராதாகிருஷ்ணன் கூறி
-
மாணிக்க மூக்குத்தி மீனாட்சி அம்மனுக்கு மதுரையில் இன்று கோலாகல திருக்கல்யாணம் : ரூ. 30 லட்சத்தில் மலர்களால் மணமேடை அலங்கரிப்பு
20 Apr 2024மதுரை : மதுரை சித்திரை திருவிழாவின் சிகர நிகழ்ச்சியான மீனாட்சி, சுந்தரேசுவரர் திருக்கல்யாணம் இன்று கோலாகலமாக நடக்கிறது. திருக்கல்யாணத்தையொட்டி ரூ.
-
ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் டிரம்பிற்கு எதிராக குழு அமைப்பு: நீதிமன்றத்திற்கு முன்பு ஆதரவாளர் தீக்குளிப்பு
20 Apr 2024வாஷிங்டன், ஆபாச பட நடிகைக்கு பணம் கொடுத்த வழக்கில் அமெரிக்க முன்னாள் அதிபர் டிரம்பிற்கு எதிரான விசாரணை நடைபெற்று வரும் நீதிமன்றத்திற்கு முன்பு அவரது ஆதரவாளர் ஒருவர் தீக
-
எலான் மஸ்கின் இந்திய பயணம் தற்காலிகமாக ஒத்திவைப்பு
20 Apr 2024வாஷிங்டன், டெஸ்லா தலைவர் எலான் மஸ்க் தனது இந்திய பயணத்தை ஒத்திவைத்துள்ளார். ஆண்டின் இறுதியில் இந்தியா வர ஆவலாக உள்ளதாக அவர் கூறியுள்ளார்.
-
பிரியங்காவின் உதவியாளர் பா.ஜ.,வில் இணைந்தார்
20 Apr 2024புதுடில்லி: காங்கிரஸ் கட்சி பொதுச்செயலாளர் பிரியங்காவின் நெருங்கிய உதவியாளர் தஜிந்தர் சிங், அக்கட்சியில் இருந்து விலகி, சில மணி நேரங்களிலேயே பா.ஜ.,வில் இணைந்தார்.
-
24 மணி நேரமும் வாக்கு எண்ணும் மையங்களை கண்காணிக்க வேண்டும் : அ.தி.மு.க.வினருக்கு எடப்பாடி அறிவுறுத்தல்
20 Apr 2024சென்னை : மின்னணு வாக்குப் பதிவு எந்திரங்கள் வைக்கப்பட்டுள்ள வாக்கு எண்ணும் மையங்களை இரவு பகல் பாராமல் சுழற்சி முறையில் 24 மணி நேரமும் கண்காணித்திட வேண்டும் என்று
-
சித்திரை திருவிழாவையொட்டி தஞ்சை பெரிய கோவிலில் நடந்த தேரோட்டம் : மின்கம்பங்களில் சிக்கிய அலங்கார பந்தல்
20 Apr 2024தஞ்சாவூர் : தஞ்சாவூர் பெரிய கோவிலின் சித்திரை பெருவிழாவை முன்னிட்டு தேரோட்டம் நேற்று காலை கோலாகலமாக நடைபெற்றது.
-
நடுவானில் வெடித்து சிதறிய ஹெலிகாப்டர்: கென்யாவில் ராணுவ தளபதி உள்பட 10 பேர் உயிரிழப்பு
20 Apr 2024நைரோபி, கென்யாவில் நடுவானில் ஹெலிகாப்டர் வெடித்து சிதறிய விபத்தில் ராணுவ தளபதி உட்பட 10 பேர் பலியானார்கள்.
-
தமிழகத்தில் 24-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க வாய்ப்பு : சென்னை வானிலை மையம் தகவல்
20 Apr 2024சென்னை : தமிழகத்தில் இன்று 21-ம் தேதி முதல் வரும் 24-ம் தேதி வரை அதிகபட்ச வெப்பநிலை சற்றே குறைந்து ஒருசில இடங்களில் இயல்பை விட 2-3 டிகிரி செல்சியஸ் அதிகமாக இருக்கக்கூடு
-
திருச்சூரில் கோலாகலமாக நடந்த பூரம் திருவிழா: குடை மாற்றும் நிகழ்வை கண்டுகளித்த பக்தர்கள்
20 Apr 2024திருச்சூர், திருச்சூரில் பூரம் திருவிழா கோலாகலமாக நடந்தது. இந்நிகழ்வில் குடை மாற்றும் நிகழ்ச்சியை ஏராளமான பக்தர்கள் கண்டுகளித்தனர்.
