முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சிகிச்சைக்காக வரிசையில் காத்திருந்த முதலமைச்சர்

திங்கட்கிழமை, 5 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

போபால், செப்.- 5 - மத்திய பிரதேச மாநில முதல்வர் சிவராஜ்சிங் சவுகான். மருத்துவமனையில் சிகிச்சை பெற வந்த இவர் நோயாளிகளுடன் வரிசையில் நின்று சிகிச்சை பெற்றார். மத்திய பிரதேச மாநில முதல்வராக இருப்பவர் சிவராஜ்சிங் சவுகான். இவருக்கு கடந்த 2 நாட்களாக தொண்டையில் வலியால் அவதிப்பட்டு வந்தார். இதற்கு சிகிச்சை பெற வேண்டி போபாலில் உள்ள ஹமீதியா மருத்துவமனைக்கு திடீரென்று சென்றவர், அங்கு நோயாளிகள் காத்திருக்கும் வரிசையில் தானும் சென்று நின்றார். சிறிது நேரத்திற்கு பிறகே வரிசையில் நிற்பவர் தங்களது முதல்வர் என்பது நோயாளிகளுக்கு தெரியவந்தது. இதனை அடுத்து டாக்டர்கள் பரபரப்படைந்து அவரை உடனடியாக அறைக்கு அழைத்து சிகிச்சை செய்ய முற்பட்டனர். ஆனால் முதல்வரோ வரிசையில் நின்ற மற்ற நோயாளிகளை பார்த்த பிறகே தனக்கு சிகிச்சை செய்ய வேண்டும் என்று மறுத்துவிட்டார். இதன் பிறகு வரிசையில் சென்று மருத்துவர்களை சந்தித்த முதல்வர் தனது தொண்டை வலிக்கு சிகிச்சை பெற்றுக்கொண்டார். அதன் பிறகு அந்த மருத்துவமனையிலேயே தனது கண்களை தானம் செய்வதாக எழுதிக் கொடுத்துவிட்டு சென்றார். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்