எண்ணெய் மற்றும் இயற்கை எரிவாயுக் கழகத்தில் உள்ள 'கணினி ஆபரேட்டர் மற்றும் நிரலாக்க உதவியாளர்' பணிகளுக்கு காலியிடங்கள் உள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை, செப்.10 - போக்குவரத்துத்துறையில் கே.என்.நேரு முறைகேடுகள் குறித்து அமைச்சர் செந்தில்பாலாஜி ஆதாரத்துடன் அம்பலப்படுத்தினார். நேற்று சட்டசபையில் போக்கு வரத்து துறை மானிய கோரிக்கை மீதான விவாதத்துக்கு பதில் அளித்து அமைச்சர் செந்தில்பாலாஜி பேசியதாவது: முதல்வர் ஜெயலலிதா ஆட்சி வரும் போதெல்லாம் அரசு போக்குவரத்து கழகங்கள் லாபத்தில் இயங்கும். தி.மு.க. ஆட்சி வரும் போதெல்லாம் நஷ்டத்தில் இயங்கும். 91-96 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.142 கோடி லாபம் வந்தது. 96-2001ல் தி.மு.க. ஆட்சியில் ரூ.674 கோடி நஷ்டம் ஏற்பட்டது. மீண்டும் 2001-2006 அ.தி.மு.க. ஆட்சியில் ரூ.61 கோடி லாபம் வந்தது. 2006-2011 தி.மு.க. ஆட்சியில் ரூ.1905 கோடி ரொக்கம் நஷ்டம் ஏற்பட்டது. இதில் போக்குவரத்து துறை அமைச்சராக கே.என். நேரு இருந்த போது, அவரும், அவரது கட்சியினரும் போக்குவரத்து துறை வருமானத்தை மறை முகமாக அவர்களின் சொந்த உபயோகத்துக்கு பயன்படுத்தி வந்துள்ளனர். முதல்வர் ஜெயலலிதா ஆட்சியில் 90 சதவித பஸ்கள் சாதாரண பஸ்களாக இயக்கப்பட்டது. கருணாநிதி ஆட்சியில் கலர் கலராக பெயிண்ட் அடித்து பல வகை பெயர்களில் பஸ்கள் இயக்கினர். இதில் 40 சதவிதம்தான் சாதாரண பஸ்கள். விரைவு போக்குவரத்து கழகத்துக்கு புதிய பஸ்கள் கூட வாங்க வில்லை. அனைத்தும் பழைய பஸ்கள்தன். 1653 கூடுதல் நபர்களை போக்குவரத்து துறையில் நியமனம் செய்தார்கள். தற்காலிக ஓட்டுனர் டிரைவர்களுக்கு எங்கு பணி கொடுப்பது என்று தெரியாமல் அவர்களை ஏலம் விடும் அளவுக்கு நிறுவனம் இருந்தது. காலுக்காக காலணியை வெட்டுவதை விட்டு காலணிக்காக காலை வெட்டினார்கள். நேருவின் தவறான கொள்கை முடிவால் 8 போக்கு வரத்து கழங்கங்களும் தள்ளாடின. நியாயமற்ற பணி நியமனங்கள் தி.மு.க. ஆட்சியில் நடந்துள்ளது. நேர்முக தேர்வுக்கே வராத 40 பேர்களுக்கு வேலை கொடுத்துள்ளனர். உயரம் குறைவு எனச் சொல்லி நேர்முக தேர்வில் நிராகரிக்கப்படும் நபர் கவனிக்க வேண்டியவர்களை கவனித்த பிறகு மருத்துவரிடம் உயரம் சரியாக இருப்பதாக சான்றிதழ் வாங்கி வேலையில் சேர்ந்து இருக்கிறார்கள். இப்போது பார்த்தால் அவர்கள் உயரம் குறைவாக உள்ளது. ஓட்டுனர் நடத்துனர் போன்ற ஊழியர்களை அதிகம் நியமித்ததில் ரூ.70 கோடி கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளது. அரசு போக்கு வரத்து கழக பணத்தை பயன்படுத்தி சொகுசு கார்கள் வாங்கி கே.