எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
புதுடெல்லி, ஆக.28 - அண்ணா ஹசாரே விதித்த நிபந்தனைகளுடனான தீர்மானத்தை பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்புக்கு விட மத்திய அரசு சம்மதித்திருப்பதால் அண்ணா ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரதத்தை வாபஸ் பெறுகிறார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. வலுவான லோக்பால் மசோதாவை பாராளுமன்றத்தில் நிறைவேற்றக்கோரி காந்தீயவாதி அண்ணா ஹசாரே டெல்லியில் உள்ள ராம்லீலா மைதானத்தில் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வருகிறார். இதனால் ஹசாரேயின் உடல்நிலை பாதிக்கப்பட்டு ஏதாவது விபரீத விளைவு ஏற்பட்டுவிடும் என்பதற்காக ஹசாரே உண்ணாவிரதத்தை கைவிட வேண்டும் என்று பிரதமர் மன்மோகன் சிங் கேட்டுக்கொண்டார். உண்ணாவிரதத்தை நிறுத்த 3 நிபந்தனைகளை லோக்பால் மசோதாவில் சேர்க்க வேண்டும். அது தொடர்பாக தீர்மானம் கொண்டு வந்து பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு மூலம் நிறைவேற்ற வேண்டும் என்று அண்ணா ஹசாரே கூறினார். அரசு கீழ்மட்ட ஊழியர்களையும் லோக்பால் மசோதாவுக்குள் உட்படுத்த வேண்டும். அனைத்து அரசு அலுவலகங்களிலும் மக்கள் உரிமை சாசனம் வைக்கப்பட வேண்டும். அனைத்து மாநிலங்களிலும் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்த வேண்டும் என்ற 3 நிபந்தனைகளை அண்ணா ஹசாரே முன்வைத்தார். இந்த நிபந்தனைகளை ஏற்க மத்திய அரசு முதலில் மறுத்தது. பின்னர் இந்த நிபந்தனைகளை ஏற்று பாராளுமன்றத்தில் ஓட்டெடுப்பு இல்லாத தீர்மானம் மூலம் நிறைவேற்றப்படும் என்று மத்திய அரசு தெரிவித்தது. இதை ஏற்றுக்கொள்ள அண்ணா ஹசாரே குழுவினர் மறுத்துவிட்டனர். மேலும் இது துரோகச் செயல் என்றும் இதை ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது என்றும் அண்ணா ஹசாரே குழுவினர் தெரிவித்தனர். இதனையடுத்து இந்த தீர்மானத்தை குரல் ஓட்டெடுப்புடன் கூடிய கொண்டுவர மத்திய அரசு சம்மதித்தது. இதுகுறித்து அண்ணா ஹசாரே குழுவினர்களுக்கும் மத்திய அரசு தெரிவித்தது. இதனால் அண்ணா ஹசாரே குழுவினர் மகிழ்ச்சியையும் சம்மதத்தையும் தெரிவித்தனர். இதனையொட்டி ஹசாரேயின் நிபந்தனைகள் அடங்கிய தீர்மானத்தை மத்திய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி லோக்சபையில் தாக்கல் செய்தார். தீர்மானம் மீது எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா சுவராஜ், அ.தி.மு.க. எம்.பி. தம்பிதுரை மற்றும் இதர கட்சிகளின் உறுப்பினர்கள் பேசினர். தம்பிதுரை பேசும்போது லோக்பால் மசோதாவில் பிரதமரையும் சேர்க்க வேண்டும் என்றும் அதேசமயத்தில் பிரதமருக்கு பாதுகாப்பாக லோக்பால் மசோதாவில் விதிமுறைகளும் சேர்க்கப்படும் என்று மத்திய அரசு கூறுவதால் லோக்பால் மசோதா வரம்புக்குள் பிரதமரை கொண்டுவர எங்கள் முதல்வர் ஜெயலலிதா விரும்பவில்லை என்றார். விவாதத்திற்கு பின்னர் பதில் அளித்து பேசிய நிதி அமைச்சர் பிரணாப் முகர்ஜி, இயந்திரம் போல் செயல்படுவது அல்ல இந்திய ஜனநாயகம்.ஹசாரேயின் நிபந்தனைகள் ஏற்கப்படும் அதேசமயத்தில் இந்திய அரசியல் சட்டத்தின் மேன்மை காக்கப்பட வேண்டும் என்றார். முகர்ஜியின் பதிலுக்கு பிறகு தீர்மானம் ஒருமனதாக நிறைவேறியது. இதில் அரசு கீழ் மட்ட ஊழியர்கள் லோக்பால் மசோதாவுக்கு உட்படுத்தப்படுவார்கள். அதேசமயத்தில் மக்கள் உரிமை சாசனத்தை அரசு அலுவலகங்களில் வைக்கப்படுவது. மாநிலங்களில் லோக் ஆயுக்தா அமைப்பை ஏற்படுத்துவது குறித்து பாராளுமன்ற நிலைக்குழுவின் ஆய்வுக்கு அனுப்பப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இதற்கிடையில் 3 நிபந்தனைகளையும் மத்திய அரசு ஏற்றுக்கொண்டுவிட்டதால் கடந்த 12 நாட்களாக உண்ணாவிரதம் இருந்து வரும் அண்ணா ஹசாரே இன்று காலை 10 மணிக்கு உண்ணாவிரத்தை வாபஸ் பெறுகிறார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுவாக அவர் இரவு நேரத்தில் உண்ணாவிரத்தை கைவிடமாட்டார். அதனால் இன்று காலையில் அவர் உண்ணாவிரத்தை கைவிடுகிறார்.
