முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

புதுவையில் ராமகோபாலன் உருவபொம்மை எரிக்க முயற்சி-56 பேர் கைது

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      இந்தியா
Image Unavailable

புதுச்சேரி, ஆக.- 29 - புதுவையில் ராமகோபாலன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 56 பேர் கைது செய்யப்பட்டனர். இந்து முன்னணி அமைப்பாளர் ராமகோபாலன் நேற்று முன்தினம் புதுவையில் பேட்டி அளிக்கும் போது ராஜீவ்காந்தி கொலையாளிகளை தூக்கில் போட வேண்டும் என்று கருத்து தெரிவித்து இருந்தார்.  இந்த கருத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து புதுவை முற்போக்கு மாணவர் கழகம் சார்பில் வெங்கட சுப்பா ரெட்டியார் சிலை அருகே நேற்று காலை ஆர்ப்பாட்டம் நடந்தது. ஆர்ப்பாட்டத்துக்கு அதன் தலைவர் கவுதம் பாஸ்கர் தலைமை தாங்கினார். பெரியார் திராவிடர் கழக வீர.மோகன், இளங்கோ, மாணவர் கூட்டமைப்பு தலைவர் சாமிநாதன், பெரியார் திராவிடர் விடுதலை கழகம் இளையராஜா உள்பட பலர் இதில் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டம் நடந்து கொண்டிருந்த போது திடீரென்று மறைத்து வைத்து இருந்த ராமகோபாலன் உருவ பொம்மையை போராட்டக்காரர்கள் எரிக்க முயன்றனர். அவர்கள் அங்கு பாதுகாப்பு பணியில் இருந்த போலீசார் தடுக்க முயன்றனர். இதனால் போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளு முள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ராமகோபாலன் உருவ பொம்மையை எரிக்க முயன்ற 30 பேரை உருளையன்பேட்டை போலீசார் கைது செய்தனர். இதேபோல புதுவை பெரியார் சிலை அருகே ராஜீவ்காந்தி கொலை குற்றவாளிகளை தூக்கில் போட வலியுறுத்திய இந்து முன்னணி தலைவர் ராமகோபாலன், தமிழக காங்கிரஸ் தலைவர் தங்கபாலு உருவ பொம்மையை இந்திய குடியரசு கட்சியினர் எரித்தனர்.
இதில் மாநில அமைப்பாளர் சத்தியவேல், செயலாளர் சத்தியானந்தம், செயல் தலைவர் ஜெகன், வடக்குப்பகுதி அமைப்பாளர் சண்முகம், தெற்குப்பகுதி முருகேசன், இளைஞர் அணி செயலாளர் வீர சேகரன், தமிழர்களம் பிரகாஷ், தமிழர் தி.க.குப்புசாமி மனித உரிமை அமைப்பாளர் முருகானந்தம் உள்பட பலர் கலந்து கொண்டனர். இதில் உருவ பொம்மையை எரித்த 26 பேரை போலீசார் கைது செய்தனர்.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்