எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, மார்ச் - 6 - தி.மு.க.- காங்கிரஸ் உறவு பணாலாகி இருக்கிறது. உறுதியாக இருக்கிறது, சிறப்பாக இருக்கிறது என்றெல்லாம் பேசப்பட்டு வந்த கட்டுக்கதை வெட்டவெளிச்சமாகி முடிவுரை எழுதப்பட்டு விட்டது.
அடுக்கடுக்கான ஊழல் புகாரால் மாட்டிக்கொண்டு விழி பிதுங்கி நிற்கும் தி.மு.க.விற்கு மேலும் ஒரு பேரிடியாக மத்திய அரசு ஆதரவின்றி தனித்து தேர்தலில் நிற்க வேண்டிய கட்டாயம் ஏற்பட்டுள்ளது. 5 ஆண்டு காலம் மைனாரிட்டி ஆட்சியாக இடதுசாரிகள், பா.ம.க. தயவு, பின்பு காங்கிரஸ் தயவுடன் காலத்தை தி.மு.க. தள்ளியபோது ``ஆட்சியில் பங்கு'' என்ற கோரிக்கையை தமிழகத்தில் உள்ள காங்கிரஸ் ஜால்ரா எம்.எல்.ஏ.க்களுக்கு சலுகைகள் காட்டியது மூலம் சமாளித்துவந்த கருணாநிதி ஸ்பெக்ட்ரம் விவகாரம் கிளம்பியபோது விவகாரம் பூதாகரமாக எழும் என்று எதிர்பார்க்கவில்லை.
இந்த விவகாரத்தின் சூத்திரதாரியே ராகுல்காந்தி என்பதுதான் உண்மை. தி.மு.க.வை விட்டு காங்கிரஸ் வெளியேற வேண்டும், காங்கிரஸ் தன்னிச்சையான முடிவு எடுக்க வேண்டும் என்று தொடர்ந்து ராகுல் காந்தி வற்புறுத்தி வந்த நிலையில் ராசா ஸ்பெக்ட்ரம் விவகாரத்தில் சிக்கியபோது ராசாவின் அமைச்சரவை அலுவலகத்தில் சி.பி.ஐ. ரெய்டு நடத்தியது மூலம் தி.மு.க.விற்கு காங்கிரஸ் நெருக்கடி கொடுத்தது. பின்பு மத்திய கணக்கு தணிக்கை குழு அறிக்கை மீடியாக்கள் கையில் வந்ததற்கும் காங்கிரசின் `கை' பின்னால் இருந்தது.
தொடர்ந்து தி.மு.க.- காங்கிரஸ் உள்குத்து, முட்டல், மோதல் பல்வேறு சம்பவங்களில் வெளி வந்தது. ராசாவை கைது செய்யக் கூடாது என்பதற்காக சோனியாவை சந்திக்க சென்ற கருணாநிதியை, மகன் ராகுல் வரும் வரை காக்க வைத்து பின்பு தொகுதி பற்றி ராகுலின் எண்ணப்படி 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, துணை முதல்வர், கண்ட்ரோல் கமிட்டி என அதிர வைத்து சென்னைக்கு அனுப்பி வைத்தார்.
ராசாவின் கைதும் நடந்தது. அதன் பிறகு தொகுதி பங்கீட்டுக்காக காங்கிரஸ் ஐவர் குழுவை போட்டது. இதில் சிதம்பரத்திற்கு கொம்பு சீவி அனுப்பி வைத்தனர். முதல் கட்டத்தை சாதாரணமாக கடந்த தேர்தல் அடிப்படையில் தொகுதிகளை பிரித்துக் கொள்ளலாம் என்று ஆரம்பித்த தி.மு.க. குழுவினரிடம், எடுத்தவுடனேயே 78 தொகுதிகள், ஆட்சியில் பங்கு, கண்ட்ரோல் கமிட்டி என்று சிதம்பரம் பேசியவுடன் ஆடிப்போன தி.மு.க. குழுவினர் தலைவரிடம் பேசி விட்டு கூறுகிறோம் என்று முடித்துக் கொண்டனர்.
