Idhayam Matrimony

கண்தானம் செய்த பிரதமர் மற்றும் அவரது மனைவி

வெள்ளிக்கிழமை, 9 செப்டம்பர் 2011      இந்தியா
Image Unavailable

 

புது டெல்லி,செப்.9 - கண்தான நாள் நேற்று அனுசரிக்கப்பட்டது. இந்தியாவில் 45 லட்சம் மக்கள் பார்வை குறைபாடுடன் உள்ளனர். 3 லட்சம் பேர் கண்தானம் செய்ததன் மூலம் பார்வை பெற்றுள்ளனர். நாடு முழுவதும் 400 கண் வங்கி அமைப்புகள் செயல்படுகின்றன. கண்தானம் செய்வதன் மூலம் பார்வையற்றோருக்கு மீண்டும் பார்வை கிடைக்கும் என்பதை வலியுறுத்தி கண்தான அமைப்புகள் சார்பில் நாடு முழுவதும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடைபெற்றன. 

கண்தான நாளையொட்டி டெல்லியில் பிரதமர் மன்மோகன்சிங், அவரது மனைவி குர்சரண்சிங் ஆகியோர் கண்தானம் செய்தனர். இதற்கான உறுதிமொழி படிவத்தில் இருவரும் கையெழுத்திட்டனர்.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்