முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

மேலூர் அருகே கோர விபத்து கார் -லாரி மோதல் 3 பேர் பலி

ஞாயிற்றுக்கிழமை, 6 மார்ச் 2011      தமிழகம்
Image Unavailable

 

மதுரை,மார்ச்.- 6 - மேலூர் அருகே நேற்று காலை காரும் லாரியும் மோதிக் கொண்ட விபத்தில் தூத்துக்குடியை சேர்ந்த தொழிலதிபர் உள்பட 3 பேர் பலியானார்கள்.  தூத்துக்குடி ஈ.வி.ரோடு பகுதியை சேர்ந்தவர் சதீஷ்(இவர் 30). இவர் அதே பகுதியில் சரஸ்வதி டிரேடர்ஸ் என்ற பெயரில் டைல்ஸ் நிறுவனம் நடத்தி வந்தார். இவரது மனைவி இசக்கிதேவி (27), இவர்கள் இருவரும் சென்னையில் உறவினர் வீட்டு துக்க நிகழ்ச்சியில் கலந்து கொள்வதற்காக நேற்று அதிகாலை தூத்துக்குடியில் இருந்து தங்களுக்கு சொந்தமான காரில் புறப்பட்டனர். அந்த காரை தூத்துக்குடி அழகேசபுரத்தை சேர்ந்த டிரைவர் பாபுசங்கர் ஓட்டி வந்தார். 

இந்த நிலையில் காலை 9 மாணியளவில் அந்த கார் மதுரை மாவட்டம் மேலூர் 4 வழிச்சாலையில் உள்ள போலீஸ் சோதனை சாவடி அருகே வந்து கொண்டிருந்தது. அதே சமயம் கச்சிராயன்பட்டியில் இருந்து மேலூர் நோக்கி பாரம் ஏற்றுவதற்காக லாரி ஒன்று சென்றது. அதில் சுமை தூக்கும் தொழிலாளர்கள் 14 பேர் இருந்தனர். சோதனை சாவடியை ஒட்டி லாரி திரும்ப முயன்றபோது அந்த வழியாக வேகமாக வந்த கார் மீது மோதியது.

மோதிய வேகத்தில் கார் லாரிக்கு அடியில் சிக்கிகொண்டது. மேலும் கட்டுப்பாட்டை இழந்த லாரி சுமார் 100 மீட்டர் தூரம் வரை இழுத்து சென்று அங்குள்ள உயர்கோபுர மின்விளக்கு கம்பத்தில் மோதி நின்றது. இந்த கோர விபத்தில் காரில் பயணம் செய்து தொழிலதிபர் சதீஷ், அவரது மனைவி இசக்கிதேவி,டிரைவர் பாபுசங்கர் ஆகிய 3 பேரும் காருக்குள்ளேயே உடல் நசுங்கி பலியானார்கள். விபத்து பற்றி தகவல் கிடைத்தும் சம்பவ இடத்திற்கு மேலூர் போலீசார் மற்றும் மீட்புக்குழுவினர் விரைந்து சென்றனர். சுமார் 1 மணி நேர போராட்டத்திற்கு பிறகு லாரிக்கு அடியில் சிக்கி இருந்த காரை பொக்லைன் எந்திரம் மூலம் மீட்டனர். பலியானவர்களின் உடல் பிரேத பரிசோதனைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் இந்த விபத்தில் லாரியில் பயணம் செய்த 14 பேரும் காயமடைந்தனர். அவர்களும் சிகிச்சைக்காக மதுரை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டனர். 

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்