இதுபற்றி தகவல் வெளியானபோது தங்கள் கூட்டணியில் எந்த பிரச்சினையும் இல்லை என்று சப்பை கட்டு கட்டினாலும் உள்ளே குத்து வெட்டுக்கள் நடந்து கொண்டுதான் இருந்தது. மறுபுறம் தி.மு.க. தரப்பில் உளவுத்துறை மூலம் விஜயகாந்த் தனித்து நிற்கிறார் என்ற தோற்றத்தை உருவாக்கினர். ஆனால் நேற்று முன்தினம் விஜயகாந்த் போயஸ் தோட்டம் வந்து அ.தி.மு.க. பொதுச்செயலாளர் ஜெயலலிதாவை சந்தித்து 41 தொகுதிகள் உடன்பாட்டில் கையெழுத்து போட்டார்.
ஆனால் தி.மு.க.- காங்கிரஸ் தரப்பில் பல முறை பேச்சுவார்த்தை நடந்தும் எந்தவித முன்னற்றமும் இல்லாத நிலையில் இறுதியாக காங்கிரஸ் மேலிட நிலைப்பாட்டை உறுதியாக தெரிவிக்க குலாம் நபி ஆசாத்தை, சோனியா சென்னைக்கு அனுப்பி வைத்தார். அவருடன் கருணாநிதி தனது குடும்ப ரத, கஜ, துராதிபதிகளுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். அப்பொழுதும் காங்கிரஸ் வேறு வழியில்லாமல் பணிந்து வந்து விடும். அ.தி.மு.க., தே.மு.தி.க. கூட்டணி உறுதியாகி விட்டது. அதனால் காங்கிரஸ் தன்னை நம்பித்தான் இருக்க வேண்டும் என்ற தைரியத்தில் 57 தொகுதிகளுக்கு மேல் தர முடியாது மற்றும் வேறு கண்டிஷன்களுக்கு ஒத்துக் கொள்ள முடியாது என்று கருணாநிதி கூறி அனுப்பினார்.
ஆனால் காங்கிரசின் எண்ணம் வேறு மாதிரியாக உள்ளதாம். ஊழலில் நாறிக் கிடக்கும் தி.மு.க. படுதோல்வியை சந்திப்பது திண்ணம். இந்த நேரத்தில் தி.மு.க.வை நெருக்கி சில முடிவெடுக்க வைக்க வேண்டும், அல்லது காங்கிரஸ் தனித்து நின்று பீகார் பாணியில் சோதனை செய்ய கூட தயார் என்ற முடிவுக்கு ராகுல் காந்தி வந்து விட்டதாக கூறப்படுகிறது.
மறுபுறம் தி.மு.க. கலைஞர் டி.வி. விவகாரத்தில் பாகஸ்தர் என்ற முறையில் வெளிநாட்டில் இருந்து வந்த 220 கோடி ரூபாய் விவகாரத்தில் சி.பி.ஐ.யின் பிடி கனிமொழியை நோக்கி இறுகுவதால் காங்கிரஸ் கூட்டணியுடன் இருந்தால் வாய் திறக்க முடியாது. வெளியே வந்து விட்டால் காங்கிரஸ் உறவை முறித்ததால்தான் கனிமொழியை பழி வாங்குகிறார்கள் என்று கூறி தேர்தலில் அனுதாபத்தை தேடலாம் என்ற எண்ணமும் இருந்தது. எப்படி இருந்தாலும் மத்தியில் ஆட்சி அதிகார சுகத்தில் இருந்து கொண்டு தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற தி.மு.க.வின் எண்ணம் காங்கிரசை கெஞ்சும் அளவுக்கு கொண்டு சென்றது. அதைத்தான் விலகல் விஷயத்தில் தி.மு.க.வின் தீர்மானத்திலும் குறிப்பிட்டுள்ளனர். பலவாறாக அவர்கள் இழுத்த இழுப்புக்கெல்லாம் ஒத்துக் கொண்டு சென்றோம். ஆனாலும் அவர்கள் எங்கள் உறவை விரும்பவில்லை என்று ஒப்பாரி வைத்துள்ளார்கள்.
மார்ச் 3-ம் தேதி குலாம் நபி ஆசாத் டெல்லி சென்ற பிறகு கருணாநிதி 4-ந் தேதி ஒரு நாள் இறுதி கெடு. 5-ந் தேதி முடிவை அறிவிப்போம் என்று முடிவெடுத்தார்.