-
பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் ஏவுகணையை வழங்கிய இந்தியா
20 Apr 2024மணிலா, ஒப்பந்தத்தின்படி பிலிப்பைன்ஸ் நாட்டுக்கு பிரமோஸ் சூப்பர்சானிக் ஏவுகணையை இந்தியா நேற்று வழங்கியுள்ளது.
-
மதுபான கொள்கை வழக்கு: மணீஷ் சிசோடியாவின் ஜாமீன் மனு மீதான தீர்ப்பு ஒத்திவைப்பு
20 Apr 2024புது டெல்லி, மதுபான கொள்கை வழக்கு தொடர்பாக டெல்லி முன்னாள் துணை முதல்வர் மணீஷ் சிசோடியா மீது சி.பி.ஐ, அமலாக்கத்துறை தாக்கல் செய்துள்ள ஊழல் மற்றும் பணமோசடி வழக்குகள்
-
அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும்: ராகுல் காந்தி
20 Apr 2024பாட்னா : அரசியலமைப்பை அழிக்க நினைக்கும் பா.ஜ.க.வின் முயற்சியை இண்டியா கூட்டணி தடுக்கும் என்று பீகாரில் நடந்த தேர்தல் பிரச்சாரத்தில் ராகுல் காந்தி பேசினார்.
-
தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணியே இருக்காது: மகராஷ்டிராவில் பிரதமர் மோடி பேச்சு
20 Apr 2024மும்பை, தேர்தலுக்கு பிறகு இண்டியா கூட்டணி சரிந்து விழும்.
-
இட ஒதுக்கீட்டு கொள்கை குறித்து மத்திய அமைச்சர் அமித்ஷா கருத்து
20 Apr 2024புது டெல்லி, நாங்களும் இட ஒதுக்கீட்டு கொள்கையை தொட மாட்டோம்.
-
வாக்குச்சாவடியில் விதிமீறல் ? நடிகர் விஜய் மீது புகார்
20 Apr 2024சென்னை, வாக்குச்சாவடியில் விதிமீறல்.? - த.வெ.க. தலைவர் விஜய் மீது புகார்
-
அழகர்கோவிலில் சித்திரை திருவிழா தொடக்கம்: அழகர்மலையிலிருந்து மதுரைக்கு இன்று கள்ளழகர் புறப்படுகிறார் : மூன்றுமாவடியில் நாளை எதிர்சேவை
20 Apr 2024மதுரை : மதுரை அழகர்கோவில் கள்ளழகர் கோவில் சித்திரைத் திருவிழா கோலாகலமாகத் தொடங்கிய நிலையில் இன்று (ஏப். 21) மாலை அழகர்மலையிலிருந்து மதுரைக்கு கள்ளழகர் புறப்படுகிறார்.
-
மகாவீர் ஜெயந்தியையொட்டி செல்வப்பெருந்தகை வாழ்த்து
20 Apr 2024சென்னை : மகாவீர் ஜெயந்தியையொட்டி தமிழக காங்கிரஸ் கமிட்டி தலைவர் செல்வப்பெருந்தகை வாழ்த்து தெரிவித்துள்ளார்.
-
பா.ஜ.க. மீண்டும் ஆட்சியமைத்தால் தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்: மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கருத்து
20 Apr 2024புதுடெல்லி, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் வென்று பாஜக ஆட்சியமைத்தால் வல்லுநர்களுடனான முறையான ஆலோசனைக்குப் பிறகு, தேர்தல் பத்திரங்கள் திட்டம் மீண்டும் கொண்டு வரப்படும்
-
சனாதனம் பற்றிய உதயநிதி பேச்சு: தெலுங்கானா முதல் கண்டனம்
20 Apr 2024ஐதராபாத், சனாதனம் பற்றிய அமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் பேச்சுக்கு தெலுங்கானா முதல்வர் ரேவந்த் ரெட்டி கண்டனம் தெரிவித்துள்ளார்.
-
கறந்த பாலில் பறவை காய்ச்சல் வைரஸ்: உலக சுகாதார நிறுவனம் எச்சரிக்கை
20 Apr 2024வாஷிங்டன், பறவைக் காய்ச்சல் அல்லது எச்5என்1 எனப்படும் வைரஸ், கறந்த பாலில் இருப்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டறிந்து கடுமையான எச்சரிக்கையை விடுத்துள்ளது.
-
பாடும் மோனாலிசா ஓவியம்: இணையத்தில் வீடியோ வைரல்
20 Apr 2024வாஷிங்டன், உலகப் புகழ் பெற்ற மோனாலிசா ஓவியம் ராப் பாடும் வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாக பரவி வருகிறது.
-
தமிழ்நாட்டில் வாக்குப்பதிவு அதிகரித்துள்ள, குறைந்த தொகுதிகளின் விவரம்
20 Apr 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் நடந்து முடிந்த மக்களவைத் தேர்தலில் ஒரு சில தொகுதிகளில் வாக்கு பதிவு சதவீதம் அதிகரித்த நிலையில், ஒரு சில தொகுதிகளில் கடந்த தேர்தலை விட குறைவா