தென்கிழக்கு நிலக்கரி வயல்கள் நிறுவனத்தில் உள்ள 'முழு நேர ஆலோசகர்' பணிக்கு காலியிடம் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.

புதுடெல்லி, ஆக.28 - அண்ணா ஹசாரே விதித்த நிபந்தனைகளுடனான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விட மத்திய அரசு சம்மதித்திருப்பதால் அண்ணா ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் ஹசாரேயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏதாவது விபரீத விளைவு ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். உண்ணாவிரதத்தை நிறுத்த 3 நிபந்தனைகளை லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும். அது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா ஹசாரே கூறினார். அரசு கீழ்மட்ட ஊழியர்களையும் லோக்பால் மசோதாவுக்குள் உட்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் உரிமை சாசனம் வைக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை அண்ணா ஹசாரே முன்வைத்தார். இந்த நிபந்தனைகளை ஏற்க மத்திய அரசு முதலில் மறுத்தது. பின்னர் இந்த நிபந்தனைகளை ஏற்று பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு இல்லாத தீர்மானம் மூலம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்றுக்கொள்ள அண்ணா ஹசாரே குழுவினர் மறுத்துவிட்டனர். மேலும் இது துரோகச் செயல் என்றும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்ணா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த தீர்மானத்தை குரல் ஓட்டெடுப்புடன் கூடிய கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. இதுகுறித்து அண்ணா ஹசாரே குழுவினர்களுக்கும் மத்திய அரசு தெரிவித்தது. இதனால் அண்ணா ஹசாரே குழுவினர் மகிழ்ச்சியையும் சம்மதத்தையும் தெரிவித்தனர். இதனையொட்டி ஹசாரேயின் நிபந்தனைகள் அடங்கிய தீர்மானத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபையில் தாக்கல் செய்தார். தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மற்றும் இதர கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். தம்பிதுரை பேசும்போது லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்றும் அதேசமயத்தில் பிரதமருக்கு பாதுகாப்பாக லோக்பால் மசோதாவில் விதிமுறைகளும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதால் லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரை கொண்டுவர எங்கள் முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்றார். விவாதத்திற்கு பின்னர் பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயந்திரம் போல் செயல்படுவது அல்ல இந்திய ஜனநாயகம்.ஹசாரேயின் நிபந்தனைகள் ஏற்கப்படும் அதேசமயத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் மேன்மை காக்கப்பட வேண்டும் என்றார். முகர்ஜியின் பதிலுக்கு பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதில் அரசு கீழ் மட்ட ஊழியர்கள் லோக்பால் மசோதாவுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேசமயத்தில் மக்கள் உரிமை சாசனத்தை அரசு அலுவலகங்களில் வைக்கப்படுவது. மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 3 நிபந்தனைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதால் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரத்தை வாபஸ் பெறுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அவர் இரவு நேரத்தில் உண்ணாவிரத்தை கைவிடமாட்டார். அதனால் இன்று காலையில் அவர் உண்ணாவிரத்தை கைவிடுகிறார்.
3 நிபந்தனைகள் ஏற்கப்பட்டதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று அண்ணா ஹசாரேயின் செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரத்தை வாபஸ் பெறுவதால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறைந்துவிட்டது. அதேசமயத்தில் ஒரு தனி மனிதனின் சக்தி எவ்வளவு பெரியது. அதுவும் அகிம்சை வழி போராட்டம் எத்தகைய சக்தி வாய்ந்தது என்பது அண்ணா ஹசாரே மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தையே தனது உண்ணாவிரதம் மற்றும் அகிம்சை வழியில் துரத்தி அடித்த பெருமை காந்திக்கு உண்டு. அதனால்தான் அவர் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி நமது நாட்டுக்கு மட்டுமல்லாது உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அவர் வழியில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். உண்மையிலேயே இவர் காந்தீயவாதி மட்டுமல்லாது இந்திய மக்களுக்கே அவர் அண்ணாதான் என்றால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
கருவேப்பிலை குழம்பு.![]() 2 days 13 hours ago |
முருங்கைப்பூ பாயாசம்.![]() 6 days 17 hours ago |
அகத்திக்கீரை சாம்பார்![]() 1 week 2 days ago |
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம்-03-02-2023.