அதுவரையிலும் காங்கிரஸ் இறங்கி வரும் என்றுதான் கருணாநிதி நினைத்திருந்தார். 5-ந் தேதி உயர்நிலை செயல் திட்ட குழு கூட்டும் வரையிலும் வாசல் கதவை திறந்து வைத்து கொண்டு தங்கபாலுவாவது வருவாரா என்று காத்து கிடந்தார். ஆனால் 4-ந் தேதி நள்ளிரவே காங்கிரஸ் தி.மு.க.வுடன் உறவில்லை என்ற முடிவை டெல்லியில் எடுத்தது. இதையடுத்து தங்கள் நிலையை தெரிவித்து கருணாநிதி அய்யோ பாவம் என்ற நிலையில் நள்ளிரவில் ஒரு அறிக்கையும் விட்டுபார்த்தார். மறுநாள் மதியம் வரை சிதம்பரம் வருவார், ஆசாத் வருவார் என்று காத்திருந்த கண்கள் பொய்த்துப் போனதுதான் மிச்சம். முடிவில் வேறு வழியில்லாமல் ஒரு பெரிய தீர்மானத்தை போட்டுவிட்டு விலகளை அறிவித்துள்ளனர். ஆனாலும் காங்கிரசுக்கு பிரச்சினை அடிப்படையில் ஆதரவாம். அமைச்சரவையிலிருந்து விலகலாம். எதாவது மிச்ச சொச்சம் காங்கிரஸ் அனுதாபப்பட்டு வருமா என்பதற்கு தான் இந்த வரியும். தி.மு.க. கூட்டணியிலிருந்து விலகியது என்று உயர்நிலை செயல் திட்டக்குழுவை கூட்டி அறிவித்தாலும் காங்கிரஸ், தான் பதில் எதுவும் தராமல் புறக்கணித்தது என்பதுதான் உண்மை. நேற்று மதியம் முதல் சத்தியமூர்த்தி பவனில் காங்கிரஸ் தொண்டர்கள் பட்டாசுகளுடன் காத்திருந்தனர் உறவு முடிந்தவுடன் வெடிப்பதற்காக.
தி.மு.க.- காங்கிரஸ் கூட்டணி முறிந்ததன் மூலம் அ.தி.மு.க. கூட்டணி வெற்றி பிரகாசமாகியுள்ளது. முன்னெப்போதும் இல்லாத அளவில் மிகப்பெரிய வெற்றியை அ.தி.மு.க. அணி பெறப் போகிறது என்றும் அரசியல் நோக்கர்கள் கூறுகிறார்கள். எந்த நேரத்தில் அழகிரி இந்த தேர்தலில் அ.தி.மு.க. காணாமல் போகும் என்று சொன்னாரோ அது அவர்களுக்கே வந்து வந்து விட்டது.
தானும் கழகமும் இதுவரை இதுமாதிரியான சூழ்நிலையை சந்தித்தது இல்லையென்று தீர்மானத்தில் கருணாநிதி புலம்பியுள்ளார். உண்மைதான் இதைவிட அதிகமான அனுபவமும் இனி அவருக்கு கிட்டும்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
சூப்பர் சாஃப்ட் இட்லி1 day 6 hours ago |
உருளைக்கிழங்கு முட்டை ரெசிபி5 days 5 hours ago |
ரவா பர்பி1 week 1 day ago |
-
பாராளுமன்ற தேர்தல்: புதுச்சேரி மற்றும் தமிழ்நாட்டில் இன்று ஒரேகட்ட வாக்குப்பதிவு: விளவங்கோடு சட்டசபை தொகுதிக்கும் இடைத்தேர்தல்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் 39 தொகுதிகளிலும் மற்றும் புதுச்சேரியில் இன்று ஒரேகட்டமாக பாராளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு நடைபெறவுள்ளது.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 18-04-2024.
18 Apr 2024 -
தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்கு: அண்ணாமலைக்கு பிரதமர் நரேந்திர மோடி பாராட்டு
18 Apr 2024புதுடெல்லி, தமிழகத்தில் பா.ஜ.க.வை வலுப்படுத்த முக்கிய பங்காற்றியதாக அண்ணாமலைக்கு பிரதமர் மோடி பாராட்டு தெரிவித்துள்ளார்.
