முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நடைமுறையில் மாற்றம் வரும்வரை எனது போராட்டம் ஓயாது-ஹசாரே

ஞாயிற்றுக்கிழமை, 28 ஆகஸ்ட் 2011      ஊழல்
Image Unavailable

புதுடெல்லி. ஆக. - 29 - ஜன்லோக்பால் மசோதாவுடன்  தனது போராட்டம் நின்று விடாது என்றும்  நாட்டின் நடைமுறையில் ஒரு மாற்றம் வரும் வரை  தனது போராட்டம் தொடரும் என்றும் அன்னா ஹசாரே கூறினார். ஊழலுக்கு எதிரான வலுவான லோக்பால் மசோதாவை வலியுறுத்தி உண்ணாவிரதம் இருந்து வந்த அன்னா ஹசாரே தனது கோரிக்கை நிறைவேறியதை அடுத்து 13 வது நாளான நேற்று தனது உண்ணாவிரதத்தை முடித்துக்கொண்டார். அவருக்கு சிம்ரன்,  இக்ரா என்ற  இரு இளம்பெண்கள் கொடுத்த இளநீர், தேன் ஆகியவற்றை அருந்தி தனது உண்ணாவிரத்தை முடித்துக்கொண்ட ஹசாரே ராம்லீலா மைதானத்தில் திரளாக கூடியிருந்த மக்கள் முன்பு பேசினார். அப்போது அவர் கூறுகையில் ஜன் லோக்பால் மசோதாவுடன் தனது போராட்டம் நின்று விடாது என்றும் நடை முறையில் மாற்றம் ஏற்படும் வரை தனது போராட்டம் தொடரும் என்றும் கூறினார். தனக்கு ஆதரவாக உண்ணாவிரதம் இருந்தவர்களும் தங்களது உண்ணாவிரதத்தை முடித்துக்கொள்ள வேண்டும் என்றும் ஹசாரே கேட்டுக்கொண்டார். தான் எப்போதும் அணியும் வெள்ளை குர்தா பைஜாமாவுடன் காட்சியளித்த ஹசாரே  தனது வழக்கமான தொப்பியையும் அணிந்திருந்தார்.
இந்த வெற்றி தனது வெற்றி மட்டுமல்ல, ஒவ்வொரு இந்தியரின் வெற்றியுமாகும் என்றும் அவர் கூறினார்.
வருங்காலத்தில் ஊழலற்ற இந்தியாவை உருவாக்க இந்திய மக்களால் முடியும் என்ற நம்பிக்கை தனக்கு இருப்பதாகவும் அவர் கூறினார்.
ஒரு மாபெரும் போராட்டத்தில் நாட்டு மக்கள் வெற்றி பெற்றுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
லோக்பால்  போராட்டத்தில்  தனக்கு ஆதரவு தெரிவித்த மக்களுக்கு நன்றி தெரிவித்துக்கொள்வதாக கூறிய ஹசாரே  இப்போது பாதியளவு போராட்டம்தான் வெற்றி பெற்றுள்ளது என்றும் கூறினார்.
ஒரு மாற்றத்தை ஏற்படுத்த  கொண்டு வருவதற்கான போராட்டத்தை நடத்த தான் நாடு முழவதும்  சுற்றுப்பயணத்தை துவக்க இருப்பதாகவும் கூறினார்.
அந்த மாற்றம் என்பது அரசியல்சாசனத்தின்படி இருக்கும் என்றும் அவர் கூறினார்.
ஏழை பணக்காரரர் என்ற வித்தியாசத்தை அகற்ற வேண்டும். நாட்டின்  வளர்சசிக்கு அதிகார பரவல்  அவசியம் என்றும் அவர் கூறினார்.
 அதிகாரங்கள் அனைத்தும் ஒரே  இடத்தில் குவிந்து கிடப்பதுதான் ஊழலுக்கு காரணம் என்றும் அதனால் அதிகார பரவல் அவசியம் என்றம் அவர் கூறினார்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்