முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நிலத்தை ஒப்படைத்தார் நடிகர் வடிவேல்

புதன்கிழமை, 24 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

 

சென்னை, ஆக.24 - ஓய்வு பெற்ற வங்கி அதிகாரியிடம் ரூ.2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை அபகரித்ததாக வந்த புகாரை அடுத்து அந்த நிலத்தை நடிகர் வடிவேல் ஒப்படைத்தார் என்று சென்னை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார். இதுகுறித்த விபரம் வருமாறு:- 

சென்னை புறநகர் போலீஸ் கமிஷனர் ராஜேஷ் தாசிடம் சென்னை அசோக் நகரை சேர்ந்த ஓய்வு பெற்ற வங்கி உதவி பொதுமேலாளர் பழனியப்பன் ஒரு புகார் மனு கொடுத்து இருந்தார். அதில், தமிழ்நாடு தொழில் முதலீட்டு நிறுவனத்தில் கடந்த 93-​ம் ஆண்டு ராமச்சந்திரன் என்பவர் தொழில் செய்ய இரும்புலியூரில் உள்ள 34 சென்ட் நிலத்தை அடமானம் வைத்து கடன் பெற்று இருந்தார்.

இந்த கடன் தொகையை சரிவர செலுத்தாததால் பிணையாக வைக்கப்பட்ட சொத்தை தொழில் முதலீட்டு நிறுவனம் கடந்த 2006​-ம் ஆண்டு பொது ஏலம் விட்டது. இந்த நிலத்தை, ஏலத்தில் எடுத்து தாம்பரம் சார்​பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்து இருந்தேன்.

இந்த நிலையில், ராமச்சந்திரன் இறந்த பிறகு அவரது குடும்ப உறுப்பினர்கள் பெயரில் அந்த நிலத்திற்கு போலி ஆவணங்களை தயார் செய்யப்பட்டது. அதற்கு நடிகர் சிங்கமுத்து பவர் அட்டர்னி வாங்கி அதனை நடிகர் வடிவேலுக்கு விற்பனை செய்துள்ளார்.

கடந்த 2009-​ம் ஆண்டு எனது நிலத்தில் சிலர் ஆக்கிரமித்து சுற்று சுவர் கட்டுவதாக தகவல் அறிந்து சென்றேன். அப்போது நடிகர் வடிவேல் இந்த சொத்தை கிரயம் பெற்று தனது மனைவி விசாலாட்சிக்கு மாற்றி உள்ளதும் இதனை அவர் தனது மகன் பெயருக்கு மாற்றி இருப்பது தெரியவந்தது.

எனவே, இது குறித்து நடவடிக்கை எடுத்து எனது நிலத்தை மீட்டு தர வேண்டும் என்று அந்த புகார் மனுவில் பழனியப்பன் கூறி இருந்தார்.

இந்த புகார் மனு மீது உரிய நடவடிக்கை எடுக்க புறநகர் கமிஷனர் ராஜேஷ்தாஸ் உத்தரவிட்டார். இது தொடர்பாக மத்திய குற்றப்பிரிவு உதவி கமிஷனர் ரவீந்திரன், இன்ஸ்பெக்டர்கள் சங்கர், ஆல்வின், சப்​இன்ஸ்பெக்டர் மோகன ஈஸ்வரி ஆகியோர் கொண்ட தனிப்படை அமைக்கப்பட்டது.

இந்த தனிப்படையினர் ராமச்சந்திரனின் மனைவி, மகன், நடிகர்கள் சிங்கமுத்து, வடிவேல், அவருடைய மனைவி, மகன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வந்தனர்.

இதுகுறித்து சென்னை போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது நடிகர்கள் வடிவேல், சிங்கமுத்து ஆகியோர் மீது நிலமோசடி புகார் குறித்து கேட்டனர்.

இந்த வழக்கில், இரு தரப்பினருக்கும் சமாதானம் ஏற்பட்டுள்ளதாகவும், நடிகர் வடிவேல், சிங்கமுத்துவிடம் வாங்கிய 2 கோடியே 25 லட்சம் மதிப்புள்ள நிலத்தை வங்கி அதிகாரி பழனியப்பனிடம் திருப்பி ஒப்படைத்து விட்டார். இதனால், அவர்கள் மீதான புகார் வாபஸ் பெறப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீஸ் துணை கமிஷனர் பாஸ்கரன் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்

தீக்காயங்கள் குணமாக | தீப்புண் கொப்பளங்கள் குணமாக | தீப்புண் வடு மறைய | காயம் விரைவில் ஆற - சித்த மருத்துவ குறிப்புக்கள் 2 months 3 weeks ago குழந்தைகளுக்கு குடல் பூச்சி தீர | நாக்கு பூச்சி நீங்க | வயிற்றில் உள்ள நுண்புழுக்கள் அழிய | குடல் புண் குணமாக 6 months 1 week ago பேன் ஒழிய | பேன் ஈர் ஒழிய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 7 months 1 week ago
தொடர் தும்மல் நிற்க | ஜலதோஷம் நீங்க | நீர் கோர்வை குணமாக | சுவாசக்குழாய் அலர்ஜி 7 months 1 week ago மாரடைப்பை தடுக்க | நெஞ்சுவலி குணமாக | இதயம் படபடப்பு நீங்க | இருதயம் பலமடைய 8 months 4 days ago இருமல் குணமாக | இளைப்பு குணமாக | வரட்டு இருமல் | கக்குவான் இருமல் வேகம் குறைய - சித்த மருத்துவ குறிப்புக்கள் 8 months 5 days ago