என். நேரு தனது மனைவி, உறவினர் தேவைக்கு பயன்படுத்தி இருக்கிறார். ஸ்கார்பியோ, பொலிரோ போன்ற 17 சொகுசு கார்களை வாங்கி அவரும் மற்றவர்களும் பயன்படுத்தி உள்ளனர். இதில் அழகிரிக்கு ஒரு கார், பொன்முடிக்கு ஒரு கார், ஐ.பெரியசாமிக்கு ஒரு கார், ஆற்காடு வீராசாமிக்கு 2 கார், முன்னாள் துணை சபாநாயகருக்கு ஒரு கார், கே.என். நேருவுக்கு மட்டும் 8 சொகுசு கார். உயிரை பணயம் வைத்து வேலை செய்யும் தொழிலாளர்களின் பணத்திலும் மக்கள் பணத்திலும் இந்த கார் வாங்கப்பட்டு உள்ளது. இதை ஆடம்பர வாழ்க்கைக்கு பயன்படுத்தியுள்ளனர். ஜவகர்லால் நேரு குழந்தை பருவத்தில் படிக்கும்போது அவர் படிக்கும் பள்ளிக்கூடத்தில் 4 வாசல்களிலும் கார் நிறுத்தப்பட்டு இருக்கும். செல்வந்தரான மோதிலால் நேருவே 4 கார் களைத்தான் பயன்படுத்தியிருக்கிறார். ஆனால் கே.என். நேரு 8 கார்களை பயன்படுத்தியிருக்கிறார். சொகுசு வண்டிகளால் ரூ.5 கோடி பணம் விரயம் ஏற்பட்டுள்ளது. கே.என். நேருவின் வீடு, திருச்சி அலுவலகத்துக்கு வந்து செல்பவர்களுக்காக செலவழிக்கப்பட்ட தொகை ரூ.36 லட்சம் ஆகும். திருச்சி மண்டல போக்குவரத்து கழகம் மூலம் இது செலவழிக்கப்பட்டுள்ளது. விசாரித்ததில் திருச்சியில் உள்ள கே.என். நேரு வீடுதான் அப்போது அலுவலகமாகவும் இருந்தது. ஒவ்வொரு நாளைக்கும் என்னென்ன செலவு செய்தார்கள் என்பது புத்தகமாக தயாரித்துள்ளோம். சவுந்திரராஜன் (மார்க்சிஸ்டு கம்யூனிஸ்டு): கே.என். நேரு செய்த செலவினை கேட்கும்போது, எங்களுக்கு நெஞ்சடைப்பு வந்து விடும்போல் தெரிகிறது. எனவே அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். ஆறுமுகம் (இந்திய கம்யூனிஸ்டு): போக்குவரத் துத்துறை பணத்தை நேருவும் அவரது குடும்பத்தினரும் முழுமையாக செலவழித்துள்ளது தெரிய வந்தது. அவர் தற்போது ஜெயிலுக்குள் இருக்கிறார். நிரந்தரமாக உள்ளே இருக்க அவர் மீது விசாரணை கமிஷன் அமைக்க வேண்டும். அமைச்சர் செந்தில் பாலாஜி: கே.என். நேரு திருச்சிக்கு பக்கத்தில் உள்ள தனது தோட்டத்துக்கு செல்லும்போது ஒரு மணி நேரம் போக்குவரத்தில் சிக்கி கொள்கிறார். உடனே ஒரு உத்தரவு போட்டு இனிமேல் இந்த ரோட்டில் எந்த கனரக வாகனமும் வரக்கூடாது என்கிறார். இதனால் 2 கிலோ மீட்டர் அதிக தூரம் சுற்றி செல்லும் வகையில் வழித்தடங்களில் பஸ்கள் திருப்பி விடப்படுகின்றன. இதனால் அரசுக்கு ரூ.51 லட்சம் விரயமாக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து அலுவலகங்களுக்கு கே.என். நேரு வந்து சென்ற வகையில் ரூ.32 லட்சம் செலவு எழுதியுள்ளனர். ஆனால் கே.என். நேரு அங்கு போனதே இல்லை. பணிமனை, அலுவலகங்களுக்கு சென்றால் வருகை பதிவேட்டில் அது இடம் பெற்று இருக்கும். ஆனால் எதிலும் இல்லை. போகமலேயே வந்து சென்றதாக கணக்கு எழுதி உள்ளார். கே.என். நேரு தனக்கு வேண்டியவர்களுக்கும் தி.மு.