முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

தீவிர அரசியலில் குதிப்பேன் முன்னாள் கவர்னர் பர்னாலா

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

சண்டீகார்,செப்.- 4 - தீவிர அரசியலில் குதிக்கப்போவதாக முன்னாள் கவர்னர் சுர்ஜித் சிங் பர்னாலா தெரிவித்துள்ளார். தமிழ்நாடு கவர்னராக இருந்தவர் சுர்ஜித் சிங் பர்னாலா. இவரது பதவிக்காலம் கடந்த மாதம் முடிந்ததையொட்டி தமிழகத்தின் புதிய கவர்னராக ஆந்திர முன்னாள் முதல்வர் ரோசய்யா பொறுப்பேற்றுள்ளார். பதவிக்காலம் முடிந்து சில தினங்களுக்கு முன்பு சென்னையில் இருந்து தனது சொந்த மாநிலமான பஞ்சாப்புக்கு திரும்பினார் பர்னாலா. இவர் பஞ்சாப் மாநில முதல்வர் பிரகாஷ் சிங் பாதலின் நெருங்கிய நண்பராக இருந்தவர். சொந்த மாநிலம் திரும்பிய பர்னாலா செய்தி நிறுவனம் ஒன்றுக்கு பேட்டி அளித்தார். அப்போது கூறிய அவர் பஞ்சாபில் அடுத்தாண்டு துவக்கத்தில் சட்டமன்ற தேர்தல் வருவதால் தாம் தீவிர அரசியலில் குதிக்கப்போவதாக தெரிவித்தார். சிரோண்மணி அகாலிதளம் லோங்கோவால் பிரிவை இவரது மனைவியும் கட்சி தலைவருமான சுர்ஜித் கவுர் கவனித்து வருகிறார். இவரது மகன் ககனாஜித் சிங் இருவரும் முன்னாள் எம்.எல்.ஏ.க்கள். இவர்கள் இருவரும் வரவிருக்கும் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடுவார்கள் என்றும் பர்னாலா தெரிவித்தார். தற்போதைய அரசியல் நிலவரத்தை ஆய்வு செய்ய தாம் முயன்று வருவதாகவும் ஒரு 3-வது மாற்று அணியை உருவாக்கப்போவதாகவும் பர்னாலா தெரிவித்தார். பல தலைவர்கள் என்னோடு தொடர்பு கொண்டு வருகிறார்கள். மாநிலம் முழுவதும் சுற்றுப்பயணம் செய்து எனது ஆதரவாளர்களையும் நண்பர்களையும் சந்திப்பேன். பிறகு ஒரு முடிவுக்கு வருவேன் என்றும் அவர் தெரிவித்தார்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்