3 நிபந்தனைகள் ஏற்கப்பட்டதால் நாங்கள் மிகவும் மகிழ்ச்சி அடைந்துள்ளோம் என்று அண்ணா ஹசாரேயின் செய்தி தொடர்பாளர் நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் தெரிவித்தார். பாராளுமன்றத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு ஹசாரே இன்று காலையில் உண்ணாவிரத்தை வாபஸ் பெறுவதால் மத்திய அரசுக்கு ஏற்பட்ட நெருக்கடி குறைந்துவிட்டது. அதேசமயத்தில் ஒரு தனி மனிதனின் சக்தி எவ்வளவு பெரியது. அதுவும் அகிம்சை வழி போராட்டம் எத்தகைய சக்தி வாய்ந்தது என்பது அண்ணா ஹசாரே மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. பிரிட்டீஷ் சாம்ராஜ்யத்தையே தனது உண்ணாவிரதம் மற்றும் அகிம்சை வழியில் துரத்தி அடித்த பெருமை காந்திக்கு உண்டு. அதனால்தான் அவர் மகாத்மா காந்தி என்று அழைக்கப்படுகிறார். மகாத்மா காந்தி நமது நாட்டுக்கு மட்டுமல்லாது உலகத்திற்கே ஒரு வழிகாட்டியாக இருக்கிறது. அவர் வழியில் அகிம்சை வழியில் உண்ணாவிரதம் இருந்து ஊழலை ஒழிக்க அண்ணா ஹசாரே ஒரு வழிகாட்டியாக இருக்கிறார். உண்மையிலேயே இவர் காந்தீயவாதி மட்டுமல்லாது இந்திய மக்களுக்கே அவர் அண்ணாதான் என்றால் அது மிகையாகாது.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
ஸ்வீட் உருளைக்கிழங்கு கேக்2 days 43 sec ago |
பெப்பர் சிக்கன்6 days 24 min ago |
ஹனி பட்டர் சிக்கன்1 week 2 days ago |
-
கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் வங்கி கணக்கு குறித்து கருத்து தெரிவித்த அமெரிக்கா
28 Mar 2024வாஷிங்டன், டெல்லி முதல்வர் கெஜ்ரிவால் விவகாரத்தை தொடர்ந்து காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்கு முடக்கம் குறித்து அமெரிக்கா கருத்து தெரிவித்துள்ளது.
-
ஆஸ்திரேலியா ஒப்பந்த பட்டியல்: முக்கிய வீரர்களுக்கு இடமில்லை
28 Mar 2024மெல்போர்ன், ஆஸ்திரேலிய ஆடவர் கிரிக்கெட் அணிக்கு மத்திய ஒப்பந்தப் பட்டியல் வெளியாகியுள்ளது. இதில் பல முக்கிய வீரர்களுக்கு இடமில்லை.
