முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மும்பையில் கனமழை 5 பேர் உயிரிழப்பு

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

புது டெல்லி,செப்.- 5 - மும்பை நகரில் கனமழை பெய்து வருவதை தொடர்ந்து சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்தனர்.  விமானம், ரயில், சாலை போக்குவரத்து வெகுவாக பாதிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து கொட்டும் மழையால் மக்கள் தங்கள் அன்றாட பணிகளில் ஈடுபட முடியவில்லை. மும்பையில் இருந்து கிளம்ப வேண்டிய பல விமானங்கள் ரத்து செய்யப்பட்டுள்ளன. மும்பையில் தரையிறங்க வேண்டிய விமானங்களும் வேறு இடங்களுக்கு திருப்பி அனுப்பப்பட்டன. தெற்கு மும்பை பகுதியில் மழையால் சுவர் இடிந்து விழுந்தது. இதில் 5 பேர் உயிரிழந்தனர். மும்பை தவிர மகராஷ்டிரத்தில் வேறு சில மாவட்டங்களிலும் கனமழை பெய்துள்ளது. ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டுள்ளது. உத்தரபிரதேச மாநிலத்தில் மழை பெய்து வருகிறது. இதனால் பல ஆறுகளில் வெள்ளம் ஏற்பட்டுள்ளது. ராஜஸ்தான் மாநிலத்திலும் மழை தொடங்கியுள்ளது. கடந்த சில நாட்களாக வெயில் அதிகமாக இருந்த தலைநகர் டெல்லியிலும் கனமழை பெய்ததை தொடர்ந்து டெல்லி குளிர்ந்தது.  
 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்