03 Feb 2023 -
அணு ஆயுத ஏவுதளத்தின் மீது பறந்த சீனாவின் உளவு பலூன் : அமெரிக்கா கண்டனம்
03 Feb 2023வாஷிங்டன் : தங்களது அணு ஆயுத ஏவுதளத்தின் மீது சீனாவின் உளவு பலூன் காணப்பட்டதாக அமெரிக்கா தெரிவித்துள்ளது.
-
திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் இன்று தொடங்குகிறது
03 Feb 2023திருவண்ணாமலை : திருவண்ணாமலையில் பவுர்ணமி கிரிவலம் செல்ல உகந்த நேரம் அறிவிக்கப்பட்டுள்ளது.
-
அபுதாபியில் இருந்து புறப்பட்ட விமானத்தில் நடுவானில் தீ : ஏர் இந்தியா விமானம் அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : அபுதாபியில் இருந்து கோழிக்கோடு நோக்கி புறப்பட ஏர் இந்தியா விமானத்தின் இன்ஜின் எண் 1-ல் (இடது இன்ஜின்) நடுவானில் தீப்பிடித்தது.
-
நாசாவின் மின்சார விமானம் இந்த ஆண்டு முதல் அறிமுகம்
03 Feb 2023கேம்பிரிட்ஜ் : அமெரிக்காவின் நாசா, சிறிய ரக மின்சார விமானம் ஒன்றை, இந்த ஆண்டுமுதல் முறையாக பறக்கவிடவுள்ளது.
-
தெலுங்கானாவில் விரைவில் திறக்கப்படவிருந்த புதிய தலைமை செயலக கட்டிடத்தில் தீ விபத்து
03 Feb 2023ஐதராபாத் : தெலுங்கானாவில் புதிதாக கட்டப்பட்டுள்ள தலைமைச் செயலகம் விரைவில் திறக்கப்படவுள்ள நிலையில் திடீர் தீ விபத்து ஏற்பட்டுள்ளது.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: ஓ.பி.எஸ் தரப்பு வேட்பாளர் செந்தில்முருகன் மனு தாக்கல்
03 Feb 2023ஈரோடு : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தல் வரும் 27-ம் தேதி நடைபெறுகிறது. இந்த தேர்தலுக்கான வேட்பு மனு தாக்கல் தொடங்கிய நிலையில், காங்கிரஸ், தே.மு.தி.க., அ.ம.மு.க.
-
சென்னை அண்ணா நினைவிடத்தில் எடப்பாடி பழனிசாமி மரியாதை
03 Feb 2023சென்னை : பேரறிஞர் அண்ணாவின் நினைவு நாளையொட்டி சென்னையில் உள்ள அவரது நினைவிடத்தில் முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிசாமி மரியாதை செலுத்தினார்.
-
உ.பி. ராம்பூரில் திகில் சம்பவம்: இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்..!
03 Feb 2023லக்னோ : உ.பி. ராம்பூர் மாவட்டத்தில் திகில் சம்பவமாக இரவில் நிர்வாணமாக வீடுகளின் கதவை தட்டும் இளம் பெண்ணால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.
-
ஸ்ரீரங்கம் கோவிலில் கோலாகலமாக நடந்த தைத்தேரோட்ட திருவிழா : கோவிந்தா கோஷம் முழங்க வடம் பிடித்து இழுத்த பக்தர்கள்
03 Feb 2023திருச்சி : திருச்சி ஸ்ரீரங்கம் கோவிலில் நேற்று தைத்தேரோட்ட திருவிழா கோலாகலமாக நடந்தது. அப்போது கோவிந்தா கோஷம் முழங்க பக்தர்கள் தேரினை வடம் பிடித்து இழுத்தனர்.
-
ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள் : முதல்வர் மு.க.ஸ்டாலின் வழங்கினார்
03 Feb 2023சென்னை : சென்னை தலைமைச் செயலகத்தில் நேற்று முதல்வர் மு.க.ஸ்டாலின், மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை சார்பில் 570 ஒப்பந்த செவிலியர்களுக்கு நிரந்தரப் பணி ஆணைகள்
-
பள்ளி சீருடையில் வந்த தி.மு.க. எம்.எல்.ஏ.க்கள்: புதுச்சேரி சட்டப்பேரவை கூட்டம் : வெறும் 24 நிமிடங்களில் முடிந்தது
03 Feb 2023புதுச்சேரி : புதுச்சேரி சட்டசபை கூட்டம் வெறும் 24 மிடத்தில் முடிந்தது. சட்டசபைக்கு பள்ளி சீருடை மற்றும் மிதிவண்டியில் வந்து தி.மு.க.
