முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

அரசு ஊழியர்களுக்கு லஞ்சம் தராதீர்கள் - அந்தோணி

திங்கட்கிழமை, 29 ஆகஸ்ட் 2011      அரசியல்
Image Unavailable

திருவனந்தபுரம்,ஆக.- 28 - அரசு பணிகளைச் செய்வதற்கு மக்கள் லஞ்சம் அளிக்கக்கூடாது என்று மத்திய அமைச்சர் ஏ.கே. அந்தோனி கூறினார். திருவனந்தபுரத்தில் மாநில அரசின் வறுமை ஒழுப்புத் திட்டமான ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய்க்கு  அளிக்கும் திட்டத்தை தொடங்கி வைத்த அவர் இவ்வாறு கூறினார்.மேலும் கூறுகையில் வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ள மக்களுக்கு ஒரு கிலோ அரிசி ஒரு ரூபாய் திட்டத்தை மாநில அரசு தொடங்கி உள்ளது. ஓணம் பண்டிகையை முன்னிட்டு இலவச பண்டிகை பை ஏழை மக்களுக்கு வழங்கபட்டது. இதில் சர்க்கரை உள்ளிட்ட முக்கியபொருட்கள் உள்ளன. அரசின் நலத்திட்டங்களின் பலனை பெறுவதற்கு அரசு அதிகாரிகளுக்கு லஞ்சம் அளிக்கும் வழக்கம் மக்கள் மத்தியில் அதிகரித்துள்ளது.அரசு திட்டங்களின் பலனைப் பெற வேண்டுமானால் அரசு  அதிகாரிகளுக்கு லஞ்சம் தந்தால் தான் காரியம் சாத்தியமாகும் என்ற மனநிலை மக்களிடையே உருவாகியுள்ளது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்