-
நடிகை ஷில்பா ஷெட்டியின் ரூ. 98 கோடி சொத்துகள் முடக்கம்: அமலாக்கத்துறை நடவடிக்கை
18 Apr 2024புது டெல்லி, பிரபல பாலிவுட் நடிகை ஷில்பா ஷெட்டி மற்றும் அவரது கணவர் ராஜ் குந்த்ராவுக்கு சொந்தமான புனே பங்களா மற்றும் பங்கு பத்திரங்கள் உட்பட, 97.79 கோடி ரூபாய் மதிப்பில
-
புதுவை வாக்குச்சாவடியில் தாமரை பூ வடிவில் அலங்காரம்: தேர்தல் அதிகாரிகள் அகற்றினர்
18 Apr 2024புதுச்சேரி, புதுச்சேரி பாகூரில் உள்ள வாக்குச்சாவடி ஒன்றில் தாமரைப் பூ வடிவிலான அலங்காரம் அமைக்கப்பட்டிருந்தது.
-
பார்லி. தேர்தல்: சென்னையில் இருந்து ஒரே நாளில் 1.48 லட்சம் பேர் சிறப்பு பஸ்களில் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி சென்னையில் இருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பேர் சொந்த ஊர்களுக்கு பயணம் செய்துள்ளதாக போக்குவரத்து துறை தெரிவித்துள்ளது.&nbs
-
அமேதி தொகுதியில் இந்த முறை போட்டியிட தயங்குகிறார் ராகுல்: கேரள பிரச்சாரத்தில் ராஜ்நாத் சிங் விமர்சனம்
18 Apr 2024திருவனந்தபுரம், கடந்த முறை அமேதி தொகுதியில் தோல்வியடைந்த காரணத்தால் ராகுல் காந்தி இந்த முறை அங்கு போட்டியிடத் தயங்குகிறார் என்று கேரளாவில் நடந்த பிரச்சாரத்தின் போது
-
உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியல்: 4 இந்திய ஏர்போர்ட்டுகளுக்கு இடம்
18 Apr 2024புது டெல்லி, உலகின் சிறந்த 100 விமான நிலையங்கள் பட்டியலில் 4 இந்திய ஏர்போர்ட்டுகள் இடம்பிடித்துள்ளன.
-
இன்று வேட்புமனு தாக்கல் செய்கிறார் அமித்ஷா: காந்திநகர் தொகுதி ரோடுஷோவில் தொண்டர்கள் பிரம்மாண்ட வரவேற்பு
18 Apr 2024ஆமதாபாத், மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா இன்று வேட்புமனுத் தாக்கல் செய்கிறார்.
-
தமிழ்நாட்டில் இன்றும் 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்: சென்னை வானிலை மையம் தகவல்
18 Apr 2024சென்னை, தமிழகத்தில் இன்று 108 டிகிரி பாரன்ஹீட் வெயில் கொளுத்தும்' என சென்னை வானிலை மையம் தகவல் தெரிவித்துள்ளது.
-
வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை?
18 Apr 2024சென்னை, வாக்காளர் அடையாள அட்டை தவிர்த்து வாக்களிக்கத் தகுதியான 12 ஆவணங்கள் எவை எவை? என்பது குறித்து தேர்தல் ஆணையம் விளக்கமளித்துள்ளது.
-
விழிப்போடு செயல்பட வேண்டும்: தி.மு.க. வாக்குச்சாவடி முகவர்களுக்கு முதல்வர் மு.க. ஸ்டாலின் வேண்டுகோள்
18 Apr 2024சென்னை, வாக்குச்சாவடி முகவர்கள் விழிப்போடு செயல்பட வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்
-
பாராளுமன்ற தேர்தல்: பேருந்தில் இன்று கட்டணமின்றி பயணிக்கலாம்: எங்கு தெரியுமா?