-
ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்: பாதுகாப்பு பணிக்கு மத்தியப்படை வருகை: தேர்தல் ஆணையர் சாகு தகவல்
03 Feb 2023ஈரோடு கிழக்குத் தொகுதி இடைத்தேர்தலுக்கு 2 கம்பெனி மத்திய ஆயுதப்படையைச் சேர்ந்த காவல் துறை பாதுகாப்பு வழங்கவுள்ளதாக தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
குமரி கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு வலுவிழக்கும்: வானிலை ஆய்வு மையம் தகவல்
03 Feb 2023ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி 12 மணி நேரத்தில் வலுவிழக்கும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
-
தரணி போற்றும் பழனி தைப்பூச திருவிழா
03 Feb 2023அறுபடை வீடுகளில் ஒன்றான பழனி முருகன் கோவிலில் நாளை 5-ம் தேதி தைப்பூசம் நடைபெற இருக்கிறது.
-
தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒன்றிணைக்க முயற்சிக்கிறோம்: சி.டி.ரவி
03 Feb 2023சென்னை : ஈரோடு கிழக்கு தொகுதி இடைத் தேர்தலில் தி.மு.க. கூட்டணியை வீழ்த்த அ.தி.மு.க.வை ஒருங்கிணைக்க முயற்சிப்பதாக பா.ஜ.க. மேலிட பொறுப்பாளர் சி.டி.
-
அதானி விவகாரத்தில் 6-ம் தேதி போராட்டம்: காங்கிரஸ் அறிவிப்பு
03 Feb 2023அதானி குழுமம் மீதான புகார் குறித்து விசாரிக்க வலியுறுத்தி நாடு முழுவதும் வரும் 6 ஆம் தேதி ஆர்ப்பாட்டம் நடைபெறும் என காங்கிரஸ் அறிவித்துள்ளது.
-
சென்னையில் அனைத்து பள்ளிகளும் இன்று வழக்கம்போல் செயல்படும்: மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவு
03 Feb 2023சென்னையில் உள்ள அனைத்து துவக்க, நடுநிலை, உயர்நிலை, மேல்நிலை பள்ளிகள் இன்று வழக்கம்போல் செயல்படும் என மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் உத்தரவிட்டுள்ளார்.
-
மேலவளவு முருகேசன் கொலை வழக்கு: 13 பேரின் முன்கூட்டிய விடுதலையை ரத்து செய்ய கோரிய மனுக்கள் தள்ளுபடி : ஐகோர்ட் மதுரை கிளை உத்தரவு
03 Feb 2023மதுரை : மதுரை மாவட்டம் மேலவளவு பஞ்சாயத்து தலைவர் முருகேசன் உள்ளிட்ட 6 பேர் படுகொலை செய்யப்பட்ட வழக்கில் ஆயுள் தண்டனை பெற்ற 13 பேரின் முன்கூட்டியே விடுதலையை ரத்து செய்யக
-
பிரபல திரைப்பட இயக்குநர் கே.விஸ்வநாத் மறைவு : முதல்வர் மு.க.ஸ்டாலின் இரங்கல்
03 Feb 2023சென்னை : இந்தியத் திரையுலகின் மூத்த இயக்குனர்களுள் ஒருவர் கே.விஸ்வநாத் (92).
-
நடுவானில் இன்ஜினில் தீ: ஏர் - இந்தியா விமானம் : அவசரமாக தரையிறக்கம்
03 Feb 2023அபுதாபி : நடுவானில், ஏர் இந்தியா விமானத்தின் ஒரு இன்ஜீனில் தீப்பிடித்ததை தொடர்ந்து அந்த விமானம் ஐக்கிய அரபு எமீரேட்சின் அபுதாபியில் அவசரமாக தரையிறக்கப்பட்டது.
-
அயோத்தி ராமர் கோயிலுக்கு வெடிகுண்டு மிரட்டல்
03 Feb 2023அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலை வெடி வைத்துத் தகர்ப்போம் என்று மிரட்டல் விடுக்கப்பட்டிருப்பதாக உத்தரப்பிரதேச காவல்துறை தெரிவித்துள்ளது.
-
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 1474 கன அடியாக அதிகரிப்பு
03 Feb 2023சேலம் : காவிரி நீர்ப்பிடிப்பு பகுதியில் மழை பெய்ததால் மீண்டும் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது.
-
லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் 67 படத்தின் பெயர் "லியோ"
03 Feb 2023லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜயின் 67வது படத்திற்கு லியோ என பெயரிடப்பட்டுள்ளது
-
இந்தியா - ஆஸி., டெஸ்ட் தொடர்: கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி
03 Feb 2023நாக்பூர் : இந்தியா-ஆஸி., டெஸ்ட் தொடர் கடைசி போட்டியை நேரில் காண்கிறார் பிரதமர் மோடி என்ற தகவல் வெளியாகியுள்ளது.
3 நகரங்களிலும்...