முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெங்களூரில் இருந்து புறப்பட்ட ஜெட்விமானம் மும்பையில் அவசரமாக தரையிறங்கியது

ஞாயிற்றுக்கிழமை, 4 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

மும்பை,செப்.- 4 - பெங்களூரில் இருந்து புறப்பட்டு சென்ற ஜெட்விமானம் அவசரமாக மும்பை விமான நிலையத்தில் தரையிறங்கியது. பெங்களூரில் இருந்து நேற்று ஜெட் விமானம் 127 பயணிகளுடன் மும்பைக்கு புறப்பட்டு சென்றது. அந்த விமானத்தில் ஹைட்ராலிக் கட்டுப்பாட்டில் திடீரென்று கோளாறு ஏற்பட்டது. இதனால் மும்பையில் உள்ள உள்நாட்டு சாந்த குரூஸ் விமான நிலையத்தில் அந்த ஜெட் விமானம் நேற்று 12.22 மணிக்கு அவசரமாக தரையிறக்கப்பட்டது. அதிலிருந்த பயணிகள் அனைவரும் பத்திரமாக தரையிறக்கப்பட்டனர். இதேமாதிரி கடந்த 27-ம் தேதி அன்று மும்பை விமானத்தில் ஒரு பயணிகள் விமானம் திடீரென்று அவசரமாக தரையிறங்கியது. இதுவும் தொழில்நுட்ப கோளாறுதான் காரணமாகும். இதனால் மும்பை விமானத்தில் விமான போக்குவரத்து பாதித்தது. அந்த இரண்டு விமானங்களையும் சரிபார்க்கும் பணி தீவிரமாக நடந்து வருகிறது. ஏற்கனவே நியூயார்க்கில் பூகம்பம் ஏற்பட்டதால் மும்பையில் இருந்து அமெரிக்காவுக்கு செல்லும் விமானங்கள் போக்குவரத்தும் பாதித்தது என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் மும்பையில் உள்ள சத்திரபதி சிவாஜி சர்வதேச விமான நிலையத்தில் துருக்கி நாட்டு விமானம் டாக்சிவேயில் மோதியதால் விமான நிலையத்தின் பிரதான ஓடுபாதை மூடப்பட்டுள்ளது. இதனால் அந்த விமான நிலையத்திலும் நேற்றுமாலை வரை விமான போக்குவரத்து பாதித்தது. இதற்கிடையில் மும்பையில் இடைவிடாது கனமழை பெய்து வருகிறது.
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்