-
முக்கிய வேட்பாளர்களின் மனுக்கள் ஏற்பு: தமிழகத்தில் வேட்புமனுக்கள் மீதான பரிசீலனை முடிந்தது: இறுதி வேட்பாளர்கள் பட்டியல் நாளை வெளியீடு
28 Mar 2024சென்னை, தமிழ்நாடு முழுவதும் வேட்புமனு தாக்கல் செய்த முக்கிய தலைவர்கள் அனைவரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தி.மு.க., காங்கிரஸ் வேட்பாளர்களை ஆதரித்து முதல்வர் மு.க. ஸ்டாலின் இன்று தர்மபுரியில் பிரச்சாரம்
28 Mar 2024தர்மபுரி, தர்மபுரி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் தி.மு.க.
-
பட்டாசு தொழிலை காப்பாற்றுவதற்கு தி.மு.க. அரசு எதுவும் செய்யவில்லை : சிவகாசி பொதுக்கூட்டத்தில் இ.பி.எஸ். குற்றச்சாட்டு
28 Mar 2024விருதுநகர், தி.மு.க. அரசு பட்டாசு தொழிலை காப்பாற்ற எதும் செய்யவில்லை சிவகாசி பொதுக்கூட்டத்தில் அ.தி.மு.க.
-
குன்றத்தில் வெகுவிமர்சையாக நடந்த சுப்பிரமணிய சுவாமி - தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம்
28 Mar 2024மதுரை, மீனாட்சியம்மன், சுந்தரேஸ்வரர் பிரியாவிடை முன்னிலையில் திருப்பரங்குன்றத்தில் சுப்பிரமணிய சுவாமி, தெய்வானை அம்மன் திருக்கல்யாண வைபவம் வெகுவிமர்சையாக நேற்று நடைபெற்
-
ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பி.எஸ். பெயரில் தாக்கலான 6 பேரின் வேட்புமனுவும் ஏற்பு
28 Mar 2024ராமநாதபுரம், பாராளுமன்ற மக்களவைத் தேர்தலில் ராமநாதபுரம் தொகுதியில் ஓ.பன்னீர் செல்வம் எனும் பெயரில் வேட்புமனு தாக்கல் செய்த 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்கப்பட்டுள்ளது.
-
தமிழகத்தில் முதல்வர் ஸ்டாலின், ராகுல் காந்தி இணைந்து பிரச்சாரம்: செல்வப்பெருந்தகை தகவல்
28 Mar 2024சென்னை, முதல்வர் மு.க.ஸ்டாலினும், ராகுல் காந்தியும் ஒன்றாக சேர்ந்து தமிழகத்தில் இண்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு வாக்கு சேகரிக்க
-
ஏப். 4-ல் டெல்லியில் கூடுகிறது காவிரி மேலாண்மை ஆணையம்
28 Mar 2024புது டெல்லி, காவிரி மேலாண்மை ஆணையத்தின் 29-வது கூட்டம் ஏப்ரல் 4-ம் தேதி டெல்லியில் நடைபெற உள்ளது.
-
வேட்புமனு தாக்கல் செய்ய ஏப். 3-ல் கேரளா செல்கிறார் ராகுல் காந்தி
28 Mar 2024திருவனந்தபுரம், ஏப்ரல் 3-ம் தேதி வேட்பு மனு தாக்கல் செய்ய கேரளா செல்கிறார். அதை தொடர்ந்து கல்பெட்டா கலெக்டர் அலுவலகத்தில் வேட்புமனு தாக்கல் செய்கிறார்.
-
தாய்லாந்தில் ஓரின சேர்க்கையாளர் திருமணத்துக்கு சட்டப்பூர்வ அனுமதி
28 Mar 2024பாங்காங்க், ஓரின சேர்க்கையாளர் திருமணத்திற்கான சட்ட மசோதா தாய்லாந்து பாராளுமன்றத்தில் வெற்றிகரமாக நிறைவேற்றப்பட்டது.
-
கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு
28 Mar 2024சென்னை, தமிழகம் முழுவதும் கிறிஸ்தவ ஆலயங்களில் இன்று புனித வெள்ளி சிறப்பு வழிபாடு நடத்தப்படுகிறது.
-
5 நாள் பயணமாக கவர்னர் ரவி நாளை ஊட்டி செல்கிறார்
28 Mar 2024ஊட்டி, 5 நாள் பயணமாக கவர்னர் ஆர்.என். ரவி நாளை ஊட்டிக்கு புறப்பட்டு செல்கிறார்.
-
ஏப்.4-ல் மத்திய அமைச்சர் அமித் ஷா தமிழகம் வருகை: சென்னை, மதுரை, சிவகங்கையில் பிரச்சாரம்
28 Mar 2024சென்னை, தேர்தல் பிரச்சாரத்துக்காக மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா ஏப்ரல் 4-ம் தேதி தமிழகம் வரவுள்ளார். அவர் மதுரை, சிவகங்கை, சென்னையில் பிரச்சாரம் மேற்கொள்கிறார்.
