முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

நீரில் மூழ்கி சிறுவர்கள் 10 பேர் பரிதாப பலி

செவ்வாய்க்கிழமை, 6 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

பாட்னா, செப்.6 - பீகார் மாநிலம் பாட்னாவில் வெவ்வேறு இடங்களில் நடந்த சம்பவங்களில் 10 சிறுவர் சிறுமியர் தண்ணீரில் மூழ்கி உயிரிழந்தனர். ரோட்டா மாவட்டத்தில் உள்ள சோனே ஆற்றில் மூழ்கி விவேக்குமார்(14), ஆகாஷ்குமார்(10), மாண்டுகுமார்(10), ரோகித்குமார்(13) ஆகியோர் இறந்தனர். சிவான் மாவட்டத்தில் பாகா ஆற்றில் குளித்துக்கொண்டிருந்த சகோதரிகளான ரீட்டா(14), சங்கீதா(8), மற்றும் ஊர்மிளா ஆகிய சிறுமிகள் தண்ணீரில் அடித்துச் செல்லப்பட்டு பலியானார்கள். அதேபோல் பங்கா மாவட்டத்தில் குளத்தில் மூழ்கிய சகோதரர்கள் இருவரும், ஜகானாபாத்தில் 8 வயது சிறுமியும் குளத்தில் தவறி விழுந்து இறந்தனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்