க.வினருக்கும் சமூக நலப்பணியாளர்கள் என்ற பெயரில் 540 பேருக்கு பஸ் பாஸ் அந்த துறை மூலம் வழங்கி உள்ளார். இதனாலும் ஆண்டுக்கு பல கோடி நஷ்டம் ஏற்பட்டுள்ளது. தி.மு.க. தொழிற்சங்கத்தில் உள்ளவர்கள் பணிக்கு போகமலேயே நேருவுடன் சுற்றிக்கொண்டு சம்பளம் வாங்கி உள்ளனர். இதனால் அரசுக்கு ரூ.23 கோடி இழப்பு ஏற்பட்டு உள்ளது. போக்கு வரத்து சங்கத்தின் கடன் நிலுவை ரூ.2,017 கோடியாக உள்ளது. மூழ்கும் கப்பலாக போக்குவரத்துத்துறை உள் ளது. மொத்த நஷ்டம் 6,000 கோடி அளவிற்கு கே.என். நேருவின் ஆடம்பர ஊதாரித்தனமான செல்வுகளால் பல கோடி பணம் விரயமாக்கப்பட்டு இழப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. அரசு பணத்தில் கே.என். நேரு செய்த செலவுகள் என்னென்ன என்பதை 2 புத்தகமாகவே அச்சடித்துள்ளோம். இது முதல்அமைச்சரின் அனுமதி பெற்று அனைத்து எம்.எல்.ஏ.க்களுக்கும் கொடுக்க ஏற்பாடு செய்யப்படும். சபாநாயகர் அதை நாட்டுமக்கள் தெரிந்துகொள்ளும் விதத்தில் செய்தியாளர்களுக்கும் அளிக்க வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
இதை ஷேர் செய்திடுங்கள்:
சித்த மருத்துவ குறிப்புக்கள்
வீடியோ
அரசியல்
இந்தியா
சினிமா
ஆன்மிகம்
தமிழகம்
உலகம்
விளையாட்டு
கிட்சன் சமையல் - ருசித்து பாருங்க!!
உருளைக்கிழங்கு டோனட்11 hours 59 min ago |
க்ரஞ்சி சிக்கன் ஸ்டிக்ஸ்4 days 12 hours ago |
சூப்பர் சாஃப்ட் இட்லி1 week 6 hours ago |
-
தங்கம் விலை மீண்டும் உயர்வு
24 Apr 2024சென்னை, சென்னையில் நேற்று ஆபரண தங்கம் விலை சவரனுக்கு ரூ.240 உயர்ந்து ரூ.53.840-க்கு விற்பனையானது.
-
தனியார் பள்ளிகளில் இடஒதுக்கீடு நிறைவேற்றப்படுகிறதா? கண்காணிக்க அரசுக்கு செல்வப்பெருந்தகை கோரிக்கை
24 Apr 2024சென்னை, தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் கல்வி உரிமைச் சட்டப்படி தனியார் பள்ளிகளில் 25 சதவிகித இடஒதுக்கீடு முழுமையாக நிறைவேற்றப்படுகிறதா என்பதை நாள்தோறும் கண்காணித்து உரிய த
-
நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பாஜக தலைவர்களின் பாணி: பிரியங்கா
24 Apr 2024திருவனந்தபுரம், உண்மையான பிரச்சினைகளில் இருந்து நாட்டின் கவனத்தை திசை திருப்புவதே பா.ஜ.க.
-
இன்றைய பெட்ரோல்-டீசல் விலை நிலவரம் – 24-04-2024.
24 Apr 2024 -
சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தல் எதிரொலி: பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு மன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்
24 Apr 2024புதுடெல்லி, சுப்ரீம் கோர்ட் அறிவுறுத்தலை அடுத்து 67 தேசிய செய்தித்தாள்களில் பெரிய அளவில் விளம்பரம் வெளியிட்டு நிபந்தனையற்ற பொதுமன்னிப்பு கோரியது பதஞ்சலி நிறுவனம்.
