முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பாகிஸ்தான் ரம்ஜான் தொழுகையில் தீவிரவாதிகள் கார்குண்டு தாக்குதல்: 5 பேர் பலி

வியாழக்கிழமை, 1 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

குவெட்டா,செப்.- 2 - பாகிஸ்தானில் ரம்ஜான் தொழுகை நடந்தபோது மசூதியில் கார் குண்டு மூலம் தீவிரவாதிகள் தாக்குதல் நடத்தினர். இதில் 5 பேர் பலியாயினர். இஸ்லாமிய நெறிகளின் படி நடப்பதாகக் கூறும் தீவிரவாதிகள் ரம்ஜான் தொழுகையில் நடத்திய தாக்குதலில் அப்பாவி இஸ்லாமியர்களுக்கு அதிர்ச்சி அளிப்பதாக உள்ளது. பாகிஸ்தானில் நேற்று முன்தினம் ரம்ஜான் பண்டிகை கொண்டாடப்பட்டது. அங்குள்ள குவெட்டா நகரில் உள்ள குலிஸ்தான் பகுதியில் சிறப்பு தொழுகை நடந்தது. அதில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். தொழுகை முடிந்து மக்கள் வெளியே வந்தனர். அப்போது அங்கு நிறுத்தியிருந்த ஒரு காரில் டமார் என்ற பயங்கர சத்தத்துடன் குண்டு வெடித்தது. இதில் கார் சுக்கு நூறாக உடைந்தது. கரும் புகையுடன் தீப்பிடித்து எரிந்தது. இந்த சம்பவத்தில் 5 பேர் உயிரிழந்தனர். 10 பேர் படுகாயமடைந்தனர். அவர்கள் அனைவரும் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்றுவருகின்றனர். குண்டு வெடிப்பில் அங்கு நிறுத்தியிருந்த 14 கார்கள் தீப்பிடித்து எரிந்தன. மேலும் அருகே இருந்த வீடும் இடிந்து சேதமடைந்தது. மேலும் இந்த தாக்குதலுக்கு இதுவரை எந்த தீவிரவாத அமைப்பும் பொறுப்பேற்க வில்லை. ஆனால் தலிபான்கள் மற்றும் பலோச் தீவிரவாதிகளின் சதிச் செயல் என கருதப்படுகிறது. இச்சம்பவம் ஒரு திட்டமிட்ட சம்பவம் என போலீசார் தெரிவித்துள்ளனர். குண்டு வெடிப்பை தொடர்ந்து குவெட்டா  நகரில் பலத்த பாதுகாப்பு போடப்பட்டுள்ளது

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்