முக்கிய செய்திகள்
Idhayam Matrimony

பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார்

சனிக்கிழமை, 10 செப்டம்பர் 2011      தமிழகம்
Image Unavailable

 

சென்னை, செப்.10 - வருகிற 17-ந் தேதி 131-ம் பிறந்தநாளையொட்டி சென்னையில் பெரியார் சிலைக்கு ஜெயலலிதா மாலை அணிவிக்கிறார். இதுகுறித்து அ.தி.மு.க. தலைமை நிலையம் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பகுத்தறிவு பகலவன் தந்தை பெரியாரின் 131 வது பிறந்த நாளான 17-ந் தேதி சனிக்கிழமை அன்று காலை 10.45 மணிக்கு சென்னை அண்ணா மேம்பாலம் அருகே அமைந்துள்ள தந்தை பெரியார் சிலைக்கு அ.தி.மு.க. பொதுச் செயலாளரும், தமிழக முதல்வருமான ஜெயலலிதா மலர் தூவி மரியாதை செலுத்த உள்ளார். 

இந்த நிகழ்ச்சியில் தலமை நிலைய நிர்வாகிகளும், அமைச்சர் பெருமக்களும், அ.தி.மு.க. நாடாளுமன்ற, சட்டமன்ற உறுப்பினர்களும், எம்.ஜி.ஆர். மன்றம், ஜெயலலிதா பேரவை, எம்.ஜி.ஆர். இளைஞர் அணி, மகளிர் அணி, மாணவர் அணி, அண்ணா தொழிற்சங்கம், வழக்கறிஞர் பிரிவு, விவசாய பிரிவு, சிறுபான்மை பிரிவு, இலக்கிய அணி, அமைப்பு சாரா ஓட்டுநர்கள் அணி, இளைஞர் பாசறை- இளம்பெண்கள் பாசறை மற்றும் அ.தி.மு.க.வின் பல்வேறு அமைப்புகளை சேர்ந்த நிர்வாகிகளும், உள்ளாட்சி அமைப்பு பிரதிநிதிகளும் கலந்து கொள்வார்கள்.  இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

இதை ஷேர் செய்திடுங்கள்:

Idhayam Matrimony

சித்த மருத்துவ குறிப்புக்கள்