-
தீர்ப்பு தாமதம்: சுப்ரீம் கோர்ட்டில் ஹேமந்த் சோரன் மனு தாக்கல்
24 Apr 2024புது டெல்லி, பணமோசடி வழக்கில் அமலாக்கத் துறையின் கைது நடவடிக்கையை எதிர்த்து தாக்கல் செய்த மனு மீதான தீர்ப்பை ஐகோர்ட் தாமதப்படுத்துவதாகக் கூறி, ஜார்கண்ட் முன்னாள் முதல்
-
தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம்: கவர்னர் ஆர்.என்.ரவி வாழ்த்து
24 Apr 2024சென்னை, ஒவ்வொரு ஆண்டும் ஏப்ரல் 24-ம் தேதி தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்படுகிறது. அதன்படி நேற்று தேசிய பஞ்சாயத்து ராஜ் தினம் கொண்டாடப்பட்டது.
-
கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த உங்கள் செல்வத்தை காங்கிரஸ் பறித்துவிடும்: சத்தீஷ்கரில் பிரதமர் மோடி பேச்சு
24 Apr 2024புதுடெல்லி, நீங்கள் கஷ்டப்பட்டு உழைத்து சேர்த்த செல்வத்தை உங்கள் பிள்ளைகள் பெறமாட்டார்கள், அதை காங்கிரஸ் கட்சி பறித்துவிடும் என்று சத்தீஷ்கர் மாநிலத்தில் நடந்த கூட்டத்த
-
இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து வடமாநிலங்களில் தேர்தல் பிரசாரம் செய்ய முதல்வர் ஸ்டாலின் திட்டம்
24 Apr 2024சென்னை, இன்டியா கூட்டணி வேட்பாளர்களை ஆதரித்து டெல்லி உள்ளிட்ட மாநிலங்களுக்கு சென்று முதல்வர் மு.க.ஸ்டாலின் பிரசாரம் செய்ய திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
-
வி.வி.பாட் வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கம்:தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை ஒத்திவைத்தது சுப்ரீம் கோர்ட்
24 Apr 2024புதுடெல்லி:வி.வி.பாட் தொடர்பான வழக்கில் தேர்தல் ஆணையம் விளக்கமளித்ததை அடுத்து தேதி குறிப்பிடாமல் தீர்ப்பை சுப்ரீம் கோர்ட் ஒத்திவைத்தது.
-
நீர்மட்டம் தொடர் சரிவு: மேட்டூர் அணை பகுதியில் வெளியே தெரியும் நந்தி சிலை, தேவாலயம்
24 Apr 2024சேலம், மேட்டூர் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து சரிந்து வருவதால் நந்தி சிலை, கிறிஸ்தவ தேவாலயம் முழுவதும் வெளியே தெரிகிறது.
-
போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை உக்ரைனில் 5 லட்சம் ராணுவ வீரர்கள் உயிரிழப்பு: ரஷ்யா
24 Apr 2024மாஸ்கோ, போர் தொடங்கியதில் இருந்து தற்போது வரை 5 லட்சம் ராணுவ வீரர்களை உக்ரைன் இழந்துள்ளதாக ரஷ்யா தெரிவித்துள்ளது
-
பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? இளையராஜா தரப்புக்கு உயர் நீதிமன்றம் கேள்வி
24 Apr 2024சென்னை, இளையராஜா பாடலை பயன்படுத்த விதித்த இடைக்கால தடையை நீக்கக்கோரி நிறுவனங்கள் தொடர்ந்த மேல்முறையீடு வழக்கில் பாடலுக்கு பாடலாசிரியரும் உரிமை கோரினால் என்ன ஆகும்? 
-
கிர்கிஸ்தானில் நீர் வீழ்ச்சியில் விழுந்து இந்திய மாணவர் பலி
24 Apr 2024கிர்கிஸ்தான், கிர்கிஸ்தானில் உள்ள நீர்வீழ்ச்சியில் விழுந்து ஆந்திர மாணவர் பலியானார்.
-
ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம்: மாநில உணவு பாதுகாப்புத்துறை எச்சரிக்கை
24 Apr 2024சென்னை, ஸ்மோக்கிங் பிஸ்கட்டை உட்கொள்ள வேண்டாம் என மாநில உணவு பாதுகாப்புத் துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.