-
2-ம் கட்ட தேர்தல்: 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் மனு தாக்கல் தொடங்கியது
28 Mar 2024புது டெல்லி, நாடு முழுவதும் பாராளுமன்ற தேர்தல் 7 கட்டங்களாக நடத்தப்படும் நிலையில், இரண்டாவது கட்டமாக ஏப்ரல் 26-ம் தேதி 13 மாநிலங்களில் உள்ள 89 மக்களவை தொகுதிகளில் வாக்க
-
கெஜ்ரிவாலை பதவியிலிருந்து நீக்க கோரிய மனு தள்ளுபடி
28 Mar 2024புது டெல்லி, அரவிந்த் கெஜ்ரிவாலை முதல்வர் பதவியில் இருந்து நீக்க கோரி தொடரப்பட்ட பொதுநல மனுவை தள்ளுபடி செய்து டெல்லி ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
-
தமிழகத்தில் 1-ம் தேதி வரை வெப்பநிலை அதிகரிக்க கூடும்: சென்னை வானிலை மையம் தகவல்
28 Mar 2024சென்னை, தமிழகத்தில் வரும் 01-ம் தேதி வரை ஓரிரு இடங்களில் அதிகபட்ச வெப்பநிலை 2 டிகிரி செல்சியஸ் வரை படிப்படியாக அதிகரிக்கக் கூடும் என்று சென்னை வானிலை மையம் தெரிவித்துள்
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல்
28 Mar 2024சென்னை, ஈரோடு மக்களவை உறுப்பினர் கணேசமூர்த்தி மறைவுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார்.
-
அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை உருவாக்கும் ஜப்பான்
28 Mar 2024டோக்கியோ, ஹைட்ரஜன் எரிபொருள் என்ஜினை பயன்படுத்தி அடுத்த தலைமுறைக்கான பயணிகள் விமானத்தை ஜப்பான் உருவாக்க உள்ளது.
-
ஈரோடு எம்.பி. கணேசமூர்த்தி மறைவு: இ.பி.எஸ். உள்ளிட்ட தலைவர்கள் இரங்கல்
28 Mar 2024ஈரோடு, ஈரோடு பாராளுமன்ற உறுப்பினரும், மதிமுக கட்சியின் மூத்த தலைவர்களின் ஒருவருமான கணேசமூர்த்தி நேற்று அதிகாலை 5 மணியளவில் உயிரிழந்தார். இந்த நிலையில், 
-
முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தர்மபுரி வருகை: இன்டியா கூட்டணி வேட்பாளர்களுக்கு வாக்கு சேகரிக்கிறார்
28 Mar 2024தர்மபுரி, முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று தருமபுரி வருகையையொட்டி அதற்கான முன்னேற்பாடு பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது.
-
செந்தில் பாலாஜியின் புதிய மனு ஏப். 4-ம் தேதிக்கு தள்ளி வைப்பு
28 Mar 2024சென்னை, சட்டவிரோத பண பரிமாற்ற வழக்கில் முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி தாக்கல் செய்த புதிய மனுவுக்கு அமலாக்கத்துறை பதிலளிக்கும் படி உத்தரவிட்டு ஏப்ரல் 4-ம் தேதி
-
இந்தியாவின் பணக்கார பெண்மணி சாவித்ரி ஜிண்டால் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகல்
28 Mar 2024புது டெல்லி, அரியானா முன்னாள் அமைச்சரும், பிரபல தொழில் நிறுவனமான ஓ.பி.
-
தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதி மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்பு
28 Mar 2024சேலம், தி.மு.க. வேட்பாளர் டி.எம்.செல்வகணபதியின் வேட்பு மனு நீண்ட இழுபறிக்கு பிறகு ஏற்கப்பட்டது.
-
செல்வகணபதி மீது மேலும் ஒரு புகார்: சேலம் தி.மு.க. வேட்பாளர் வேட்புமனு ஏற்கப்படுமா?
28 Mar 2024சேலம், சேலம் தொகுதி தி.மு.க. வேட்பாளர் செல்வகணபதியின் வேட்புமனு பரிசீலனையின் போது தற்காலிகமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.