முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

சோமாலியாவில் தினமும் 100 பேர் பலியாகும் சோகம்

புதன்கிழமை, 7 செப்டம்பர் 2011      உலகம்
Image Unavailable

நைரோபி,செப்.7  - தெற்கு சோமாலியாவில் மொத்தமுள்ள 8 பிராந்தியங்களில் 6 பிராந்தியங்களுக்கு பட்டினி கொடுமை பரவியுள்ளது. 7 லட்சத்து 50 ஆயிரம் பேர் இப்பகுதிகளில் மக்கள் பட்டினியால் வாடுகிறார்கள். ஒவ்வொரு நாளும் நூற்றுக்கணக்கான மக்கள் பட்டினி கொடுமைக்கு பலியாகி வருகிறார்கள். இத்தகவலை ஐ.நா. சபை தெரிவித்துள்ளது.
பே பிராந்தியம் முழுவதுமே பஞ்சப் பகுதியாக அறிவிக்கப்பட்டுள்ளது. இத்தகவலை சோமாலியாவுக்கான ஐ.நா. ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார். 53 சதவீத மக்களால் தங்கள் உணவு தேவையை பூர்த்தி செய்ய முடியவில்லையாம். அதனால்தான் தினந்தோறும் நூற்றுக்கணக்கானோர் பட்டினியால் மடிகிறார்கள். அவர்களில் பாதிப் பேர் குழந்தைகள் என்பதுதான் வேதனைக்குரிய விஷயம்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்