-
கேரளாவில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுப்பு
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், கண்ணூர் மாவட்டம் மட்டன்னூரில் உள்ள ஒரு வயலில் சக்திவாய்ந்த வெடிகுண்டுகள் கண்டெடுக்கப்பட்டுள்ளது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வரு
-
இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும்: முதல்வர் மு.க.ஸ்டாலின் அறிக்கை
24 Apr 2024சென்னை, ஓ.பி.சி., எஸ்.சி./எஸ்.டி. மக்களின் இட ஒதுக்கீட்டை அதிகரிக்க இண்டியா கூட்டணி நடவடிக்கை எடுக்கும் என முதல்வர் மு.க. ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
-
நாளை தேர்தல் நடைபெறவுள்ள நிலையில் மணிப்பூரில் அடுத்தடுத்து குண்டுவெடிப்பு சம்பவம்
24 Apr 2024இம்பால், மணிப்பூரின் 2ம் கட்ட தேர்தல் நாளை நடைபெறவுள்ள நிலையில், அங்கு குண்டு வெடிப்பு சம்பவம் நிகழ்ந்துள்ளது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
-
தென் தமிழகத்தில் இன்று லேசான மழைக்கு வாய்ப்பு: சென்னை வானிலை மையம் தகவல்
24 Apr 2024சென்னை, தென் தமிழகத்தில் இன்று ஓரிரு இடங்களில் லேசான மழைக்கு வாய்ப்பு உள்ளதாக வானிலை மையம் தெரிவித்துள்ளது.
-
கூவாகம் கூத்தாண்டவர் கோயில் தேரோட்டம் கோலாகலம்: ஆயிரக்கணக்கானோர் பங்கேற்பு
24 Apr 2024கள்ளக்குறிச்சி, கள்ளக்குறிச்சி மாவட்டம் பிரசித்தி பெற்ற கூவாகம் கூத்தாண்டவர் கோயிலில் நடைபெற்ற தேரோட்டத்தில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர்.
-
விமான பயணத்தின்போது பெற்றோருக்கு அருகிலேயே குழந்தைகளுக்கு இருக்கை டி.ஜி.சி.ஏ. புதிய உத்தரவு
24 Apr 2024புதுடெல்லி, விமானங்களில் 12 வயது வரையுள்ள குழந்தைகளுக்கு அவர்களின் பெற்றோர் ஒருவருடன் இருக்கை ஒதுக்க வேண்டும் என்று விமான நிறுவனங்களுக்கு விமான போக்குவரத்து தலைமை இயக்க
-
மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகரை கரம் பிடித்தார் அபர்ணா தாஸ்
24 Apr 2024திருவனந்தபுரம், கேரள மாநிலம், வடக்கஞ்சேரியில் மஞ்சுமெல் பாய்ஸ் பட நடிகர் தீபக் பரம்போல்,நடிகை அபர்ணாதாஸ் ஆகியோரது திருமணம் நேற்று நடைபெற்றது.
-
திருச்சி விமான நிலையத்தில், சிங்கப்பூரில் இருந்து நூதனமாக காலணியில் வைத்து தங்கத்தை கடத்தி வந்தவர் கைது
24 Apr 2024திருச்சி, திருச்சி சர்வதேச விமான நிலையத்தில் சிங்கப்பூரிலிருந்து நூதனமாக காலணியில் தங்கத்தை பதுக்கி எடுத்து வந்த நபரை சுங்கத்துறை அதிகாரிகள் கைது செய்தனர்.
-
தமிழ்நாட்டில் ஈரோடு, சேலம் உள்ளிட்ட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் வட உள்மாவட்டங்களில் 5 டிகிரி வரை வெப்பம் உயரும்
24 Apr 2024புதுடில்லி, ஏப். 25- தமிழகத்தில் ஈரோடு, சேலம் உட்பட 15 மாவட்டங்களுக்கு வெப்ப அலைக்கான மஞ்சள் அலர்ட் விடுக்கப்பட்டுள்ளது.
-
பாகிஸ்தான் செல்லுமா இந்தியா?
24 Apr 2024சாம்பியன் டிராபி போட்டி பாகிஸ்தானில் நடப்பதால் இந்திய அணி அங்கு சென்று விளையாட வாய்ப்பு இல்லை என தகவல் வெளியாகி உள்ளது.