18 Apr 2024சென்னை, கோவை, ஈரோடு, ஊட்டி, திருப்பூர் மண்டலங்களில் வாக்களிக்க செல்லும் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள், மாற்றுத்திறனாளிகள் சாதாரண கட்டண நகரப் பேருந்துகளில் இன்று கட்ட
-
பாராளுமன்ற தேர்தல்: தமிழகத்தில் வாக்குப்பதிவு எந்திரங்கள் அனுப்பும் பணிகள் தீவிரம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் பாராளுமன்ற மக்களவைத் தேர்தல் இன்று நடைபெறவுள்ள நிலையில், வாக்குச் சாவடிகளுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் கொண்டு செல்லும் பணிகள் தீவிரமாக நட
-
ஜாமீனுக்காக வேண்டுமென்றே இனிப்பு சாப்பிடுகிறார் கெஜ்ரிவால்: அமலாக்கத் துறை குற்றச்சாட்டு
18 Apr 2024புது டெல்லி, டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டுள்ள முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் ஜாமீனுக்காக வேண்டுமென்றே மாம்பழங்கள், இனிப்புகள், சர்க்கரை சேர்த்த தேநீர் ஆகியனவற்றை உ
-
பா.ஜ.க. சித்தாந்தங்களை தோற்கடிக்க போகிறோம்: காங். தொண்டர்களுக்கு ராகுல் வேண்டுகோள்
18 Apr 2024புது டெல்லி, பா.ஜ.க.வையும் அவர்களின் சித்தாந்தத்தையும் தோற்கடிக்கப் போகிறோம் என்று காங்கிரஸ் தொண்டர்களுக்கு வேண்டுகோள் விடுத்து தனது டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ள
-
தங்கக் கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேர் கைது
18 Apr 2024கனடா, கனடாவில் ரூ.133 கோடி மதிப்பிலான தங்கக்கட்டிகள் மற்றும் பணத்தை கொள்ளையடித்த ஏர் கனடா ஊழியர்கள் உட்பட 6 பேரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
-
சத்தீஸ்கரில் நான்கு மாதத்தில் 80 நக்சல்கள் சுட்டுக் கொலை
18 Apr 2024ராய்பூர், சத்தீஸ்கரில் இந்தாண்டில் நான்கு மாதங்களில் இதுவரை 80 நக்சல்கள் சுட்டுக் கொல்லப்பட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
-
பாராளுமன்ற தேர்தல்: தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற தேர்தலையொட்டி தமிழகத்தில் உள்ள தியேட்டர்களில் இன்று சினிமா காட்சிகள் ரத்து செய்யப்பட்டுள்ளன.
-
தமிழகத்தில் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார்: தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு விளக்கம்
18 Apr 2024சென்னை, தமிழ்நாட்டில் இன்று நடைபெறும் வாக்குப்பதிவுக்கான அனைத்து ஏற்பாடுகளும் தயார் என தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரதா சாகு தெரிவித்துள்ளார்.
-
மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரம்: ஆகம விதிகள் குறித்து ஒரே நாளில் நீதிபதிகள் முடிவுக்கு வர இயலாது: உயர் நீதிமன்ற மதுரை கிளை கருத்து
18 Apr 2024மதுரை, மீனாட்சி அம்மன் கோவில் செங்கோல் விவகாரத்தில் நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல என்று கருத்து தெரிவித்துள்ள மதுரை ஐகோர்ட், நீதிபதிகள் ஆகம விதி நிபுணர்கள் அல்ல எ
-
பாராளுமன்ற தேர்தல்: ஓட்டு போடுவதற்காக ஜப்பானில் இருந்து சேலம் வந்த வாக்காளர்
18 Apr 2024சேலம், தமிழகத்தில் பாராளுமன்ற மக்களவை தேர்தல் இன்று நடைபெற உள்ள நிலையில், வாக்களிக்க சேலத்தை சேர்ந்த வாக்காளர் ஒருவர் ஜப்பானிலிருந்து தாயகம் திரும்பியுள்ளார்.
-
கள்ளழகர் மீது தண்ணீர் பீய்ச்ச கட்டுப்பாடு: மதுரை கலெக்டர் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதிப்பு
18 Apr 2024மதுரை, கள்ளழகரின் மீது தண்ணீர் பீய்ச்ச முறையாக பதிவு செய்து முன் அனுமதி பெற வேண்டும் என்ற மதுரை கலெக்டரின் உத்தரவுக்கு ஐகோர்ட் கிளை தடை விதித்துள்ளது.
-
4-ம் கட்ட பார்லி. தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் துவங்கியது
18 Apr 2024புது டெல்லி, பாராளுமன்ற தேர்தலின் 4-ம் கட்ட தேர்தலுக்கான வேட்புமனு தாக்கல் நேற்று தொடங்கியது.
-
பாராளுமன்ற தேர்தல்: வாக்களிப்பதற்கு சென்னையிலிருந்து ஒரேநாளில் 1.48 லட்சம் பேர் பயணம்
18 Apr 2024சென்னை, பாராளுமன்ற மக்களவைத் தேர்தலை முன்னிட்டு வாக்களிக்க சென்னையிலிருந்து நேற்று முன்தினம் ஒரே நாளில் 1,48,800 பயணிகள் பயணித்துள்ளனர்.